சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). தி.மு.க. பிரமுகர். புனான்ஸ் அதிபரான இவர் ஆட்டோ டிரைவர்களுக்கும், உழவர் சந்தையில் வியாபாரம் செய்பவர்களுக்கும் பணம் வட்டிக்கு கொடுத்து வாங்கி வந்தார்.
இவர் தினமும் காலையில் சண்முகாநகர் பிரிவு ரோடு அருகில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ சாப்பிட்டு செல்வார். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் சண்முகம் டீ குடிக்க கடைக்கு வந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து கொண்டு கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென தி.மு.க. பிரமுகர் சண்முகத்தை தாக்க தொடங்கினர். வலி தாங்கமுடியாத சண்முகம் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடினார். சினிமாவில் வருவதுபோல் அந்த கும்பலும் சண்முகத்தை விடாமல் விரட்டினர். காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் சென்ற அனைவரும் பதற்றத்துடன் பார்த்தனர். ஒரு கட்டத்தில் சண்முகத்தை அந்த கும்பல் மடக்கியது.
பின்னர் சண்முகத்தை அரிவாளால் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. உடலில் பல இடங்களில் ரத்தக் காயத்துடன் சண்முகம் உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கேயே பிணமானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் கமிஷனர் மஹாலிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் பாபு, உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சூரியமூர்த்தி, சோமன்ராஜூ, சாபியுல்லா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றினர். கொலை நடந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூட்டம் கூடிவிட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சண்முகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகத்துக்கு அஞ்சலி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சண்முகம் காதல் திருமணம் செய்தவர். சண்முகம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி அஞ்சலி சண்முகத்தின் உடலை பார்த்து கதறி அழுதார். இவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் அண்ணன் மோகன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் சண்முகம் முக்கிய சாட்சியாக உள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடக்கும் சூழ்நிலையில் சண்முகத்தை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சண்முகத்தின் அண்ணன் மோகன் கொலை வழக்கில் யார் யார் கைது செய்யப்பட்டனர் என போலீசார் பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.
சேலத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கொலை குறித்து துப்புதுலக்க சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்துள்ளார். இவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சண்முகம் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து சேலம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆர்.பி.முருகன், நிர்வாகிகள் மாரியப்பன், மதி, வாஞ்சிநாதன், கோவிந்தன் மற்றும் கட்சியினர், உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்களில் சிலர் ஆம்புலன்ஸ் வேனை சுற்றி நின்று வேனை விடாமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பிணம் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இவர்களை போலீசார் அகற்றி பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் தினமும் காலையில் சண்முகாநகர் பிரிவு ரோடு அருகில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ சாப்பிட்டு செல்வார். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் சண்முகம் டீ குடிக்க கடைக்கு வந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து கொண்டு கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென தி.மு.க. பிரமுகர் சண்முகத்தை தாக்க தொடங்கினர். வலி தாங்கமுடியாத சண்முகம் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடினார். சினிமாவில் வருவதுபோல் அந்த கும்பலும் சண்முகத்தை விடாமல் விரட்டினர். காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் சென்ற அனைவரும் பதற்றத்துடன் பார்த்தனர். ஒரு கட்டத்தில் சண்முகத்தை அந்த கும்பல் மடக்கியது.
பின்னர் சண்முகத்தை அரிவாளால் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. உடலில் பல இடங்களில் ரத்தக் காயத்துடன் சண்முகம் உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கேயே பிணமானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் கமிஷனர் மஹாலிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் பாபு, உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சூரியமூர்த்தி, சோமன்ராஜூ, சாபியுல்லா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றினர். கொலை நடந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூட்டம் கூடிவிட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சண்முகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகத்துக்கு அஞ்சலி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சண்முகம் காதல் திருமணம் செய்தவர். சண்முகம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி அஞ்சலி சண்முகத்தின் உடலை பார்த்து கதறி அழுதார். இவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் அண்ணன் மோகன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் சண்முகம் முக்கிய சாட்சியாக உள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடக்கும் சூழ்நிலையில் சண்முகத்தை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சண்முகத்தின் அண்ணன் மோகன் கொலை வழக்கில் யார் யார் கைது செய்யப்பட்டனர் என போலீசார் பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.
சேலத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கொலை குறித்து துப்புதுலக்க சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்துள்ளார். இவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சண்முகம் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து சேலம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆர்.பி.முருகன், நிர்வாகிகள் மாரியப்பன், மதி, வாஞ்சிநாதன், கோவிந்தன் மற்றும் கட்சியினர், உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்களில் சிலர் ஆம்புலன்ஸ் வேனை சுற்றி நின்று வேனை விடாமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பிணம் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இவர்களை போலீசார் அகற்றி பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment