விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, December 31, 2014

    2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ஒரு பார்வை

    அதிமுகவில் இணைந்த பண்ருட்டியார்... 

    தேமுதிகவின் மூளையாக திகழ்ந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். அதே அதிரடியோடு அவர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுவிவிலும் இணைந்தார். இது நடந்தது பிப்ரவரி 19ம் தேதி.


    இயக்குனர் பாலு மகேந்திரா மரணம்

    தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் 13.02.14 அன்று மரணம் அடைந்தார்.

    மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இவர், ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரும் ஆவார். புகழ் பெற்ற இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து இருக்கின்றனர்.

    ஐந்து முறை தேசிய விருது வென்றவரான பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், கே.வி.ஆனந்த் போன்றோருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

    தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தம் பாலு மகேந்திரா.

    ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தூக்கு ரத்து
     
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.02.14 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதே போன்ற மற்றொரு வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து கடந்த ஜனவரி 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுக்கும் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    தண்டனை பெற்ற மூவரும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தங்களின் செயலுக்காக சிறிது கூட வருத்தப்படவில்லை. எனவே, அவர்களுக்கு கருணை காட்டத் தேவையில்லை. மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மூவரும் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு
     
    காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு 19.02.14 அன்று வெளியிட்டது. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பு ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக, 2013 பிப்ரவரி 19 ஆம் தேதியிட்டு மத்திய நீர் வளத்துறை செயலர் கையெழுத்திட்ட அரசாணை இடம்பெற்ற அரசிதழின் நகல், உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் நகல்கள் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

    "உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணையை பாதிக்காத வகையில் இது வெளியிடப்படுகிறது'' என்று அரசிதழில் மத்திய அரசு கூறியுள்ளது.

    அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பின் விவரம்: காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். அதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும்.

    கையிருப்பு நீர் அளவு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சியும், கடலில் கலக்கும்போது தவிர்க்க முடியாத வகையில் செல்லும் உபரி நீருக்காக 4 டிஎம்சி நீரும் ஒதுக்க வேண்டும்.

    கேரளத்துக்கு ஒதுக்கப்படும் 30 டிஎம்சி நீரில் கபினி துணை ஆற்றில் 21 டிஎம்சி, பவானி துணை ஆற்றில் 6 டிஎம்சி, பம்பாறு துணை ஆற்றில் 3 டிஎம்சி செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    காவிரி நதியில் இடர்பாடு காலங்களில் நீர்வரத்து குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீரின் அளவை கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே குறைத்துக் கொள்ளலாம்.

    திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்
     
    திமுகவிலிருந்து அக்கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி 26.03.14 அன்று நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

    இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், ”திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து மு.க.அழகிரி ஜனவரி 24ஆம் தேதி தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

    திமுக கூட்டணியில் சேர இருந்த கட்சிக்கு (தேமுதிக) எதிராகப் பேசியதுடன், திமுகவினர் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும் காரணமாக இருந்ததாகக் கூறி, மு.க.அழகிரி அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் அழகிரி தொடர்ந்து திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.

    திமுகவில் பணம் பெற்றுக்கொண்டே மக்களவைத் தேர்தலுக்கான சீட்டுகள் வழங்கப்பட்டன என்றும், திமுகவின் சொத்துகளை ஸ்டாலின் அபகரிக்க முயற்சிக்கிறார் என்றும் அழகிரி குற்றம்சாட்டி வந்தார்.

    மேலும் பாஜகவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை அழகிரி சந்தித்துப் பேசினார்.

    இதில், வைகோ அழகிரியின் இல்லத்துக்கே சென்று பேசியது, திமுக தலைமைக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:- திமுகவிலிருந்து அழகிரி தாற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். அவர் அதற்கு உரிய விளக்கங்களை அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதுடன், திமுக தலைவர்களைப் பற்றியும் அவதூறு கூறி வருகிறார். இதனையடுத்து க.அன்பழகனும் நானும் கலந்து பேசி அழகிரியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம் என்று கருணாநிதி கூறினார்.

    'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!
     
    'தங்க மீன்கள்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

    திரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகள் 16.04.14 அன்று மத்திய அரசு அறிவித்தது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' தேர்வு செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்தது.

    மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெற்றார்.

    தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்பட்டது.

    தமிழின் 'வல்லினம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் பிரிவில் சாபு ஜோசப்-புக்கு தேசிய விருது கிடைத்தது.

    சினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான 'தர்மம்' என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின். ஒரு குழந்தையின் பார்வையில் சமூகத்தின் ஏழ்மை நிலையையும், கையூட்டுப் பிரச்சினையும் ஒருங்கே பதிவு செய்த படைப்பு இது.

    பல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு
     
    01.05.14 அன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.

    பெங்களூருவிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி வரை செல்லும் பயணிகள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ஆவது பிளாட்பாரத்திற்கு வந்த போது ரயிலின் எஸ்.4 மற்றும் எஸ்.5 பெட்டிகளில் 2 குண்டுகள் வெடித்தன.

    முதல் கட்ட தகவலின்படி, இந்த குண்டு வெடிப்பில் சுவாதி என்ற 22 வயது இளம்பெண் பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

    தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் வெற்றி
     
    2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் 16.05.14 அன்று நடைபெற்றது.
     
    தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரியில் பாஜகவும், தர்மபுரியில் பாமகவும் வெற்றி பெற்றன. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழகத்தில் இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. 

    திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் தனித்து போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளை அதிமுக கடைசி நேரத்தில் வெளியேற்றி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. அதில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் 2, புதிய தமிழகம், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.

    பாஜக கூட்டணியில் தேமுதிக 14 தொகுதிகளிலும், பாமக, பாஜக தலா 8 தொகுதிகள், மதிமுக 7 தொகுதி, கொங்கு, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. புதுவையில் மட்டும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற என்.ஆர்.காங்கிரசும், பாமகவும் போட்டியிட்டன. அதில் என்.ஆர்.காங்கிரசுக்கு பாஜவும், பாமகவுக்கு தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 9 தொகுதிகளில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் மாநில தலைவர்கள் யாரும் போட்டியிடவில்லை. தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் போட்டியிட்டனர்.

    இந்த 5 முனை போட்டியில், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாகவும், எதிர்கட்சிகளில் 2வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்தது.

    கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு

    கும்பகோணம் தீ விபத்து வழக்கில், பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    94 குழந்தைகளை காவு வாங்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30.07.14 அன்று வழங்கிய தீர்ப்பில் பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

    குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் 3 பேரை ஏற்கனவே வழக்கில் தொடர்பில்லாதவர்கள் என நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. மீதம் உள்ள 21 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட்டிருந்தது.

    நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வழக்கில், மொத்தம் உள்ள 21 பேரில் 11 பேரை நீதிபதி முகமது அலி இன்று காலை விடுதலை செய்தார். இது பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு
     
    ஸ்காட்லாந்து நாட்டின், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.


    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கினார்.

    ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
     
    கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 27.09.14 அன்று தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், 32 தனியார் நிறுவனங்களையும் உடனடியாக முடக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18-ல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் 27.09.14 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு
     
    தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் 29.09.14 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.

    பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

    சென்னையில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது
     
    01.11.14 அன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்பின் வரி பிரச்சினை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது.

    கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

    பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த  தொழிற்சாலையில் 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 12 ஆயிரம் பேர்  மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்தனர்.

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை

    போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் எமர்சன், பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு அக்டோபர் 30ஆம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடைபெற்றன.

    இதனையடுத்து இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. அதன்படி இந்திய அரசு சார்பில், அந்நாட்டு  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம் இலங்கை அரசிடம் மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று  மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. கடந்த வாரம் அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் , பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் மீனவர்கள் விடுதலை குறித்துப் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து இலங்கை அரசு மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்தும், மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலித்தது. அதற்கு ஏதுவாக இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில் 5 மீனவர்கள் 19.11.14 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு


    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 21.11.14 அன்று 142 அடியை எட்டியது. இதன்மூலம், அணையில் இந்த உயரத்துக்கு நீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியின்படி தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

    குஷ்பு காங்கிரசில் சேர்ந்தார்
     
    திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 26.11.14 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த அவர் கட்சியில் இணைந்தார்.

    திமுகவில் சமீப காலம் வரை நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு , திமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தார்.

    டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவது தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரவிருக்கிறார் என்று வந்த தகவல்களை மறுத்த அவர், அது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார்.
     
    திருச்சி பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே.வாசன்
     
    மாநில உரிமைகளுக்கு காங்கிரஸ் தலைமை மதிப்பளிப்பதில்லை என்று கட்சியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், திருச்சியில் 28.11.14 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று அறிவித்தார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த மூப்பனாரால் உருவாக்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இது மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற பெயர் மறைந்து போனது.

    தற்போது, அதே பெயரை மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் தனது புதிய கட்சிக்கு சூட்டியுள்ளார்.

    மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வந்திருந்தனர்.

    மேடையின் வலதுபுறத்தில் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டை படமும், இடதுபுறத்தில் வலிமையான இந்தியா என்ற வாசகத்துடன் செங்கோட்டை படமும் வைக்கப்பட்டது.

    ’இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் மரணம்

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுபெரும் திரைப்பட இயக்குநர் ’இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் சென்னையில் 23.12.14 அன்று மரணமடைந்தார்.

    கே.பாலச்சந்தர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் முதன்முதலாக 1965ஆம் ஆண்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களை வைத்து இயக்கிய ‘நீர்க் குமிழி’ முதல் 2006ஆம் ஆண்டு உதய்கிரண், விமலா நடிப்பில் வெளியான ‘பொய்’ வரையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியியுள்ளார்.

    நீர்க் குமிழி, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வெள்ளி விழா, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறது என்று எத்தனையோ புதுமையான கதாப்பாத்திரங்களை திரையில் நிஜமாக்கியவர் கே.பி.

    தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி.

    ஸ்ரீ பிரியா, விஜயகுமார், படாபட் விஜயலெட்சுமி, சரத்பாபு, ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதா, ஸ்ரீ வித்யா முதல் ராதாரவி, சுஜாதா, விவேக், பிரகாஷ்ராஜ், பிரியாமணி வரை ஏராளமான நடிகர், நடிகைகளை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பி.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் பிறந்து, மாநில அரசு விருது, தேசிய விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது முதல் பத்ம ஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது வரை எண்ணற்ற விருதுகளை பெற்றவர் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

    இத்தகைய பாலச்சந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  தனது திரைக்கதையை எழுதி முடித்துச் சென்றுவிட்டார்.

    Posted by விழியே பேசு... at 10:08 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: :விளையாட்டு செய்திகள், சினிமா, செய்தி

    2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்

    தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம்.

    பர்மா

    கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடும். இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க புது முயற்சிகளுள் ஒன்று - பர்மா.

    குக்கூ

    எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாக்கி இருந்தது 'குக்கூ'. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம். 

    புதுமுக இயக்குநர் ராஜுமுருகன் எதார்த்தமான திரைக்கதை அமைப்பில் கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளின் காதலை காமெடி கலந்து கூறியிருந்தார். 

    மாற்றுத் திறனாளிகள் படம் என்றாலே சோகமாக இருக்கும் என்ற எண்ணத்தை முறியடித்த படம் 'குக்கூ'.


    கோலி சோடா

    இந்தாண்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திய முதல் திரைப்படம் 'கோலி சோடா'. மிகக் குறைந்த பட்ஜெட், சுவாரசியமான திரைக்கதை, இமான் அண்ணாச்சியின் காமெடி கலந்த எதார்த்தமான வசனங்கள் என பார்ப்பவர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. எந்த நட்சத்திரமும் இல்லாமல் வெறும் 5டி கேமராவால் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த படமாக்கப்பட்ட படம். எளிமையானவர்கள் வலிமையானவர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார்.

    ஜீவா

    கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர்கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய படம் 'ஜீவா'. 

    ஆர்யா மற்றும் விஷால் இணைந்து வெளியிட்டதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. 

    இப்படத்தில் காதல் காட்சிகளைக் குறைத்து, முழுமையாக கிரிக்கெட் வீரர்களின் தேர்வின் பின்னால் நடக்கும் அரசியலை முழுமையாக கூறியிருந்தால் இந்திய திரையுலகம் கவனித்தக்க படமாக இருந்திருக்கும்.

    ஜிகர்தண்டா

    ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான 'ஜிகர்தண்டா' படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

    படத்தின் முக்கியமான அம்சம் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான கிண்டல். ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.

    வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் போகவில்லை என்றாலும் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்தும் காட்டினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

    சினிமா கனவைத் துரத்தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்குகிறார்கள்? சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம். இப்படத்தில் கதையே கிடையாது என்று வித்தியாசமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பு கிடைத்தது.

    காவியத்தலைவன்

    மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் ’காவியத் தலைவன்’ படத்தை பார்க்கும்போது அதிகரித்தது. 

    அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம், படத்தை உருவாக்கிய விதத்தில் கவனம் ஈர்த்தது. ஆனால் வசூல் ரீதியில் படம் தோல்வியடைந்தது. திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தந்தது.

    மெட்ராஸ்

    தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த கார்த்தியை நிமிரச் செய்த படம் 'மெட்ராஸ்'. வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். 

    அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். 

    கார்த்தி இப்படத்தில் ஒரு நாயகனாக இல்லாமல், கதாபாத்திரமாக பிரதிபலித்தது ப்ளஸ் ஆக அமைந்தது.

    முண்டாசுப்பட்டி

    புகைப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு நம்மிடம் நிலவிவந்த (மூட)நம்பிக்கைகளில் ஒன்று. அதுதான் இப்படத்திற்கான அஸ்திவாரம். இந்தாண்டு படங்களின் வரிசையில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் இது ஒன்று தான். வழக்கமான சினிமா கதைக் களத்திற்கு மாற்றான ஒன்றைத் தேர்வுசெய்து நகைச்சுவை ததும்ப அதைக் காட்சிப்படுத்தியிருந்த விதத்தில் அறிமுக இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டு கிடைத்தது.

    நெடுஞ்சாலை

    நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களில் தொடரும் திருட்டு, அருகில் ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம்.. இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வாங்கியவுடன் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. 

    வெளியானதும், நெடுஞ்சாலை மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்திய இயக்குநர், காதல், மனமாற்றம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.

    பண்ணையாரும் பத்மினியும்

    உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத பாசத்தையும் அதனால் ஏற்படும் பரிதவிப்பையும் அன்யோன்யமான காதலோடு கலந்து சொன்னது 'பண்ணையாரும் பத்மினியும்’. குறும்படமாக முதலில் வெளிவந்து, அதற்கு கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரைக்கு வந்த படம் இது. 

    திரைப்படமாக மக்களிடையே வரவேற்பு பெறாவிட்டாலும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. திருவனந்தபுரம், பெங்களூரு திரைப்பட விழாக்களில் இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    பிசாசு

    பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.பேய் என்று கொடூரமாக இருக்கும் என்பதை எல்லாம் விடுத்து பேய்க்குள்ளும் ஒர் ஈர மனம் உண்டு என்று கூறினார் இயக்குநர் மிஷ்கின். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் மிஷ்கினின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

    சதுரங்க வேட்டை

    ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம் எல் எம் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்திய படம். 

    லிங்குசாமி வாங்கியதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. 

    விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்புணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம்.

     காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருந்தால் சிறந்த திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

    தெகிடி

    குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வெளிவந்த விறுவிறுப்பான திரில்லர். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருந்தார். 

    தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை. 

    வசூல் ரீதியிலும் இப்படத்திற்கு வெற்றி கிடைத்தது.

    வெண்நிலா வீடு

    வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படம் பெண்களின் இரவல் நகை மோகத்தால் வரும் பிரச்சினைகள், ரியல் எஸ்டேட் திருட்டுத்தனங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் அலசப்பட்ட படம். குடும்பச் சூழலை மையப்படுத்தும் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

    Posted by விழியே பேசு... at 8:33 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்

    ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை புதுமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கி வருகிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடந்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவது தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இமான் இசையில் இசையமைப்பாளர் அனிருத் கானா பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

    இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என்று இமான் மற்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாது இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

    Posted by விழியே பேசு... at 8:30 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவரங்கள்

    டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி தனது 24 நாட் அவுட்டுடன் முடித்து கொண்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய சில சுவையான புள்ளி விவரங்கள்:

    சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் ஒரு கேப்டனாக 10,000 ரன்களை எடுத்துள்ள முதல் இந்திய பேட்ஸ்மென் தோனி. ரிக்கி பாண்டிங் 15,440 ரன்களையும், கிரேம் ஸ்மித் 14,878 ரன்களையும் ஸ்டீபன் பிளெமிங் 11,561 ரன்களையும், ஆலன் பார்டர் 11,062 ரன்களையும் ஒரு கேப்டனாக எடுத்த பேட்ஸ்மென்கள் ஆவர்.

