இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்ததும் அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்கிறது.
இதனால் எல்லையில் இந்தியப்படை விழிப் புடன் இருந்து கண்காணிக் கிறது. சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் பதட்டமும் அடைந்துள்ளது. இந்தியாவும் தாக்குதல் நடத்துமோ என்று அஞ்சி எல்லையில் படைகளை குவித்துள்ளது.
மேலும் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உள்ள பயிற்சி முகாம்களில் 700 முதல் 800 தீவிரவாதிகள் வரை தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மட்டும் 42 பயிற்சி முகாம்கள் செயல்படுவதை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எந்த நேரத்திலும் காஷ் மீருக்குள் ஊடுருவ காத்து இருக்கின்றனர். இதையடுத்து காஷ்மீர் உள்பட இந்திய எல்லைப் பகுதி மாநிலங்களை உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவார்கள்.
பாகிஸ்தான் சமீபகாலமாக இந்திய எல்லையில் பூஞ்ச் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி ராக்கெட் குண்டுகளையும், நடுத்தர எந்திர துப்பாக்கிகளாலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பயன்படுத்தி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது பாகிஸ்தானில் வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 22, 24, மே 5 ஆகிய தேதிகளில் காஷ்மீர் எல்லையில் இதுபோன்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியது. இதனால் இந்திய ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய செய்திகள்....
- என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா...
- விக்ரம் நடிக்கும் வேந்தன்!
- மே 12ல் திரைக்கு வருகிறது அழகர்சாமியின் குதிரை!
- இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
- மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!
- ரசிகர்கள்தான் எல்லாமே...! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!!...
- அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேட...
- நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்ப...
- பின்லேடனைப்போல் ஐநா அறிக்கையும் கடலில் வீசப்பட்டு...
- ரஜினிகாந்த் குணமடைய ரசிகர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்...
- இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை
- கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட நடிகை ஷெபாலி ஷா
- அத்தனை கண்களும் கங்குலியை நோக்கி!
- ஒசாமா பதுங்கியிருந்த வீடு (படங்கள்)
- இதியாவை தாக்க தயாராகிறது : இந்திய எல்லையில் பாகிஸ்...
- காஷ்மீருக்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார்: மத்த...
- 'பின்லேடன் மரணத்தால் ஆப்பிரிக்காவுக்கு அபாயம்'
- கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக த...
- தேர்தல் முடிவு குறித்து கலக்கத்தில் உள்ளன திமுகவும...
- அல்கொய்தா அமைப்புக்கு ஜவாகிரி தலைவர் ஆகிறார்
- எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடியாது-ர...
- 6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து ...
- ஜெயம் ரவி வெப்சைட் : வாரம் ஒரு முறை லைவ் சாட்டிங்
- அன்னா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு
- கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு
- புதிய ஒசாமா பின்லேடன் வீடியோ பதிவை வெளியிட்டது அமெ...

No comments:
Post a Comment