நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சீனியர் பேட்ஸ்மேன் 39 வயதான சச்சின் தெண்டுல்கரின் ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. மூன்று இன்னிங்சிலும் கிளீன் போல்டு ஆனார்.
ரன் எடுக்க தடுமாறுவதால் அவர் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் குரல் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்
என்னை பொறுத்தவரை, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று இன்னிங்சிலும் அவர் ஆட்டம் இழந்த விதத்தின் அடிப்படையில் ஒரு பேட்ஸ்மேனாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கற்பனையாக கூட கருத்து கூற முடியாது. நான் ஏற்கனவே சொன்னது போல், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ரன் குவிப்பை, அவர் ஓய்வு பெறுவது மட்டுமே நிறுத்த முடியும். அதுவரை ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கலாம்.
ஆனாலும் தரமான பேட்ஸ்மேனாக அவரால் அதிகபட்ச ரன்களை குவிக்க முடியும். இந்திய அணிக்கு குறிப்பாக டெஸ்ட் அணிக்கு பெருமையும், மதிப்பும் தொடர்ந்து சேர்க்க முடியும் என்றார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அளித்த பேட்டியில், சச்சின் தெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார் என்பதை விட உற்சாகம், உத்வேகம் இருக்கும் வரை அவர் எல்லா விளையாட்டுகளிலும் நன்றாகவே இருப்பார். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றார்.
No comments:
Post a Comment