மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட் சங்க பாதுகாவலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போது வீரர்களின் ஓய்வு அறை நோக்கி ஷாருக்கானும் அவருடன் வலம் வந்த 40 பேர் கோஷ்டியும் நுழைய முயன்றது. இதனை மும்பை கிரிக்கெட் சங்க பாதுகாவலர்களும் நிர்வாகிகளும் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக்கான் ரகளை செய்தார். இதைத் தொடர்ந்து அவர் மும்பை மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
ஷாருக்கான் இப்படி நடந்து கொண்டதற்குக் காரணமே ஓவராக சரக்கு அடித்துவிட்டு வந்ததுதான் என்கின்றனர் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.
ஷாருக்கான் சரக்குப் போட்டுவிட்டு 40 பேருடன் வந்ததுடன் ஆடுகளத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போதுதான் பாதுகாவலர்கள் தடுத்தனர். இதற்காக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை கண்டபடி பேசி தாக்குவது என்பது சரியானது அல்ல என்கிறார் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ரவி ஷாவந்த்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்த உள்ளது. மைதானத்தில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளையும் கிரிக்கெட் வாரியம் ஆய்வு செய்ய இருக்கிறது.
No comments:
Post a Comment