இந்தியாவில் ஓநாய் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நேற்று தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரைக் கொன்று குவித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ’சிமி’ இயக்கத் தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கு அவர்கள் ’ஒநாய் தாக்குதல்’ என்று பெயரிட்டு இருப்பதாகவும் உளவு துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிமி இயக்க தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் நடத்த, அதிக வாய்ப்பிருப்பதாகவும் உளவு அமைப்புகள் மத்திய அரசுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கல்வி நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று நடந்த தாக்குதலையடுத்து, மாலையே இந்த புதிய எச்சரிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாதுகாப்பு நடப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஒத்திகைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன.
நேற்று தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரைக் கொன்று குவித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ’சிமி’ இயக்கத் தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கு அவர்கள் ’ஒநாய் தாக்குதல்’ என்று பெயரிட்டு இருப்பதாகவும் உளவு துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிமி இயக்க தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் நடத்த, அதிக வாய்ப்பிருப்பதாகவும் உளவு அமைப்புகள் மத்திய அரசுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கல்வி நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று நடந்த தாக்குதலையடுத்து, மாலையே இந்த புதிய எச்சரிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாதுகாப்பு நடப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஒத்திகைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment