சகானாவின் மோசடி வித்தைகள் பற்றி பிரசன்னாவின் தாய் நிர்மலா கூறியதாவது:-
எனது மகன் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சகானா மிகவும் நல்ல பெண் என்று நினைத்தோம். அவள் இவ்வளவு மோசக்காரியாக இருப்பாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
திருமணத்துக்கு பின்னர் கர்ப்பப்பையில் பிரச்சினை என்று கூறி, பிரசன்னாவுடன் சேர்ந்து வாழவே தயங்கிய அவள், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவன்தான் தந்தை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
வீட்டுக்கு எப்போதாவது வந்து சில மணி நேரங்களே சகானா எங்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். அப்போது ஓவராக பந்தா காட்டுவாள். முகம் கழுவுவதற்குகூட மினரல் வாட்டரைத்தான் பயன்படுத்துவாள். எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருப்பாள்.
யாரிடம் பேசினாய் எனக்கேட்டால், எனது பெரியப்பா பேசினார். இங்கே வருவதாக சொல்லியுள்ளார் என கூறுவாள். பலமுறை வக்கீல் உடையிலேயே எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஐகோர்ட்டில் நிறைய வேலை உள்ளது. சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பாள்.
அவளால் எங்களுக்கு பண விரயம் ஏற்பட்டதுதான் மிச்சம். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தியுடன், பல ஆண்களை ஏமாற்றிய சகானா, சிறிது காலம் எங்கள் வீட்டில் வாழ்ந்ததையை அறுவெறுப்பாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எனது மகன் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சகானா மிகவும் நல்ல பெண் என்று நினைத்தோம். அவள் இவ்வளவு மோசக்காரியாக இருப்பாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
திருமணத்துக்கு பின்னர் கர்ப்பப்பையில் பிரச்சினை என்று கூறி, பிரசன்னாவுடன் சேர்ந்து வாழவே தயங்கிய அவள், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவன்தான் தந்தை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
வீட்டுக்கு எப்போதாவது வந்து சில மணி நேரங்களே சகானா எங்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். அப்போது ஓவராக பந்தா காட்டுவாள். முகம் கழுவுவதற்குகூட மினரல் வாட்டரைத்தான் பயன்படுத்துவாள். எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருப்பாள்.
யாரிடம் பேசினாய் எனக்கேட்டால், எனது பெரியப்பா பேசினார். இங்கே வருவதாக சொல்லியுள்ளார் என கூறுவாள். பலமுறை வக்கீல் உடையிலேயே எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஐகோர்ட்டில் நிறைய வேலை உள்ளது. சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பாள்.
அவளால் எங்களுக்கு பண விரயம் ஏற்பட்டதுதான் மிச்சம். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தியுடன், பல ஆண்களை ஏமாற்றிய சகானா, சிறிது காலம் எங்கள் வீட்டில் வாழ்ந்ததையை அறுவெறுப்பாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment