விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, January 27, 2012

    'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே போதும்

    இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!

    இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு!), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.

    இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.

    முதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.

    தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 12 நாட்களைக் கடந்த நிலையில், சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், ஏஜிஎஸ், அபிராமி என குறிப்பிட்ட மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது. சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றை பெரிய அரங்குகள் பரிதாபமாக காற்று வாங்குகின்றன.

    காரணம், மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிகபட்ச சீட் எண்ணிக்கை 300. குறைந்தபட்சம் 100. எஸ்கேப் சினிமாவில் ஒரு தியேட்டரின் மொத்த சீட் எண்ணிக்கை 120. இந்த தியேட்டரிலேயே போனதும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எளிதாக நண்பன் டிக்கெட் கிடைக்கிறது. சில நேரங்களில் ஃபுல்லாகிறது.

    ஆனால் இது பெரிய விஷயமே அல்ல. சிங்கிள் ஸ்கிரீன் அரங்குகளான பிருந்தா, காசி, ஐட்ரீம் போன்றவற்றில் வார நாட்களில் மிகக் குறைந்த கூட்டமே.

    நகருக்குள்ளேயே இந்த நிலை என்றால் புறநகர்களில் கேட்கவே வேண்டாம்.

    நண்பன் வசூல் குறித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை வெளியிடும் 'தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்:

    நண்பன் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்பது மிகப் பெரிய பொய். இந்தப் படம் இன்னும் 30 கோடியைக் கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

    முதல் நாள் சுமாரான கூட்டத்துடன்தான் படம் வெளியானது. முதல் நான்கு நாட்களும் சராசரியாக ரூ 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்தது இந்தப் படம். அதன் பிறகு விழுந்துவிட்டது. நியாயமாக நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் இந்தப் படம் பெரிதாகப் போயிருக்க வேண்டும். ஆனால் நல்ல படம் என பாராட்டப்பட்டும், எதனால் கூட்டம் குறைந்தது என்பது ஆராய வேண்டிய சமாச்சாரம்.

    சென்னையில் படத்துக்கு சுமாராக கூட்டம் வந்துவிட்டால் படம் ஜெயித்துவிட்டது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் நண்பன் வெற்றி, ரெக்கார்டு பிரேக் என்று கூவலாம். அடிவாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பஞ்சாயத்து வைக்கும்போதுதான் உண்மை புரியும்.

    நண்பன் படத்தின் பட்ஜெட் ரூ 65 கோடி. இதில் பாதிக்கு மேல் வசூலித்தாலே பெரிய விஷயம்தான் என்பது இன்றைய நிலவரம். அடுத்த வாரம் மொத்த வசூல் விவரமும் வந்துவிடும். எங்கள் பத்திரிகையிலேயே தியேட்டர்வாரியாக வசூலை வெளியிடவிருக்கிறோம்," என்றார்.

    நீண்ட நாள் ஓட்டத்தின் அடிப்படையில் நண்பன் படம், சூர்யா நடித்த ஏழாம் அறிவின் வசூலைத் தொட்டாலே பெரிய சாதனைதான் என்கிறார் ராமானுஜம்.

    எந்திரனுடன் ஒப்பீடு...

    எந்திரன் வசூலோடு நண்பனை ஒப்பிடப்படுவது குறித்து ஒரு விநியோகஸ்தரிடம் கேட்டதற்கு, "முதலில் எந்திரன் வசூல் பற்றி இவர்களுக்கு ஏதாவது தெரியுமா... அந்தப் படம் முதல் நாளே ரூ 50 கோடிக்குமேல் வசூலித்தது உலகெங்கும். அப்படியிருந்தும்கூட இங்கு சில தியேட்டர்கள் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பியதும் நடந்தது. அந்தப் படத்துக்கு அதுதான் நிலைமை என்றால்... மற்ற படங்களையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?" என்றார் நம்மிடம்.

    வேட்டை எப்படி?

    தமிழ் ரசிகர்கள் யோசிக்கத் தெரியாதவர்கள் என்ற மாபெரும் நம்பிக்கையில் எடுத்த படம் வேட்டை என்கிறார் ராமானுஜம். என்னதான் பொழுதுபோக்கு என்றாலும், குறைந்தபட்ச லாஜிக் கூடவா வேண்டாம் என கேட்கிறார் அவர்.

