நான் ஒன்றும் குடிபோதையில் வான்கடே ஸ்டேடிய பாதுகாவலர்களுடன் தகராறு செய்யவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். 5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு கொல்க்ததா அணி உரிமையாளர் ஷாருக்கான் அரங்க பாதுகாவலர்களுடன் குடிபோதையில் தகராறு செய்தார் என்று கூறப்பட்டது. மேலும் அவருக்கு வான்கடே அரங்கில் நுழைய வாழ்நாள் தடைவிதித்து மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இது குறித்து ஷாருக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் போட்டியைப் பார்க்கவே செல்லவில்லை. போட்டியைக் காணச் சென்ற எனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லவே வான்கடே அரங்கிற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த வீரர்களை பாராட்டினேன். அப்போது அங்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அதிகாரிகள் பாதுகாப்பு என்ற பெயரில் எனது குழந்தைகளைப் பிடித்து தள்ளினர். அதைப் பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதுகாவலர்கள் தான் என்னிடம் மோசமாக நடந்தனர். நான் ஒன்றும் குடித்துவிட்டு ரகளை செய்யவில்லை.
குழந்தைகளைப் பிடித்து தள்ளினால் எந்த பெற்றோருக்குத் தான் கோபம் வராது. இப்படித் தான் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றால் அந்த அரங்கிற்கே நான் செல்ல மாட்டேன். இந்த சம்பவத்திற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் தான் என்னிடம் மன்னிப்ப கேட்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment