விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, May 8, 2011

    கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு


    முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி:- ``மம்தாவுக்கு வால்பிடிக்கும் ஊடகங்கள்'' என்று தலைப்பிட்டு, நேற்று (6.5.2011) `தீக்கதிர்' நாளேட்டில் வெளிவந்த தலையங்கத்தைப் பார்த்தீர்களா?

    பதில்:- பார்த்தேன். பார்த்தவுடன் எனது நினைவுக்கு வந்ததெல்லாம்; ``தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும், காய்ச்சலும்'' என்ற பழமொழிதான்.

     அந்தத் தலையங்கத்தில், ``மேற்கு வங்கத்திலுள்ள பெரும்பாலான ஊடகங்கள், இடது முன்னணிக்கு எதிராக நாள்தோறும் விஷம் கக்கி வருகின்றன.

    பெரு முதலாளிகளின் ஊது குழலாகத் திகழும் இந்த ஊடகங்கள், செய்தி என்ற போர்வையில், நாள்தோறும் மக்களைக் குழப்பும் வகையிலும், திரித்தும், கலகம் விளைவிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன'' என்று ஊடகங்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்கள்.

    எப்போதுமே கம்யூனிஸ்ட்டுகள், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு அளவுகோலையும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறொரு அளவுகோலையும் கடைப்பிடிப்பார்கள். கழகத்தின்மீது ஒரு துரும்பு விழுந்தால்கூட, துள்ளிக் குதித்துக் கொண்டு, அதனைத் தூணாக்கி, மக்கள் மத்தியில் கழகத்திற்கும், கழகத்தின் தலைமைக்கும், கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஒருசில ஏடுகளும், ஊடகங்களும் ஈடுபட்டு வருவதை நாம் கண்டிக்கும்போது; அதனைக் கண்டும் காணாமலும்- சில சமயங்களில் நம் மீதே பாய்ந்து பிராண்டிக் கொண்டும் இருப்பவர்கள் தான்; இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள்.

     நம்மை யார் தாக்கி எழுதினாலும், அது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்யாக இருந்தாலும், அது பத்திரிக்கை தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிரானதாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு வெல்லப் பாகாய் இனிக்கும்; ஆனால், அவர்களை யாராவது தாக்கி எழுதினால், அது வேம்பாய்க் கசக்கும்.

    சில ஏடுகளும், ஊடகங்களும்- `நடுநிலை' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு, செய்யும் சேட்டை விமர்சனங்களும், எழுதும் கட்டுரைகளும், கற்பனையாகவும் - செயற்கையாகவும் உற்பத்தி செய்து பரப்பும் விஷமச் செய்திகளும், தாங்கொணாதவை. சில ஏடுகளும், ஊடகங்களும்- ``புலன் விசாரணை'' என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை; அவை `பிராசிகியூட்டர்' வேடம் அணிந்துகொண்டு, குற்றப்பத்திரிக்கை வாசிப்பதையும்;

    `நீதிபதி' வேடம் போட்டுக் கொண்டு, தீர்ப்பு எழுதுவதையும்; அவற்றால் படிப்பவர்களின் ரசனை பெரும் பாதிப்புக்குள்ளாகி, தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு, பண்பாடும், நாகரிகமும் படுபாதாளம் நோக்கிச் செல்வதையும்; இதையெல்லாம் ஜனநாயக மரபுகள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதையும்; நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு.

     எனினும், நமது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது; இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கிறது. நமது மக்களின் கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் சராசரியாகவே இருக்கிறது. நமது பொருளாதாரமும் தொடர்ந்து மேடுபள்ளங்களைத்தான் சந்தித்து வருகிறது. ஜனநாயகப் பாதையில் நாம் கடந்து வந்திருக்கும் தொலைவோ மிகக்குறைவு; கடக்க வேண்டிய தொலைவோ மிக அதிகம்.

