விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, July 28, 2012

    அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை காவு கொடுக்கும் பஸ்கள்

    சுருதி... படிப்பில் சுட்டி. சுதியோடு பாடுவது... ஜதியோடு ஆடுவது... எல்லாவற்றிலும் அவள் கெட்டிக்காரி. ஏழு வயதே நிரம்பிய அந்த இளம் பிஞ்சு, பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே கீழே விழுந்து அநியாயமாக பலியாகி போனாள். 

    மரணத்தை தழுவுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தாயை பார்த்து சுருதி போட்ட கடைசி “டாடா” “அம்மா, நான் போகப் போகிறேன்” என்று போட்ட இறுதி டாடாவாக மாறிபோக தாய் பிரியாவும், தந்தை சேதுமாதவனும் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

    வாழ்க்கையின் வாசனையை உணருவதற்கு முன்பே சிலரது அஜராக்கிரதையால் சுருதியின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பதறிப்போனது பெற்றோர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழகமே கதறியது. இதயம் உள்ள எல்லோரது இதயமும் ரணமாய் வலித்தது. அதனால்தான் நீதி தேவதையே (ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம்) தானாக முன்வந்து வழக்கு எழுதி கொலைக்கு சமமானது இது என்று தன் உள்ள குமுறலை வெளியிட்டுள்ளது. 

    தாம்பரம் அருகே நடந்த இந்த கோர விபத்து நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும் போதே வேலூரில் இருந்து வந்த செய்தி நெஞ்சை பிழிகிறது. ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் குமாரின் மகள்கள் சுவேதா (1-ம் வகுப்பு), சுஜிதா (எல்.கே.ஜி.) இருவரும் மாலையில் பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். கையைப் பிடித்துக் கொண்டே பிஞ்சுகள் இரண்டும் வீடு நோக்கி தளர் நடை போட்டார்கள். அதற்குள் டிரைவர் அவசரமாக பஸ்சை கிளப்பியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுஜிதா பஸ் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனாள். 

    வட தமிழ்நாட்டில் குலைநடுங்க வைத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து அடுத்த செய்தி. தீபிகா என்ற 6-ம் வகுப்பு மாணவி பஸ் நிலையத்தில் பஸ் ஏறியபோது தவறி கீழே விழுந்தாள். மாலை நேரத்தில் கூட்டம் இப்படித்தான் மொய்க்கும்... யார் ஏறினால் என்ன? அசட்டுத் தனத்தில் டிரைவர் பஸ்சை கிளப்பியதால் பஸ் சக்கரத்தில் தீபிகா அநியாயமாக உயிர் இழந்தாள். 

    அடுத்தடுத்து அநியாயமாக பறிக்கப்பட்ட இந்த 3 இளந்தளிர்களின் உயிரும் மீண்டும் வரப் போவதில்லை. ஆனால் முடிந்துபோன இந்த சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறதே? எத்தனை ஆசைகள்? கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கிறோம்!. பள்ளிக்கு அனுப்புகிறோம். கடவுளுக்கு நிகராக குருவையும் (ஆசிரியரையும்) கோவிலாக கல்வி கூடங்களையும் நினைத்துத்தானே குழந்தைகளை அனுப்புகிறார்கள். பெற்றோர்களைவிட பள்ளியில்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறது. அவர்களை பெற்ற தாயைவிட கவனமாக பேணி காக்கும் கடமை பள்ளிகளுக்கு உண்டல்லவா?

    ஆனால் அந்த கடமையை பள்ளிகள் சரிவர செய்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி. பள்ளி வளர்ச்சி கட்டணம், கல்வி கட்டணம், பஸ் கட்டணம் என்று பல கட்டணங்களில் குறியாக இருக்கும் பள்ளிகள் மாணவர் நலனிலும் குறியாக இருக்க வேண்டுமல்லவா? ஏதாவது பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்களே! பணம் மனிதாபிமானத்தையும் சாப்பிட்டு விட்டதா? பஸ் ஓட்டை வழியாக சிறுமி சுருதி விழுந்து பலியானாள் என்றதும் பஸ் உரிமையாளர் மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்தது சீயோன் பள்ளி நிர்வாகம். 

    ஆனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆப்பு வைத்து விட்டனர். இனி வழக்கு நடக்கும். தீர்ப்பு வரும். இந்த 3 இளம் பிஞ்சுகளின் உயிரோடு இந்த சோக அத்தியத்துக்கு முடிவுரை எழுதுவோம் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும். 

    எனவேதான் ஐகோர்ட்டும் பல சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தர விட்டுள்ளது. சட்டங்கள் தவறு செய்பவர்களை தண்டிக்கலாம். ஆனால் தவறு செய்யாமல் இருப்பது பல உயிர்களை காக்கும். இந்த களேபரத்துக்கு இடையேயும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஒரு பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    பள்ளி பஸ்களை தினமும் பள்ளி நிர்வாகம், பஸ் டிரைவர், பஸ் உரிமையாளர்கள் பார்வையிட வேண்டும். சுருதியை காவு வாங்கி பஸ்சை 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள்ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கி இருப்பது வெட்கக்கேடான விஷயம். 

    தகுதி சான்று வழங்கும் அதிகாரிகள் தகுதி இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும். பணத்துக்காக தன் தகுதியை இழந்து விடக்கூடாது. அவரவர் கடமையை ஒவ்வொருவரும் சரிவர செய்தால் இந்த அவலங்கள் அரங்கேறாது. அன்பு மகள் சுருதியை பறிகொடுத்த சேதுமாதவன் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். 

    சுருதி விபத்தில் சிக்கிக் கொண்டாள் என்ற தகவலை அறியும்போது சேதுமாதவன் தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சவாரி சென்று கொண்டிருந்தார். அந்த இக்கட்டான நேரத்திலும் பதட்டப்படாமல் தன் பாதுகாப்பில் இருந்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு மகளை பார்க்க ஓடினார். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் தமது கடமைகளை செய்தால் இந்த மாதிரி அவலங்கள் நிகழாது என்பதை உணர வேண்டும். 

    வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போகும் பச்சிளம் குழந்தைகளை காவு கொடுப்பது, கொடுமையிலும் கொடுமை. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.




    Posted by விழியே பேசு... at 5:33 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. UnknownJuly 28, 2012 at 6:29 PM

      மிகவும் வருத்தமான விடயம்

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.