    60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஒரு விக்கெட் கீப்பராக இதுவே அதிகமானதாகும், இவருக்கு அடுத்த படியாக முஷ்பிகுர் ரஹிம் 19 போட்டிகளில் விக்கெட் கீப்பர்/கேப்டனாக இருந்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுகளை வீழ்த்த தோனி விக்கெட் கீப்பராக பங்களித்துள்ளார். இது விக்கெட் கீப்பர்களில் 5-வது சிறந்த பங்களிப்பாகும். மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட், இயன் ஹீலி, ராட்னி மார்ஷ் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். 

    டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களை தோனி எடுத்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக 3-வது சிறந்த பங்களிப்பாகும். ஆடம் கில்கிறிஸ்ட் 5570 ரன்களையும் மார்க் பவுச்சர் 5,515 ரன்களையும் எடுத்துள்ளனர்.

    தோனி 60 டெஸ்ட்களில் கேப்டனாக செயலாற்றி 27 முறை வெற்றி கண்டுள்ளார். இதில் உள்நாட்டில் வென்றது 21. அயல்நாட்டில் 30 டெஸ்ட்களில் தோனியின் கீழ் 6 டெஸ்ட் போட்டிகளில்தான் இந்தியா வென்றுள்ளது. 15 போட்டிகளில் தோற்றுள்ளது. ஆனால் கங்குலி தலைமையில் 28 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு அயல்நாட்டில் தோனி தலைமையில் விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் இந்தியா தோல்வி. 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் தோனி எடுத்த 224 ரன்கள் ஒரு விக்கெட் கீப்பராக 3-வது பெரிய ஸ்கோராகும். ஜிம்பாவேயின் ஆண்டி பிளவர் 232 ரன்களையும், குமார் சங்கக்காரா 230 ரன்களையும் எடுத்துள்ளனர். தோனி இந்த இரட்டைச் சதம் எடுக்கும் முன்னர் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 192 ரன்கள். இதனை சாதித்தவர் புதி குந்தரென் என்ற இந்திய விக்கெட் கீப்பர். இது 1964 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சாதிக்கப்பட்டது. 

    ஆசியாவைத் தாண்டி தோனி டெஸ்ட் சதம் எடுத்ததில்லை அவரது அதிகபட்ச ஸ்கோர் ஓவலில் 2007ஆம் ஆண்டு எடுத்த 92 ரன்களே. 

    டெஸ்ட் கேப்டனாக தோனி 2871 ரன்களை எடுத்துள்ளார். இது இந்திய கேப்டனாக அதிகபட்ச பங்களிப்பு, சுனில் கவாஸ்கர் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 4449 ரன்களை எடுத்துள்ளார். இதே 47 டெஸ்ட்களில் அசாருதீன் 2,856 ரன்கள் எடுத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் தோனி 78 சிக்சர்களை அடித்துள்ளார். முன்னணியில் இருப்பவர் விரேந்திர சேவாக். இவர் 90 சிக்சர்களை அடித்துள்ளார்.

    Posted by விழியே பேசு... at 8:30 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடித்துக் கொண்ட பிரபலங்கள்!

    பாலிவுட் உலகத்தில் கிளாமர் மட்டுமல்லாது பரபரப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. பலர் இணைவார்கள். 

    பலர் இணைகளைப் பிரிவார்கள். மற்ற ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காதல், திருமணம் போன்ற சந்தோஷ தருணங்களைப் போலவே, விவாவகரத்து காதல் முறிவு போன்றவைகளும் காணப்பட்டன. இதோ, இந்தாண்டு பிரிந்து சென்ற பாலிவுட் ஜோடிகள் குறித்த ஒரு பார்வை...

    ஹிருத்திக் - சூசன்னே ... 

    பல ஆண்டுகளாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி. 13 காலம் இணைந்து வாழ்ந்த இந்தத் தம்பதி இந்தாண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர்.

     இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து போனார்கள். உண்மையில் ரோஷனை விட சூசன்னேதான் அவரை விட்டுப் பிரிந்து போக முதலில் முடிவு செய்தார். இதை ரோஷனே தெரிவித்திருந்தார். இரு தரப்பு குடும்பங்களும் இவர்களை சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால் சூசன்னே பிடிவாதத்தால் அது தோல்வியிலேயே முடிந்தது.

    கரன் சிங் குரோவர் - ஜெனீபர் விங்கட்... 

    அதேபோல கரன் சிங் குரோவரும், ஜெனீபர் விங்கட்டும் பிரிந்து போனார்கள். இது காதல் ஜோடியாகும். 

