விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, September 17, 2012

    ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜ்


    மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும் புத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கா வருகிற 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
     
    ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்தார். அவரது பெயர் விஜயராஜ் (வயது 26). சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர். ஷேர் ஆட்டோ டிரைவரான விஜயராஜ் தினமும் சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் வரை ஆட்டோ ஓட்டி வந்தார்.
     
    இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு விஜயராஜ் வந்தார்.  பின்னர் அவர் அங்குள்ள டீக்கடை ஒன்றிற்கு சென்று  டீக்குடித்தார். அப்போது அவர் திடீரென ஆட்டோவில் வைத்து இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார். 
     
    திடீரென அவர் `இந்தியாவிற்கு ராஜ பக்சே வரக்கூடாது, அவர் வருவதை அரசு தடுக்க வேண்டும்' என்று கோஷமிட்டவாறு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டீக்கடையில் இருந்தவர்களும், ஸ்டேண்டில் இருந்த ஆட்டோ டிரைவர்களும் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.
     
    ஆனால் அதற்குள் விஜயராஜ் ரோட்டில் தேங்கி இருந்த மழை நீரில் விழுந்து புரண்டு `காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என கதறினார்.  உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     
    விஜயராஜ் உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சேலத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    தீக்குளித்தது குறித்து விஜயராஜ் `மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-
     
    இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.

    என்னுடைய உயிர் தியாகத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. பலரது வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்..
     
    இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி உத்தவின்பேரில் உதவி கமிஷனர்கள் பெரியசாமி, ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி மற்றும் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விஜயராஜ் தந்தை பெயர்  தங்கவேலு, தாயார் பெயர் பெருமாயி.
     
    இவருடன் பிறந்தவர்கள் 4பேர். விஜயராஜ் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அவர் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். விஜயராஜ் தீக்குளித்ததை அறிந்த அவரது பெற்றோரும் , ஆட்டோ டிரைவர்களும் திரளாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
     
    விஜயராஜ் தீக்குளித்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறியதாவது:-
     
     இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பஸ் நிலையத்திற்கு வந்து விட்டார். விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார்.
     
    ஆனால் பதில் ஏதும் கூற வில்லை. சுமார் 5மணி அளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்சேவை கண்டித்து கோஷம் எழுப்பினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.
     
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
     
    இந்த சம்பவம் குறித்து விஜயராஜின் பெற்றோர் கூறியதாவது:-
     
    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11மணி அளவில் விஜயராஜ் வீட்டிற்கு வந்தான். இன்று அதிகாலையிலேயே எழுந்து சென்று விட்டான். நாங்கள் ஏன் இப்போதே போகிறாய் என கேட்டதற்கு ஏதும் சொல்லவில்லை. என்னவோ ஏதோ என நாங்கள் நினைத்து இருந்தோம். அப்போது தான் ஆட்டோ டிரைவர்கள் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து விஜயராஜ் தீக்குளித்து விட்டார் என தெரிவித்தனர்.
     
    இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் விஜயராஜை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தோம். விஜயராஜ் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் நன்றாக பழகுவான். ஏழைகளுக்கு தேடி தேடி சென்று உதவி செய்வான், அவன் குணமாகி வர வேண்டும்.
     
    இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.          


    Posted by விழியே பேசு... at 5:00 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ▼  September (270)
      • கோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...
      • தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
      • சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...
      • 'மாற்றான்' ரிலீஸ் தேதி!
      • 'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது
      • பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...
      • சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி
      • முகத்தில் அறுவை சிகிச்சையா?: லட்சுமி மேனன்
      • தமிழில் இப்படி ஒரு படம் வருமா?
      • ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழ...
      • திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...
      • பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்
      • மின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...
      • மலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)
      • ராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...
      • அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?
      • உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்
      • கடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...
      • கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...
      • மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
      • சுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...
      • ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...
      • கரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...
      • மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
      • அன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...
      • பாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...
      • சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...
      • கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...
      • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...
      • பிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...
      • ஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்தா
      • மமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா?
      • நாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...
      • காங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...
      • மம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...
      • பள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவு
      • ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!
      • மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ்
      • 20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...
      • டுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...
      • திருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...
      • நாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...
      • கூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...
      • ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...
      • ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...
      • ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்...
      • மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...
      • ஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா?: ச...
      • ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்
      • ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...
      • மம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...
      • உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. திகில்...! பீதி!!
      • மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...
      • திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...
      • போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...
      • 'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
      • ஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...
      • 21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...
      • நடிகர் லூஸ் மோகன் மரணம்
      • வியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...
      • கிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...
      • ஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...
      • உத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...
      • கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...
      • ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...
      • உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்
      • கூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...
      • டீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி! ...
      • 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்
      • சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...
      • பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமார்
      • 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...
      • சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...
      • அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...
      • நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...
      • கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி
      • கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...
      • இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...
      • என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...
      • தமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...
      • மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்
      • கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...
      • 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...
      • இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்...
      • மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!
      • 20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...
      • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...
      • நிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...
      • உதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...
      • யூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...
      • அரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...
      • ஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...
      • யாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...
      • டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...
      • ''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...
      • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...
      • புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.