விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, July 19, 2012

    ஜனாதிபதி தேர்தல் இன்று வாக்குப்பதிவு

    தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பட்டீலின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இது 14-வது ஜனாதிபதி தேர்தல் ஆகும். 

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. 

    அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அவருக்கு அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களான எம்.பி.க்கள் 776 பேர் மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களான 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்கள் போடும் ஓட்டுகளின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் ஆகும். 

    பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உள்ள 63-வது அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு அளிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவார்கள். எம்.பி.க்கள் விரும்பினால், தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று சொந்த மாநிலத்திலேயே ஓட்டுப்போடலாம். 

    டெல்லி மேல்-சபை பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான வி.கே.அக்னிஹோத்ரி நேற்று டெல்லியில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: 

    ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுப்போட வரும்போது அவர்கள் அந்த கடிதத்தை கொண்டு வரவேண்டும் என்றும், ஒட்டுப்போடுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் அடையாள அட்டையையோ அல்லது அந்த கடிதத்தையோ காட்ட வேண்டும் என்றும் கூறினார். 

    பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட 77 எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. 

    இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்த விளக்க குறிப்புகள் கடந்த சனிக்கிழமை மாலை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டன. 

    ஜனாதிபதி தேர்தலை நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஜவுளித்துறை இணைச்செயலாளர் சுஜித் குலாட்டி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

    நேற்று மாலை சென்னை வந்த அவர் கோட்டையில், ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை குழு கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன்பும், வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை உணவு இடைவேளை இன்றி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்பட 234 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுகிறார்கள். 

    இவர்கள் தவிர, சென்னையில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றுள்ள 10 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், 5 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களும் ஆக மொத்தம் 15 எம்.பி.க்களும் கோட்டை வாக்குச்சாவடியிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்குச்சாவடியின் உள்ளே செல்போன், கார்டுலெஸ் போன், வயர்லெஸ் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் டி.வி. கேமராமேன்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி பகுதியை படம் பிடிக்க பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள். 

    வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் அவர்கள் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டி கோட்டையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டியை தமிழக சட்டசபை செயலாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன், மற்றொரு உதவி தேர்தல் அதிகாரி கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விமானத்தில் பாதுகாப்புடன் எடுத்துச்சென்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். 

    ஓட்டு எண்ணிக்கை 22-ந் தேதி நடைபெறுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படும். அன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அதிக ஆதரவு இருப்பதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.




    Posted by விழியே பேசு... at 9:03 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.