அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா -2 படம் என்னைக்கு ரிலீஸாகும் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் நயன்தாரா தான் அஜித்துக்கு ஜோடி என்பது கன்ஃபார்ம் செய்யப்பட்டுவிட்டதாம்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்த படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். டாப்ஸி தமிழ் படங்களுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்தது வீணாகவில்லை.
ஒவ்வொரு கேரக்டருக்கும் நடிகர்களை தேர்வு சேய்து கொண்டிருந்த இயக்குனருக்கு அஜித் ஒருவரை சிபாரிசு செய்ததாக தெரிகிறது. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் போலிஸாக நடித்த அஸ்வின் தான் சிபாரிசு செய்யப்பட்ட நபர்.
இதற்கு முன் இது போன்ற செயல்களில் ஆர்வம் செலுத்தாத அஜித் சமீபமாக இது போன்ற அதிரடி செயல்களை செய்து வருகிறார். அஜித்குமாரிடம் இருந்து எந்த பத்திரிக்கையும் எதிர்பாராத மற்றொரு விஷயம்,பில்லா-2 படத்திற்காக அஜித் PRESS MEET வைக்கப்போகிறார் என்ற செய்தி தான்.
அசல் படத்திற்காக 2010-ம் வருடம் பிப்ரவரி மாதம் அஜித் பத்திரிக்கைகளை சந்தித்து பேசியது தான் கடைசி.

No comments:
Post a Comment