சின்சியர் கிரியேஷன் சார்பில் ராஜேஷ்ராகவ், நாசர், ரஷீது ஆகியோர் தயாரிக்கும் புதிய படம் நாடோ டிக் கூட்டம்.
எப்படியாவது வாழ வேண்டும்; வழியா இல்லை உலகில்; என்று வறுமையின் விளிம்பில் உள்ளவர்கள் பிழைப்புத் தேடி வெவ்வேறு ஊர்களிலிருந்து செல்வ செழிப்புள்ள ஒரு ஊருக்கு வருகிறார்கள். இதில் நாட்டு மருந்து விற்பவருக்கும், முத்து மாலை செய்து விற்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை காதல் என்று கொளுத்தி விடுகிறார்கள் அந்த ஊர் மக்கள். இப்படி காதலிக்காத காதல் கதையையும், பிழைப்புக்காக ஊர் ஊராக திரியும் மக்களின் வாழ்வியலையும் சொல்லும் கதைதான் 'நாடோ டிக் கூட்டம்'.
இப்படத்தில் பிரினு, திலோத்தம்மாள் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கஸ்தூரி, கீதா, பாலாசிங், முத்துக்காளை, கிரேன் மனோகர், சலீல் சாகுல் ஆகியோர் நடிக்கிறார்கள்.

No comments:
Post a Comment