விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, May 18, 2012

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: அடுத்த வாரம் ஆட்டத்தை துவக்குகிறது காங்கிரஸ்


    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அடுத்த வாரம் டில்லியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தரவுள்ள விருந்துக்கு பிறகு தான், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, முக்கிய தலைவர்களுடன் இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தையை, சோனியாவே நடத்துவார் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

    இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த மார்ச் 12ம் தேதி, பார்லிமென்ட் கூடி மார்ச் 30ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா நிறைவேற்றங்கள் என, எல்லா முக்கிய அலுவல்களும் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் செவ்வாய் கிழமையோடு பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையவுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்த கையோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்ட, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


    விருந்து: 

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாம் முறையாக மன்மோகன் சிங் தலைமையில் பதவியேற்று வரும் 22ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் வைத்து விருந்து அளிக்கவுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், இந்த விருந்து நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவத்தை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து தான், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது நிஜ ஆட்டத்தை காங்கிரஸ் துவக்கவுள்ளது.


    வேறு பெயர் இல்லை: 

    காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த ஒரு பெயரையும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்களே முன்னிலையில் இருக்கின்றன. ஊடகங்களில் அடிபடும் இந்த பெயர்களை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல், வெறுமனே ஆழம் பார்த்து வருகிறது. இந்நிலையில், இவர்களைத் தவிர வேறு பெயர்கள் எதுவும் காங்கிரஸ் தரப்பில் இல்லையெனத் தெரிகிறது. காங்கிரஸ் யாரை நிறுத்தினாலும், அந்த நபரை மம்தா பானர்ஜி, முலாயம் சிங், மாயாவதி என, அரசை ஆதரவு தரும் முக்கிய கட்சிகள் ஆதரிக்கும் சூழலே உள்ளது.


    நேரடியாக பேச்சு: 

    எனவே, ஏற்கனவே ஊடகங்களில் அடிபடும் பெயர்களைத் தவிர, புதிதாக வேறு யாராவது ஒருவர் முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஏற்கனவே அரசை ஆதரிக்கும் குட்டிக் கட்சிகளின் தலைவர்கள், சுயேச்சைகள் ஆகியோரை வரவழைத்து நேரடியாக பேசி, ஆதரவை சோனியா கேட்டு முடித்து விட்டார். தி.மு.க., திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகளிடம் பிரதிநிதிகளை அனுப்பி வெள்ளோட்டப் பேச்சை முடித்துள்ள நிலையில், அந்த தலைவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நேரடியாக சோனியாவே நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் அனேகமாக இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    கருணாநிதி வருவாரா? 

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பங்கேற்பர். இம்முறை ஜனாதிபதி தேர்தலும் சேர்ந்து கொண்டுள்ளதால், அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவிர, இந்த விருந்து நிகழ்ச்சிக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி வரும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. உடல்நிலை ஒத்துழைத்தால், அவரது டில்லி விஜயம் சாத்தியமே. தவிர ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவை சென்னைக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பதால், இந்த விருந்து சந்தர்ப்பத்தை வைத்து கருணாநிதி, டில்லி வந்து ராஜாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


    Posted by விழியே பேசு... at 7:45 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.