தேர்தல்
பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக, பாஜக அமைச்சர் நிரஞ்சன்
ஜோதி மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார்.
நிரஞ்சன்
ஜோதி, கடந்த மாதம் மத்திய
அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரது சர்ச்சைக் கருத்தால்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று
கடும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை
நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கு
டெல்லியில் பிரச்சாரக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய உணவு பதப்படுத்துதல்
துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி,
"டெல்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி
அமைய வேண்டுமா? இல்லை... முறைத்தவறி பிறந்தவர்களின் ஆட்சி அமைய வேண்டுமா
என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்"
என கூறியதாகத் தெரிகிறது.
ராமரை பின்பற்றாதவர்கள் முறைத்தவறி பிறந்தவர்களின் என்று பொருள்படும் விதத்தில்
அமைச்சர் பேசியுள்ளதாக கூறி, நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் இன்று உறுப்பினர்கள் கடும்
கண்டனம் தெரிவித்தனர். பாஜக பிரிவினைவாத அரசியலில்
ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இது குறித்து, காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசுகையில்,
"அமைச்சரின் சர்ச்சைக் கருத்து தொடர்பாக பிரதமர்
நரேந்திர மோடி அவையில் விளக்கமளிக்க
வேண்டும்" என்றார்.
பகுஜன்
சமாஜ்வாதி தலைவர் மாயாவதி கூறும்போது
இதுபோன்ற கருத்துகள் இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள
மதச்சார்பற்ற அரசு என்ற கொள்கைக்கு
எதிரானதாக உள்ளது. இத்தகைய கருத்தை
தெரிவித்த நிரஞ்சன் ஜோதி, அரசியலமைப்பு பதவியை
வகிக்கத் தகுதியற்றவர் என்றார். மேலும் பாஜக அவரை
நீக்க வேண்டும் என கூறினார்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம்
யெச்சூரி கூறுகையில், "அமைச்சர் மீது போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு
செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். காங்கிரஸ்
தலைவர் அம்பிகா சோனி, பாஜகவின்
பிரிவினைவாத அரசியலும், சிந்தனையும் வெளிப்பட்டுவிட்டது என கூறினார்.
கண்டனம்
வலுக்கவே, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் நிரஞ்சன்
ஜோதி, தனது கருத்துகளுக்காக வருந்துவதாக
கூறினார்.
மேலும்
அவர் கூறுகையில், "தேச விரோத செயல்களில்
ஈடுபடுவர்களை குறிப்பிட்டே நான் அவ்வாறு பேசினேன்.
தேசத்தை சூறையாடுபவர்களை வேறு எப்படி அழைக்க
முடியும்? இதற்கு ஏன் இவ்வளவு
கண்டனம் எழுப்பப்படுகிறது.
தேசத்தை
ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்களையும், எல்லையில் பாதுகாப்பை
சமரசம் செய்ய தயாராக இருப்பவர்களையுமே
சுட்டிக்காட்டிப் பேசினேன். எனது வார்த்தைகளில் எவ்வித
உள் அர்த்தமும் இல்லை. இருப்பினும், எதிர்க்கட்சியினர்
கண்டனம் தெரிவிப்பதால் அவையில் மன்னிப்புக் கேட்கவும்
தயாராக இருக்கிறேன்" என கூறினார்.
No comments:
Post a Comment