சச்சினின் சமீபகால மோசமான பார்ம் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர் சிறப்பாக கால்களை நிகர்த்தி விளையாட வெண்ணெய் சாப்பிட வேண்டும் என்று அமுல் நிறுவனம் சச்சினை கிண்டிலடிக்கும் வகையில் பொம்மை படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி பங்கேற்ற 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது. இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆனால் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சச்சின் 3 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதிலும் 3 முறையும் அவர் போல்டாகி உள்ளார்.
இதனால் சச்சினின் பார்ம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. முதுமையின் காரணமாக இந்திய அணியில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல், இந்த சந்தர்ப்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி உள்ளது.
சச்சினை போன்ற பொம்மை உருவம் ஒன்று கிரிக்கெட் போட்டியில் போல்டாகி ஏமாற்றத்துடன் நிற்பது போலவும், ஆடுகளத்திற்கு செல்லும் அமுல் சிறுமி அவரை கால்களை நன்கு நகர்த்தி விளையாட அமுல் வெண்ணெய் சாப்பிடுமாறு கூறுவது போலவும் பொம்மை படம் ஒன்றை அமுல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பொம்மை படம் அமுல் நிறுவனத்தின் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள சச்சினின், இந்த பொம்மை படம் இணையதளத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment