ஜப்பானில்
6 பேரை திருமணம் செய்து கொலை செய்த
பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பரில்
முகோ நகரத்தில் 75 வயதான இசோ ககேஹீ
என்பவர் அவரது வீட்டில் இறந்து
கிடந்தார். முதலில் இருதயக் கோளாறு
காரணமாக இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறை,
மனைவியை இழந்து தனியாக வசித்து
வந்த அந்த முதியவர் இறப்பதற்கு
ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒரு
பெண்ணை திருமணம் செய்திருந்த விவரம் தெரியவும் வழக்கு
பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது.
மரணமடைந்த
இசோவின் ரத்தத்தை சோதனைக்கு உட்படுத்தும் போது அதில் சயனைடு
கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 68 வயதான அவரது புது
மனைவி சிசாகோவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர் திருமணம் அல்லது
காதல் என்ற ஏமாற்று வித்தையால்
இதுவரை ஆறு முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளது
தெரியவந்தது. இதில் ஒருவர் இசோ
ககேஹீ என்ற அதிர்ச்சி தகவல்
தெரிய வந்துள்ளது. இறந்த அனைவரும் சிசாகோவை
சொத்துக்கான வாரிசாக நியமித்த கொஞ்ச
காலத்திலேயே இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து
அவர் ‘கறுப்பு விதவை’ என்று
செய்திகளில் ஒளிபரப்ப்பட்டார். மனைவியை இழந்த, விவாகரத்தான
பணக்கார வயதான ஆண்களை இணையம்
மூலமாக காதலிப்பதாக தெரிவித்து தன் வலையில் விழச்செய்துள்ளார்.
No comments:
Post a Comment