    தானும், தனது மனைவியும் கசப்புணர்வுடன் இருப்பதாக வந்த செய்திகள் உண்மைதான் என்று குரோவர் கூறியிருந்தார்.


    பிபாஷா பாசு - ஹர்மன் பவேஜா... 

    ஹர்மன் பவேஜாவுக்கும் தனக்கும் இடையே விரிசல் விழுந்திருப்பதாக பிபாஷா பாசு இந்த ஆண்டு அறிவித்தார். இருவரும் சேர்ந்து இதை கூட்டறிக்கையாகவும் வெளியிட்டனர். 

    இரண்டு வருடக் காதல் இது. வெளிநாட்டு மாடல் அழகி மீது பவேஜாவின் பார்வை விழுந்ததே பிபாஷாவின் பிரிவுக்குக் காரணம் என்கிறார்கள். அதேமயம் கரன் குரோவர் மீது பிபாஷா பாசப் பார்வை பார்த்ததே பவேஜா பிரிந்து போகக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.

    பூஜா பட் - மனீஷ் மகிஜா... 

    பிரபல நடிகையாக வலம் வந்தவரான பூஜா பட்டும், அவரது கணவர் மனீஷ் மகிஜாவும் 11 வருட கால தாம்பத்தியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 

    இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்தவர்கள். டிவிட்டர் மூலம் தனது கணவரைப் பிரிந்ததை அறிவி்ததார் பூஜா.

    டிம்பி கங்குலி... 

    அதேபோல ரியாலிட்டி ஷோ ஜோடியான டிம்பி கங்குலி, ராகுல் மகாஜன் ஆகியோரும் தனித் தனியே நடை போட்டனர்.

    மேலும் பல ஜோடிகள்... 

    இவர்கள் தவிர அர்மான் - தனிஷா, கெளஹர் - குஷால் ஆகிய காதல் ஜோடிகளும் இந்த ஆண்டு பிரிந்தனர்.

    Posted by விழியே பேசு... at 7:36 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவேற்பு! (வீடியோ)

    ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் பாடிய பிட்லி சே பாதேய்ன் என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

    பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இந்தப் பாடலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வெகு அரிதாகத்தான் தன் சொந்தக் குரலில் பாடுவார் அமிதாப் பச்சன்.

    முன்பு டான், கபி கபி, போல் பச்சன், கஹானி போன்ற படங்களில் சொந்தக் குரலில் பாடியுள்ளார். இப்போது முதல் முறையாக இளையராஜா இசையில் ஷமிதாப் படத்தில் பாடியுள்ளார்.

    ஒரு பாத்ரூமில் அமர்ந்தபடி அமிதாப் பாடுவது போல இந்தப் பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    பிட்லி சே பாதேய்ன்.. என்று தொடங்கும் அந்தப் பாடலில் இளையராஜாவின் மென்மையான இசையும், அமிதாப்பின் தனித்துவம் மிக்க குரலும் கேட்ட மாத்திரத்தில் யாரையும் வசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    ஷமிதாப் படத்தை பால்கி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.



    Posted by விழியே பேசு... at 7:23 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, வீடியோ

    அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?

    மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’ இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் ‘திகில்’ படமாக உருவாகியிருந்தது.

    இப்படத்திற்குப் பிறகு மிஷ்கின் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மிஷ்கின் பிசியாக இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படம் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியை உருவாக்க இருப்பதாக மிஷ்கின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    ஆதலால் இந்த ஸ்கிரிப்ட் அஞ்சாதே படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சாதே படத்தில் நரேன், விஜய லட்சுமி, அஜ்மல், பிரசன்னா, பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    Posted by விழியே பேசு... at 7:17 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... விடை கிடைப்பது எப்போது?

    டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அவரே விலக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு டெஸ்ட் பாக்கியிருக்கும்போதே டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணிக்குள் புகைச்சல் அதிகமாக இருப்பதை அவரது முடிவு காண்பிக்கிறது. இதனிடையே டோணியின் ரசிகர்கள் சில கேள்விகளை அவரிடம் முன்வைக்கின்றனர். 

    அதற்கு டோணியே பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்தியா அடுத்ததாக ஆறு மாதங்கள் கழித்துதான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. 

    அப்படியிருக்கும்போது இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்திருக்கலாமே? எதற்காக பாதியில் வெளியே வந்தார்? ஒரு வீரர் ஓய்வு பெறுவதை அந்த வீரரே பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தி சொல்வதுதான் வாடிக்கை. 

    அப்படியிருக்கும்போது, ஏன் பிசிசிஐ அந்த அறிவிப்பை வெளியிட்டது? ரவி சாஸ்திரி கோஹ்லிக்கு நெருக்கமாக இருப்பதுதான் டோணியின் இந்த முடிவுக்கு காரணமா? என்பது போன்ற விடை தெரியாத கேள்விகள் தொக்கி நிற்கின்றன. விடை சொல்வாரா டோணி?

    Posted by விழியே பேசு... at 6:54 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெளியில் பாய்ந்த விமானம்(வீடியோ)

    ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு இது போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். இந்நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்நிறுவனத்தின் போயிங் ஜம்போ விமானம் ஒன்று 162 பயணிகளுடன் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்த சம்பவத்தை நோக்கியே உள்ளது.

    இந்த சம்பவத்தினால் விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்டில் ஒழுங்கற்ற நிலை இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், எந்த தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படவில்லை என்று பொறியாளர்கள் உறுதி செய்தபின்னரே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஏர் ஏசியா விமானமும் விபத்துக்குள்ளாகி, பயணிகளை அதிர்ச்சியடைய செய்த தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் ஆர்பி-சி8972 என்ற பயணிகள் விமானம், 159 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பிலிப்பைன்சின் மணிலா நகரத்தில் இருந்து பானே தீவில் உள்ள கலிபோவுக்கு புறப்பட்டது. 

    கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தை தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியது. இதனால் ரன்வேயைத் தாண்டி புல்வெளியில் பாய்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். ஆனால், விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




    Posted by விழியே பேசு... at 6:38 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி, வீடியோ

    ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்

    ‘ஐ’ படத்தில் மூன்று கேரக்டரில் நடித்துள்ளதாக விக்ரம் தெரிவித்தார். இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. விக்ரம் ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்து பிரமாண்டமாக நடத்தினர். 

    பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. தமிழ் தவிர தெலுங்கு இந்தி மொழிகளிலும் ‘ஐ’ படம் வருகிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு நேரில் சென்று அந்தந்த மொழி பாடல் சி.டிக்களை வெளியீட்டு உள்ளனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம் பேசும் போது, தெலுங்கு ரசிகர்கள் என் படங்களுக்கு வரவேற்பு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஐ’ படம் தெலுங்கு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றார். 

    மும்பையில் நடந்த விழாவில் பேசியதாவது:– 

    சினிமா வாழ்க்கையில் ‘ஐ’ எனக்கு முக்கிய படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது பெருமை. இதில் மூன்று வித்தியாசமான கேரடக்டரில் வருகிறேன். ஒவ்வொரு கேரக்டரும் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தோற்றம், பேச்சு எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சினிமாவில் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு.

    நாடகங்களில் நடித்துக் கொண்டே தான் வளர்ந்தேன். வகுப்பில் இருந்ததை விட மேடை நாடகங்களில் பங்கேற்றது தான் அதிகம். நாடகத்தில் நடித்த போது ஆசிரியர்கள் எனக்கு ஜுலியஸ் சீசர்வேடம் அளித்தனர். எனக்கு அது பிடிக்கவில்லை. புரூட்டஸ் வேடத்தில் நடிக்கிறேன் என்றேன். அந்த கேரக்டர்தான் வித்தியாசமாக இருந்தது. அது போல் தான் சினிமாவிலும் எதிர்ப்பார்க்கிறேன். எப்போதும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. 

    இந்தியில் ஷோலோ படத்தின் வரும் கப்பார் சிங் கேரக்டர் மிகவும் பிடிக்கும். அந்த கேரக்டரில் நடிக்க ஆசை. 

    இவ்வாறு அவர் கூறினார். 


    Posted by விழியே பேசு... at 5:58 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி

    கமலஹாசன் கைவசம் விஸ்வரூபம் 2, பாபநாசம், உத்தமவில்லன் ஆகிய மூன்று படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. மூன்றில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது உத்தமவில்லன் முதலாவதாக வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    உத்தமவில்லன் படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடித்துள்ளனர். மறைந்த டைரக்டர் பாலசந்தரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜெயராம், பார்வதி போன்றோரும் உள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலும் முக்கிய காட்சிகள் படமாகியுள்ளன. படத்தின் கதை பற்றிய விவரம் வெளியாக வில்லை. ஆனாலும் சினிமா சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. 