     இந்த நிலையில், நமது நாட்டை அனைத்து முனைகளிலும் கைகொடுத்துத் தூக்கி விடுவதற்கும், மக்களைச் சரியான திசையில் வழிகாட்டுவதற்கும், வளர்ந்துவரும் ஜனநாயகத்தை மேலும் வளர்த்தெடுத்து வளப்படுத்து வதற்கும்; ஏடுகளும், ஊடகங்களும் தமது கடமையினையும், பொறுப்பினையும் உணர்ந்து நெறி தவறாமல் நடக்க வேண்டுமே தவிர; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து, ஜனநாயகத்தைக் காட்டுக்கு அனுப்புவதற்கு, அவை கருவிகளாகப் பயன்பட்டுவிடக் கூடாது.

     கேள்வி:- மத்திய அரசு இயற்றிய வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடியினர்க்கு கழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அடிக்கடி கம்யூனிஸ்ட்டு ஏடுகள் சுட்டிக்காட்டுகின்றனவே?

    பதில்:- அப்படி அவர்கள் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. பழங்குடியினர் மற்றும் மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 என்பது; 29.12.2006 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பன்னெடுங்காலமாக வனங்களில் வாழ்ந்து வருவோரது உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால்; இந்தச்சட்டத்தின்படி, மாநில அரசுகள், பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர்க்கு வன நில உரிமைகளை அங்கீகரித்து, வரையறை செய்து, தீர்வு காணவேண்டும்.

    தமிழக அரசு, மத்திய அரசின் இந்தச் சட்டத்தைச்செயல்படுத்திட, தலைமைச்செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு; ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் தலைமையிலும் மாவட்ட அளவிலான குழு; ஒவ்வொரு வருவாய்க் கோட்ட அலுவலரின் தலைமையிலும் உட்கோட்டக் குழு; என்று மூன்று நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளது.

    மத்திய அரசின் இந்தச்சட்டத்தின்படி, 13.12.2005- க்கு முன்பிருந்தே வனநிலத்தை அனுபவித்து வரும் பழங்குடியினர்; வனங்களில் மூன்று தலைமுறையாக, அதாவது 75 ஆண்டுகளுக்கு குடியிருந்து அனுபவித்து வருவோர்; நில உரிமைப்பட்டா பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மொத்தம் 21 ஆயிரத்து 781 கோரிக்கைகள் வரப்பெற்றன. இவை அனைத்தும் கிராம சபை, உட்கோட்டக் குழு, மாவட்ட அளவிலான குழு ஆகியவற்றால் பரிசீலனை செய்யப்பட்டு; 3 ஆயிரத்து 259 உரிமைப் பட்டாக்கள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.

    பட்டா வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினைப் பெற வேண்டுமென்று, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதால், அந்த உத்தரவினைப் பெறுவதற்கும், ஏற்கனவே இந்தச் சட்டத்தின்கீழ் பட்டா வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை வழங்கியுள்ளதால், அந்தத் தடையாணையை விலக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முடிவுக்கு வந்ததும், வன உரிமைப்பட்டாக்கள் வழங்கப்படும்.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், மாநில கண்காணிப்புக் குழுவினை முறையாக நடத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறார். எனவே, வன உரிமைகள் சட்டத்தைக் கழக அரசு கண்டு கொள்ளவில்லை என்பது, தவறான கூற்றாகும்.

    கேள்வி:- மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறதே?

    பதில்:- உலகத்தின் மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டில் 1000 கோடியைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக மக்கள் தொகை 930 கோடியை எட்டும் என்றும்; 2100-ம் ஆண்டு 1000 கோடியைத் தாண்டும் என்றும் கணித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டில், 170 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

     மேலும், இந்தியாவில், 2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும்; பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும் என்றும்; அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும்; சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

     மக்கள் தொகை குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையையும்; தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையையும்; ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெரும் கவலை ஏற்படுகிறது. இந்த கணிப்புகளையெல்லாம் மத்திய திட்டக்குழு முன்னெச்சரிக்கையாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு, ``வருமுன் காப்பதே அறிவு'' என்பதை நிரூபித்துக் காட்டும் என்று நம்புகிறேன்.

    ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது, உண்பதற்கு ஒரு வாயோடு மட்டும் பிறக்கவில்லை; உழைப்பதற்கு இரண்டு கரங்களோடும் பிறக்கிறான்'' என்ற வாதமும்; வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்'' என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! மக்கள் தொகை பெருகப்பெருக, உழைப்பதற்கான கரங்களும் பெருகுகின்றன. உழைக்கும் கரங்கள் அனைத்தும், உற்பத்தியைப் பெருக்க வேண்டும் - குறிப்பாக உணவு உற்பத்தியையும், அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்குவதற்குத் தேவையான அளவு, வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

    கேள்வி:- கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாளை மத்திய அரசு கொண்டாடுவது குறித்து . . . ?

    பதில்:- தமிழ்க் கீதாஞ்சலி'' என்னும் நூலுக்கு, 29.11.1971 அன்று நான் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:-

    வங்கம் தந்த கவியரசர் தாகூர், கிழக்குக்கும், மேற்குக்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலம் உருவாக்கிய கவிதை மன்னர்; எல்லோரும் காணும் உலகில், எல்லோராலும் காண முடியாத- காணாத, பல்வேறு நுட்பங்களையும், உண்மைகளையும் கண்டுணர்த்திய கவிதைச் செல்வர். அவர் இந்து- முஸ்லிம் ஒற்றுமையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.

     `கீதாஞ்சலி' எனும் கவிதை நூலை முதலில் தனது தாய்மொழியான வங்காள மொழியில் இயற்றி; தாய்மொழியின் மீது தான் கொண்டிருந்த பற்றையும், மதிப்பையும் உலகறியச் செய்து; பின்னர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, `நோபல் பரிசு' பெற்றவர். தாகூர், எனது இதயங்கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர். அவர் இயற்றிய, ``ஜனகணமன'' எனத் தொடங்கும் தேசிய கீதத்தில், `திராவிட' என்னும் கருத்தியலை இணைத்ததற்காகவும்;

    அவரது `கீதாஞ்சலி'யில், `எங்கே நெஞ்சம் அஞ்சுதல் இல்லையோ சிங்கம் எனத்தலை நிமிர்ந்து நிற்குமோ; அறிவின் விடுதலை செறிந்தே உள்ளதோ; உண்மை என்ற மண்ணுள் முளைத்து செஞ்சொற் பூக்கள் எங்கே மலருமோ' - போன்ற `கீதாஞ்சலி' பாடல்களுக்காகவும்; அவரை நான் என்றும் மறவேன்''. அவரது 150-வது பிறந்த நாளை, மத்திய அரசு கொண்டாடுவது, போற்றி, வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.

    இவ்வாறு அறிக்கையில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


    இன்றைய செய்திகள்....


    • என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா...
    • விக்ரம் நடிக்கும் வேந்தன்!
    • மே 12ல் திரைக்கு வருகிறது அழகர்சாமியின் குதிரை!
    • இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
    • மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!
    • ரசிகர்கள்தான் எல்லாமே...! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!!...
    • அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேட...
    • நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்ப...
    • பின்லேடனைப்போல் ஐநா அறிக்கையும் கடலில் வீசப்பட்டு...
    • ரஜினிகாந்த் குணமடைய ரசிகர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்...
    • இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை
    • கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட நடிகை ஷெபாலி ஷா
    • அத்தனை கண்களும் கங்குலியை நோக்கி!
    • ஒசாமா பதுங்கியிருந்த வீடு (படங்கள்)
    • இதியாவை தாக்க தயாராகிறது : இந்திய எல்லையில் பாகிஸ்...
    • காஷ்மீருக்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார்: மத்த...
    • 'பின்லேடன் மரணத்தால் ஆப்பிரிக்காவுக்கு அபாயம்'
    • கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக த...
    • தேர்தல் முடிவு குறித்து கலக்கத்தில் உள்ளன திமுகவும...
    • அல்கொய்தா அமைப்புக்கு ஜவாகிரி தலைவர் ஆகிறார்
    • எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடியாது-ர...
    • 6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து ...
    • ஜெயம் ரவி வெப்சைட் : வாரம் ஒரு முறை லைவ் சாட்டிங்
    • அன்னா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு
    • கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு
    • புதிய ஒசாமா பின்லேடன் வீடியோ பதிவை வெளியிட்டது அமெ...


    Posted by விழியே பேசு... at 7:54 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.