விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, July 11, 2012

    வைஷ்ணவி அப்படியா சொல்லுச்சு? ..மதுரை ஆதீனம் வியப்பு!


    அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தக் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் இளைய ஆதீனமாக தொடர முடியாது. நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
    இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளர்களை வரவழைத்துப் பேசினார் மதுரை ஆதீனம். அப்போது நக்கீரன் நக்கீரன் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டி...
    கேள்வி: நீங்கள் நித்தியின் பிடியில் சிக்கியது எப்படி?
    ஆதீனம்: நான் நித்தியின் பிடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுவது கற்பனை. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது. அப்படியிருக்க, நித்தியா என்னைக் கட்டுப்படுத்துவார்? அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்.
    கேள்வி: நீங்கள் நித்தி வந்ததிலிருந்து வசியம் செய்யப்பட்டவர் போல் தன்னிலை மறந்தவராக இருப்பதாக வைஷ்ணவியே சொல்லியிருக்கிறாரே?
    ஆதீனம்: (லஜ்ஜையாய் சிரித்தபடியே) வைஷ்ணவி அப்படியா சொல்லுச்சு? அதெல்லாம் இல்லை. நான் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறேன். என்னை நித்தி வசியமும் பண்ணவில்லை. எனக்கு மையும் போடவில்லை. என்னை யாராலும் வசியம் செய்ய முடியாது. எனக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. வசிய மைகள் என்னை நெருங்காது.
    கேள்வி: நித்தியோடு பேட்டியில் நீங்கள் அமரும் போதெல்லாம் டல்லாகத் தெரிந்தீர்கள். இப்போது உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி அவருடன் இருக்கும் போது எங்கே போகிறது?
    ஆதீனம்: உண்மையைச் சொல்லட்டுமா? நித்தியோடு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது எல்லோரும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். அப்போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி உற்சாகம் என்னிடம் தென்படும்?
    கேள்வி: ரஞ்சிதா வீடியோ விவகாரம் பற்றிப் பேசிய காஞ்சி மடாதிபதி மீது, அவரைக் கொண்டே வழக்குப் போட்டிருப்பது சரியா?
    ஆதீனம்: இன்னொரு உண்மையைச் சொல்லட்டுமா? அந்த காஞ்சி மடாதிபதி ராதாவோடு ஓடிய சர்ச்சை ஒரு காலத்தில் வந்தது. (குபீரென சிரித்துவிட்டு) அப்போது அந்த மடாதிபதியிடம் நான் பேசியதோடு அவருக்கு சில ஆலோசனைகளையும் சொன்னேன். அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார், நித்தி-ரஞ்சிதா விவகாரம் பற்றி வாய் திறந்திருக்கக் கூடாது.
    கேள்வி: மதுரை ஆதீன மடத்தில் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்தானே ஆதீனமாக இருக்க முடியும்?
    ஆதீனம்: நித்தி சைவ வேளாளர் இல்லைதான். அவர் தொண்டை மண்டல முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதே மடத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் சிலர் இங்கே இருந்திருக்கிறார்கள். எனவே இந்தவகையில் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது.
    கேள்வி: நித்தி நியமனம், மரபு மீறல் என ஏனைய 18 ஆதீனமட கர்த்தர்களும் ஒட்டுமொத்தமாய் குற்றம் சாட்டுகிறார் களே?
    ஆதீனம்: இளைய ஆதீன நியமனத்தில் என்னைத் தவிர யாரும் முடிவு எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் யாரும் தலையிடவும் கூடாது. நித்தி நியமனத்தில் ஆதீன மரபுகள் ஒருபோதும் மீறப்படவில்லை. அவருக்கு முறைப்படி தீட்சை கொடுத்துதான் இளைய ஆதீனமாக நிய மித்தேன். மற்ற ஆதீனங்கள் இது குறித்து தங்களிடம் ஆலோசிக்க வருமாறு திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக என்னை அழைத்தனர். நான் நித்தியோடுதான் வருவேன். தனியாக வரமாட்டேன் என்றேன். இதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
    ஆதீனங்களுடன் ஆலோசிக்கும் மரபை நித்திக்காக நான் கைவிட்டுவிட் டேன். பல ஆதீனங்களுக்கு பிரச்சினைகள் வந்த போதெல்லாம் நான் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். அதே போல் நானும் பலரது ஆலோசனைகளைக் கேட்டவன்தான். நித்தி விவகாரத்தால் அவர்களது மன வருத்தத்தை இப்போது சம்பாதித்திருக்கிறேன்.
    கேள்வி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட மதுரை ஆதீன மடத் துக்குள் முதல் முறையாக போலீஸ் புகுந்து ரெய்டு நடத்தியிருக்கிறதே. இது நித்தியால் தானே?
    ஆதீனம்: (ஒரு கணம் இறுக்கமாக யோசித்துவிட்டு). ஆமாம். வருத்தமாகத்தான் இருக்கு. ஆதீனத்தில் புலித்தோல் இருக்கு. மான் தோல் இருக்கு. யானைத் தந்தம் இருக்குன்னு கோர்ட்டில் வழக்குப் போட்டுட்டாங்க. கோர்ட் உத்தரவால் மரபை மீறி, போலீஸ் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சிடிச்சி. இங்கே மானுமில்லை. மான் தோலுமில்லை. புலியும் இல்லை. புலித் தோலும் இல்லை. யானையும் இல்லை யானைத் தந்தமும் இல்லை. சோதனையில் எதையும் எடுக்கவில்லையே.
    கேள்வி: மடத்தின் வீடியோ பதிவு ஒன்றில் ஒரு பெண் எதையோ கடத்துவதுபோல் இருக்கிறதே. அது மரகதலிங்கம் என்கிறார்களே?
    ஆதீனம்: மடத்தில் மரக்கட்டை லிங்கம் தான் இருக்கிறது. மரகதலிங்கம் இருந்ததாகச் சொல்வது கற்பனை. வெளிநாட்டு பக்தர் தன் லக்கேஜோடு ஊருக்குப் போகிற காட்சிதான் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
    கேள்வி: இவ்வளவு ஜாலி மூடில் இருக்கிறீர்களே... நித்தி எங்கே?
    ஆதீனம்: (பலமாக சிரித்தபடி..) அவர் கொடைக்கானலில் ஏதோ கிளாஸ் எடுக்கிறார். எங்கே போகப்போறார்? திரும்பி வந்துடுவார். அவர் திரும்பி வந்தாலும் நான் இப்படித்தான் உற்சாகமா இருப்பேன்.
    கேள்வி: சமீபத்தில் திருவண்ணாமலை குரு பௌர்ணமி விழாவில் பேசிய நித்தி, "என் மீதான பாலியல் புகார்களையெல்லாம் துணிச்சலாக சந்திப்பேன். இதற்கு எனக்கு ஆதீனப் பதவி கூடத் தேவையில்லை' என்று கூறியிருக்கிறாரே?
    ஆதீனம்: அப்படியா? அது அவர் முடிவு. அவர் மீதான செக்ஸ் புகார் வழக்குகளை எல்லாம் அவரே சந்தித்துக்கொள்வார். இதில் ஆதீனம் தலையிடாது. (அவரிடம் ஒருவகை இறுக்கம் நிலவுகிறது)
    கேள்வி: நித்தி ஒரு மோசடிப் பேர்வழி. சர்வதேச ஃபிராடு என்றெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே? 19-ந் தேதி அவருக்கான தண்டனையை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறதே?
    ஆதீனம்: ஜூலை 19-ல் தீர்ப்பு வரட்டும். அன்று உங்களை மீண்டும் அழைப்பேன். தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால் அவரை நீக்குவது பற்றி முடிவு செய்து அறிவிப்பேன். ஏனென்றால் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் இளைய ஆதீனப் பதவியில் தொடர முடியாது. எனவே எந்த முடிவுக்கும் தயங்கமாட்டேன்.
    கேள்வி: அடிப்படையில் நீங்கள் திமுககாரர். கலைஞர் அனுதாபி. ஆனால் ஆட்சி மாறும் போதெல்லாம் நீங்கள் அதிமுக விசுவாசியாக ஆகிவிடுகிறீர்களே?
    ஆதீனம்: நான் தி.மு.க.காரன்தான். ஆட்சி மாறினால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நான் விசுவாசி. இதில் தப்பில்லை. அப்படித்தானே ஆதீனம் இருக்கமுடியும். எந்த ஆட்சியையும் ஆதீனம் பகைத்துக்கொள்ள முடியாது. எனவே கலைஞரும் எனக்கு நண்பர். ஜெ.வுக்கும் நான் நெருக்கமானவன்.
    கேள்வி: இப்போது உங்கள் நண்பர் எம்.நடராஜனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? அவர் கைதானபோது கூட நீங்கள் பார்க்கவில்லையே?
    ஆதீனம்: அவரைப் பற்றி இப்போது உள்ள சூழலில் பேசாமல் இருப்பதே நல்லது. பேசினால் எனக்கு சிக்கல் வந்துவிடும். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்கறீங்களேப்பா. ஆளை விடுங்கள்.


    Posted by விழியே பேசு... at 5:32 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. UnknownJuly 11, 2012 at 6:16 PM

      information is nice

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.