தமிழ்நாட்டில்
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த
ஆண்டு மார்ச் மாதம் நடைபெற
உள்ளது.
பிளஸ்-2
தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள்
எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து
125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும்
எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின்
முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.
இதன்படி,
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச்
31-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வுகள் மார்ச் 19-ந்தேதி தொடங்கி, ஏப்ரல்
10-ந்தேதியுடன் முடிவடைகிறது.
பிளஸ்-2
தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-
2015-ம்
ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல்
தாள்.
6-ந்தேதி-
தமிழ் இரண்டாம் தாள்.
9-ந்தேதி-
ஆங்கிலம் முதல் தாள்.
10-ந்தேதி-
ஆங்கிலம் இரண்டாம் தாள்.
13-ந்தேதி-
கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர்
சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.
16-ந்தேதி-
வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
18-ந்தேதி-
கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந்தேதி-
அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.
23-ந்தேதி-
வேதியியல், அக்கவுண்டன்சி.
27-ந்தேதி-
இயற்பியல், பொருளாதாரம்.
31-ந்தேதி-
உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக
கணிதம்.
எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வுக்கான கால அட்டவணை விவரம்
வருமாறு:-
மார்ச்
19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.
24-ந்தேதி-
தமிழ் இரண்டாம் தாள்.
25-ந்தேதி-
ஆங்கிலம் முதல் தாள்.
26-ந்தேதி-
ஆங்கிலம் இரண்டாம் தாள்.
30-ந்தேதி-
கணிதம்.
ஏப்ரல்
6-ந்தேதி- அறிவியல்.
10-ந்தேதி-
சமூக அறிவியல்.
பிளஸ்-2
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி
பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல்
12 மணிக்கு முடிவடையும்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்
த.சபீதா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் மாணவ-
மாணவிகளை புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில்
இடம்பெறுகிறது. அது மட்டுமில்லாமல், மாணவ-
மாணவிகளின் பதிவு எண்களும் அந்த
விடைத்தாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment