விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, April 1, 2011

    விஜயகாந்த்துக்கு ஜெ. வைத்த ஆப்பு: திருமா


    சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,


    தமிழகத்தில் நடைபெறுகிற தேர்தல் யார் யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பது அல்ல. யார் முதல்வராக வேண்டும் என்பதற்கான தேர்தல். கலைஞர் தலைமையிலான ஒரு அணி. நம்மை எதிர்க்கும் ஒரு அணி. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பேரியக்கம் சொல்லுகிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு பாமக சொல்கிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் சொல்லுகிறோம் கலைஞர்தான் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும். இதேபோன்று கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலைஞர்தான் என்று சொல்லுகிறார்கள்.


    ஆனால் நம்மை எதிர்க்கிற அணியில் இருப்பவர்கள் கலைஞர் கேட்ட வினாவிற்கு எதிர் அணியில் இருப்பவர்கள் விடை சொல்லுவார்களா. ஒரே மேடையில் இருந்து அவர்கள் மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு கூட, தெம்பு இல்லாதவர்களாக, ஒருவருக்கொருவர் நம்ப கூடியவர்களாக இல்லாத நிலையில் மக்களை சந்திக்கிறார்கள்.


    நண்பர் விஜயகாந்த் ஒரே மேடையில் நின்று வாக்குகள் கேட்க வேண்டாம். நாங்கள் அம்மாவை தான் முதல் அமைச்சராக ஆக்குவோம் என்ற துணிச்சல் உண்டா. இல்லை. ஏனென்றால் அடுத்த முதல்வர் நான்தான் என்ற எண்ணத்தில் இருப்பவர் அவர். ஆகவே அதனை அவரால் சொல்ல முடியாது.

    வாக்காளர் பெருமக்களே ஒப்பிட்டு பாருங்கள். யார் முதல்வர். தலைவர் கலைஞரா. கலைஞரை விமர்சிக்கும் அம்மையாரா.


    1984ல் அரசியலுக்கு வந்தவர் அம்மையார். ஆனால் 1938ஆம் ஆண்டிலேயே வந்தவர் கலைஞர். பெரிய தலைவர்களுடன் பழகி, அரசியல் அனுபவம் பெற்று தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் பாதுகாப்பதற்காக தம் வாழ்வை அற்பணித்துக்கொண்ட இந்த 87 வயதிலும் சக்கர நாற்காலியில் சுற்றி சுழன்று வந்து, தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்து வந்துகொண்டிருக்கும் கலைஞர் முதல்வராக வேண்டுமா. அல்லது திட்டி தீர்ப்பதையே அரசியல் கொள்கையாக வைத்திருக்கும் அம்மையார் முதல்வராக வரவேண்டுமா. ஒப்பிட்டு பாருங்கள்.


    ரவுடிகள் ஆட்சியை ஒழிப்போம் என்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார். அரசியல் நாகரீகம் இல்லாமல், கலைஞர் அவர்களை ஒருமையில் பேசுகிற அளவுக்கு, பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்கு அநாகரிகமான அரசியலுக்கு அடித்தளமிட்டவர் மீண்டும் முதல்வராக வரவேண்டுமா.


    சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும் தம்பி என்றும், அண்ணா என்றும், பெரியவர் என்றும், அய்யா என்றும் அழைக்கக் கூடிய நாகரீகம் உடைய கலைஞர் முதல்வராக வேண்டுமா. சாதாரண மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போரடிக் கொண்டிருக்கிற கலைஞர் வேண்டுமா. அல்லது பழிவாங்குவதே ஒன்றே தன் செயல் என்ற அந்த அம்மையார் வேண்டுமா.


    அந்த அம்மையார் 10 ஆண்டுகாலம் முதல் அமைச்சராக இருந்தார். முதல் ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை என்ன. ஒன்றே ஒன்றை சொல்லலாம். 30 வயதுக்கு மேலே உள்ளவரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அந்த வளர்ப்பு மகனுக்கு உலகமே வியக்கக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி திருமணம் செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் மக்கள் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை, தலைவர்களை கைது செய்து பழி வாங்கினார். 


    கலைஞரை கைது செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை கைது செய்தார். இவர்களுக்காக குரல் கொடுத்த நெடுமாறனை கைது செய்தார். தமிழ்நாட்டில் யார் யார் எல்லாம் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார். என்னையும் கைது செய்தவர்தான் அந்த அம்மையார். பாமக நிறுவனர் ராமதாசையும் கைது செய்தார். அவர் ஆட்சிக் காலத்தின் சாதனை வளர்ப்பு மகனின் திருமணம். எதிரணி தலைவர்களை கைது செய்து பழி வாங்கிய சாதனை.


    கலைஞரின் சாதனைகளையும், எதிரணி சாதனைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்த மேடையில் யார் யார் அமர்ந்திருக்கிறோம். தலைவர்களை அமர வைத்து அழகு பார்க்கிறார். இந்த ஜனநாயகத்தை எதிரணியில் பார்க்க முடியுமா.

    சட்டமன்றத்திலே குடித்துவிட்ட உளறுகிறார் விஜயகாந்த் என்று சொன்னார் அம்மையார். ஊத்தி கொடுத்தாயே என்று பதிலுக்கு கேட்டார் விஜயகாந்த். இரண்டு பேரும் இன்று ஓரணியில் நிற்கிறார்கள். ஆனால் ஒரே மேடையில் நிற்க முடியவில்லை.


    சொந்தக் கட்சி வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையில் சாத்து சாத்து என்று சாத்துகிறார் ஒருவர். அடிக்கிறார். அடித்துவிட்டு சொல்லுகிறார் தன் கையால் அடிப்பட்டவர்கள் மகாராஜாவாக ஆவார்களாம். அப்படி என்றால் தனக்கு தானே அடித்துக்கொள்ளலாமே. மகாராஜா ஆகலாமே. ஏன் மக்களிடத்திலே சென்று வாக்கு கேட்டு கெஞ்ச வேண்டும்.




    கருப்பு எம்ஜிஆர். அடுத்த முதல் அமைச்சர் எல்லாவற்றுக்கும் சேர்த்து அந்த அம்மையார் ஆப்பு வைத்துவிட்டார். வெள்ளை எம்ஜிஆரே எனக்கு பிடிக்காது. கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுக் கேட்டு அலைகிறாய். எம்ஜிஆர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, ராஜீவ்காந்தியை சந்தித்து ஆட்சியை என்னிடத்திலே கொடுங்கள் என்று கேட்டவர் அம்ûமையார்.

    ஆகவே யார் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதை விட, யார் முதல்வராக வேண்டும் என்பதே முக்கியம். 6வது முறையாக கலைஞர் அவர்களை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தோழமை கட்சிகளும் பாடுபடும் என்றார்.


    Posted by விழியே பேசு... at 10:43 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.