    இதன் தொழில் நுட்ப பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்காக கமல் அங்கு கடந்த சில வாரங்கள் முகாமிட்டு இருக்கிறார். 

    பட வேலைகள் குறித்து கமல் கூறியதாவது:– 

    உத்தமவில்லன் படத்தின் இசை சம்பந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டிரெய்லரும் தயாராகி விட்டது. விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும். 

    இவ்வாறு கூறினார். 

    ஜனவரி இறுதியில் படம் ரிலீசாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து பாபநாசம், படம் வரும். இது மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றிகரமாக ஓடிய திர்ஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். இதன் டப்பிங் ரீரிக்கார்டிங், பணிகளும், விறு விறுப்பாக நடக்கிறது.


    Posted by விழியே பேசு... at 5:47 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?

    இந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரஜினிகாந்தின் லிங்கா படம் எதிர்ப்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. 

    கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த லிங்கா படம் தமிழ், தெலுங்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு வரலாறு காணாத ஒபனிங் வசூல் கிடைத்தது

     மூன்று தினங்களில் ரூ 104 கோடியை வசூலித்த இந்தப் படம், இப்போது 20 நாட்கள் தாண்டிய நிலையில் ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது. 

    இத்தனைக்கும் இந்தப் படம் குறித்து வந்த எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் கொஞ்சமல்ல. படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே பெரிய நஷ்டம் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின. 

    கேரளாவில் எந்த மலையாளப் படமும் சரியாகப் போகாத நிலையில் லிங்கா இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ரூ 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. 

    கர்நாடகத்தில் ரூ 12 கோடி வசூலாகியுள்ளது. இந்த நிலையில் லிங்காவின் இந்திப் பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது. தமிழ், தெலுங்கில் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததால், படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் வெளியிட்டனர்.

     700க்கும் அதிகமாக அரங்குகளில் இந்தி லிங்கா வெளியானது. மும்பையில் மட்டும் 65க்கும் அதிகமான அரங்குகளில் திரையிடப்பட்டது. டெல்லியில் 40 அரங்குகளிலும், புனே மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 30 அரங்குகளிலும் படம் வெளியானது.

     இவை தவிர, லக்னோ, பாட்னா, சண்டிகர், குர்கான், அகமதாபாத், போபால், கொல்கத்தா, அமிர்தசரஸ், பரெய்லி, அஜ்மீர், ஜலந்தர், ஜெய்ப்பூர், தன்பாத், டேராடூன், காந்தி நகர், கோவா, ஹோஷியார்பூர், இந்தூர், ஜபல்பூர், கான்பூர், குல்லு, லாத்தூர், லூதியானாஸ மீரட், உஜ்ஜெயினி, லூதியானா, மொஹாலி, மதுரா, மாலேகான், நாக்பூர், ராய்பூர், சிலிகுரி, ஹால்தியா, வதோத்ரா, உதய்பூர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகி, ஓடிக் கொண்டுள்ளது. 

    பிவிஆர் கைவசம் உள்ள 400-க்கும் மேற்பட்ட மால்களில் லிங்கா திரையிடப்பட்டுள்ளது. 

    முதல் வாரம் முடியவிருக்கும் நிலையில் அனைத்து அரங்குகளிலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. 

    எதிர்ப்பார்ப்பு குறைவாக இருந்ததால், வட இந்தியாவில் இந்தப் படம் மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


    Posted by விழியே பேசு... at 5:35 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

    ஐ படத்தின் கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்திடம் சொன்னதாகவும், அவர் நடிக்க மறுத்ததால்தான் இப்போது விக்ரம் நடித்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

    ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில், இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார். 

    அவர் கூறுகையில், 

    "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன். 

    ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார். 

    தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்தான் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    Posted by விழியே பேசு... at 5:19 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

    தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வேலை நேரத்தை குறைப்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். 

    அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முதலில் சுமூகமான தீர்வுகள் ஏதும் எட்டவில்லை. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டது.  இந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர் சங்கம் சார்பில் சண்முகம், நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சின்னசாமி, சி.ஐ.டி.யு.. சங்கம் சார்பில் சவுந்தரராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மொத்தம் 12 தொழிற்சங்கம் சார்பில் அதன் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். 

    கோரிக்கை ஏற்பு

    ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்க அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கைதான தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவை ஓரிரு நாளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளனர். 


    Posted by விழியே பேசு... at 11:38 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.