    இந்தப் படத்தின் வசூல் குறித்துக் கூறுகையில், "இந்தப் படத்தின் வியாபாரத்திலேயே நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரி, விற்றவர் - வாங்கியவரின் பிரச்சினை. படத்தைப் பொறுத்தவரை, இதற்கும் நண்பனுக்கு இணையான விமர்சனங்கள், ஆதரவு மீடியா உலகில் இருந்தது. குறிப்பாக இரண்டு பெரிய பத்திரிகைகள் இந்தப் படங்களை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல வரிந்து கட்டிக் கொண்டு தாங்களாகவே விளம்பரம் செய்து வந்தார்கள்.

    அதுகூட இப்போது கைகொடுக்கவில்லை. வேட்டையால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ 10 கோடி வரை நஷ்டம் வரும் வாய்ப்புள்ளது," என்றார் ராமானுஜம்.

    இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத முக்கிய திரையுலகப் புள்ளி நம்மிடம் கூறுகையில், "நண்பன் பட வசூல் ட்ராப் என்பது உண்மைதான். ஓரளவு நஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது. மற்றபடி வெளியான பொங்கல் படங்களில் நண்பன் பரவாயில்லை என்பதுமட்டும்தான் ஆறுதல். ஆனால் வேட்டையால் பெரிய நஷ்டம். கொள்ளைக்காரன் தப்பான நேரத்தில் வந்து மாட்டிக் கொண்டது," என்றார்.

    கொள்ளைக்காரன்...

    இந்தப் பொங்கலுக்கு வந்த கிராமியப் படம். ஓரளவு யதார்த்தமான படம் என்று பாராட்டப்பட்ட கொள்ளைக்காரனை பெரிய பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    "உண்மைதான். காரணம் வேட்டை, நண்பன் தயாரிப்பாளர்கள் இந்த கொள்ளைக்காரன் வெளியாவதை ரசிக்கவே இல்லை. அவர்களின் மனசுப்படியே பத்திரிகைகள் நடந்து கொண்டன. நியாயமாக இந்த இரு படங்களையும் விட கொள்ளைக்காரன் தரமான படமே. ஆனால் ஓடவில்லை. காரணம் பெரிய படங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தில் இந்த கொள்ளைக்காரன் காணாமல் போய்விட்டது. தனியாக வந்திருந்தால் ஓரளவு தப்பு பண்ணாமல் போயிருக்க வேண்டிய படம் அது," என்றார் ராமானுஜம்.


    திருந்துங்க தயாரிப்பாளர்களே..

    பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்ட கையோடு சில விநியோகஸ்தர்கள் சொன்ன இன்னொரு விஷயம், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் திரும்பத் திரும்ப இப்படி பொய் சொல்லி ஹீரோக்களைக் காப்பாற்றிவிடுகிறார்கள் என்பது. "இந்தப் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டால், ஹீரோவின் இமேஜும் உடையும், சம்பளமும் குறையும். ஆனால் அதைச் செய்யாமல் இப்படி தாங்கிப்பிடித்து மீண்டும் மீண்டும் குனிகிறார்கள்.. அப்புறம் புலம்புகிறார்கள்," என்றனர்!

    தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸிஸ் பரவலாக பேசிக்கொள்ளப்படும் இன்னொரு முக்கியமான விஷயம், மௌனகுரு படம். "இந்தப் பொங்கல் ரிலீஸில் காணாமல் போய்விடும் என்று பலரும் நம்பிய படம் அருள்நிதி நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் வந்த மௌன குரு. ஆனால் ஆச்சர்யம், இன்னும் ஓரளவு ஸ்டெடியாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது..!" என்கிறார்கள்.

    (சரி.. பொங்கலுக்கு மேதை என்றொரு படம் வந்ததே என்று கேட்டதற்கு... "விடுங்க நண்பா பாவம்... பிரஸ் ஷோவுக்கே 20 பேர்தான் வந்தாங்க. இதுல தியேட்டர் நிலவரத்தை கேட்டுக்கிட்டு.." என்றார் சக பத்திரிகை நண்பர் ஒருவர்!)


    Posted by விழியே பேசு... at 7:50 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    2 comments:

    1. anooj777January 27, 2012 at 10:54 AM

      ithu eadru kollum vidayam all. sorry boss.

      ReplyDelete
      Replies
        Reply
    2. karank140January 27, 2012 at 3:35 PM

      dei, potta, baadu, nanban vasool illayaaa, nee nerula paaththiyaada paadu.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.