இயக்குனர்
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துணை நடிகை
கைது செய்யப்பட்டார். மேற்கு
தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி
(35). இவர் கிண்டி அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார்
மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தனது
கணவர் ஹரிகிருஷ்ணன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக
பணிபுரிந்து வருகிறார். இவர் வேளச்சேரி லட்சுமி
நகர் பகுதியில் வசிக்கும் துணை நடிகை சங்கீதாவுடன்
நெருக்கமாக இருந்து வருகிறார். இதனால்
வீட்டிற்கு அவர் சரிவர வருவது
கிடை யாது. சம்பளத்தை வீட்டிற்கு
கொடுப்பது கிடையாது. இது குறித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்வடிவு,
துணை நடிகை சங்கீதாவை காவல்
நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது.
கடந்த
2007ம் ஆண்டு வடபழனியில் இயக்குனர்
செல்வா கொலை வழக்கில் சிறை
சென்று ஜாமீனில் வெளியே வந்த துணை
நடிகை சங்கீதா, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு பீர்க்கன்காரணை
பகுதியில் விபசார வழக்கில் கைதானபோது,
அங்கு பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ஹரிகிருஷ்ணனுடன்
சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்
இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று
சுற்றித் திரிந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஹரிகிருஷ்ணன், சங்கீதாவுக்கு வேளச்சேரி பகுதியில் தனி வீடு எடுத்து
கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து
போலீசார் துணை நடிகை சங்கீதாவை
வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் போலீசாரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment