விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, July 31, 2012

    இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர்...!


    அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாத ஒரு ரயில்வே அமைச்சர். மிக்க கொடுமையான ஒரு அமைச்சரை நமது நாட்டு மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மக்களைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.

    இந்திய ரயில்வேயின் அமைச்சராக எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்துள்ளனர். ஒரே ஒரு விபத்து நடந்தது என்பதற்காக தனது அமைச்சர் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று உதறியவர் நிதீஷ் குமார். இன்றளவும் மக்கள் மனதில் அவர் நிற்கிறார். சமீப காலத்தில் மக்களுக்குத் தெரிந்த நல்லதொரு ரயில்வே அமைச்சர் அவர்தான்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 2வது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் பதவியேற்றுள்ள ரயில்வே அமைச்சர்கள் மக்கள் படாபாடு படுகின்றனர். காரணம், இந்த அமைச்சர்கள் யாருமே டெல்லியில் இல்லை. கொல்கத்தாவிலிருந்துதான் செயல்படுகின்றனர். டெல்லியில் உள்ள தங்களது அமைச்சர் அலுவலகத்திற்கே வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றனர்.

    முதலில் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சரானார். இவர் அமைச்சர் பதவியை ஏற்றது முதல் பதவியிலிருந்து போகும் வரை டெல்லி துறை அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததில்லை. ரயில்வே பட்ஜெட்டைக் கூட கொல்கத்தாவில் உட்கார்ந்துதான் போட்டார். இவர் டெல்லி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    அடுத்து இவர் போய் வந்த ரயில்வே அமைச்சரை அதே வேகத்தில் தூக்கி எறிந்தார் மமதா. தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதே அதற்குக் காரணம். மமதாவைப் பகைத்துக் கொள்ள முடியாத பிரதமரும், மமதாவின் டியூனுக்கு ஆட நேரிட்டது.

    அடுத்து வந்தவர்தான் முகுல் ராய். இவரும், தனது தலைவி வழியிலேயே செயல்பட்டு வருகிறார். டெல்லி பக்கமே இவரைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் கொல்கத்தாவில்தான் அடை காத்தபடி கிடக்கிறார். ரொம்ப ரொம்ப அரிதாகத்தான் இவர் டெல்லிக்கே வருகிறார்.

    முகுல் ராய் பதவியேற்றது முதல் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள். எது குறித்தும் அவர் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, ஊழியர்களின் கவனக்குறைவு என பல காரணங்கள் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதிலும் மகா அலட்சியமாக செயல்படுகிறது ரயில்வே துறை.

    பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக 2009-10ல் 69 சதவீத விபத்துக்களை இந்திய ரயில்கள் சந்தித்துள்ளன. இது 2010-11ல் 61 சதவீதமாகவும், 2011-12ல் 64 சதவீதமாகவும் இருந்துள்ளது.

    கடந்த மார்ச் 20ம் தேதி பதவியேற்றார் முகுல் ராய். அன்றே உ.பியில் ஹத்ராஸ் அருகே நடந்த ரயில் விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மே மாதம் ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் டூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விபத்தைச் சந்தித்தன. அப்போதும் முகுல் ராய் அலட்டிக் கொள்ளவில்லை. விபத்து தடுப்பு மற்றும் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனங்களை ரயில்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் முகுல் ராய். ஆனால் இதுவரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    2009ம் ஆண்டு மத்தியில் ரயில்வே அமைச்சகத்தை திரினமூல் காங்கிரஸ் பெற்றது. அன்று முதல் ரயில்வேயின் அன்றாடப் பணிகள், முக்கியத் திட்டங்கள் அனைத்துமே மேற்கு வங்கத்தை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் குறித்து மமதாவோ அவரது கட்சியோ சற்றும் கவலைப்படுதில்லை என்று ரயில்வே உயர் அதிகாரிகளே குமுறுகின்றனர்.

    ரயில்வே அமைச்சரே படு சோம்பேறியாக, அலட்சியமாக இருப்பதால் ரயில்வே வாரியம் பல பணிகளில் அக்கறை காட்டாமல் மெத்தனமாக இருக்கிறது. ரயில்வே துறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    ரயில்களில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவது தொடர்பாக முகுல் ராய்க்கு முன்பு சில மாத காலம் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி இருந்தபோது ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தார். அதை முகுல் ராய் பரிசீலிக்கக் கூட செய்யாமல் நிராகரித்து விட்டார். அதேபோல ரூ. 20,000 கோடி செலவில் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் குறித்த அனில் ககோத்கர் அறிக்கையையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் முகுல் ராய்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற வகையில் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.

    நேற்று நெல்லூரில் நடந்த விபத்தும் கூட மின்கசிவு காரணமாகத்தான் என்று கூறுகிறார்கள். அதேசமயம், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய, அணைக்கக் கூடிய சாதனங்கள் எதுவும் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    நேற்று நெல்லூரில் அதிகாலை 4.30 மணிக்கு விபத்து நடந்தது. ஆனால் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய் கொல்கத்தாவில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் உடம்பை அசைத்து கிளம்பி நெல்லூருக்கு வந்து சேர 12 மணி நேரம் பிடித்துள்ளது. மக்கள் குறித்து எவ்வளவு அலட்சிய மனோபாவம் பாருங்கள் இந்த அமைச்சருக்கு...

    தனது கட்சியினரோடும், முதல்வர் மமதாவோடும் அவர் நேற்று முழுக்க நேரத்தை செலவிட்டதாக கூறுகிறார்கள். ரயில் விபத்து நடந்து விட்டது, உடனே கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு இல்லை என்கிறார்கள்.

    ஏன் லேட் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சென்னைக்கு கொல்கத்தாவிலிருந்து முதல் விமானமே மாலை 3 மணிக்குத்தான். அதைப் பிடித்துதான் நான் வர வேண்டியிருந்தது என்றார். ஒரு வேளை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானம் இல்லை என்றால் வந்திருக்கவே மாட்டாரோ என்னவோ...

    முகுல் ராயின் நிர்வாகம் படு மோசமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர் ரயில்வே அமைச்சராகவே செயல்படவில்லை, மிகவும் மெத்தனமாக இருக்கிறார். எப்போது பார்த்தாலும் கொல்கத்தாவில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மமதாவை கேட்டுத்தான் எதையும் செய்கிறார் என்று புலம்புகின்றனர்.

    இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர் மன்மோகன் சிங்தான். ஆனால் தட்டிக் கேட்டால் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக கூறி சீட்டுக்கு வேட்டு வைக்கக் கிளம்பி விடுவார் மமதா...

    இப்படிப்பட்டவர்களை தட்டி எழுப்ப இன்னும் எத்தனை உயிர்களை நமது மக்கள் கொடுக்க வேண்டியிருக்கோ தெரியவில்லை...


    Posted by விழியே பேசு... at 4:18 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.