எனக்கு
கிடைத்த சக்தி மூலம் இளம்பெண்களின்
உடலை தடவி ரசிப்பேன் என
குமரியில் கைதான சாமியாடி பகீர்
வாக்குமூலம் அளித்துள்ளார்.குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்
அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர்
சுயம்புலிங்கம் (24). கோயிலில் சாமி ஆடி குறி
சொல்வார்.
இவர் மீது இளம்பெண்
ஒருவர், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார்
அளித்தார். அதில், தன்னை காதலித்து
திருமண ஆசை காட்டி பலாத்காரம்
செய்ததுடன், தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்
தன்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், எரித்து
கொன்று விடுவதாக மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில்
ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் தேடி
வரும் சுயம்புலிங்கம் கல்லூரி மாணவி ஒருவரை
கடத்தி சென்ற தகவல் தெரிய
வந்தது. இந்நிலையில், சுயம்புலிங்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர் கடத்தி சென்றதாக கூறப்பட்ட
கல்லூரி மாணவியையும் போலீசார் மீட்டனர்.
பிடிபட்ட
சுயம்புலிங்கத்திடம் நடந்த விசாரணையில் பல
திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அவர்
இளம்பெண், கல்லூரி மாணவி உள்பட
மேலும் சில பெண்களின் வாழ்க்கையை
சீரழித்தது தெரிய வந்துள்ளது.
கைதான
சுயம்புலிங்கத்தை நேற்று இரவு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். அவரால் கடத்தி செல்லப்பட்டு
மீட்கப்பட்ட மாணவி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான சாமியாடி சுயம்புலிங்கம்
போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் சிறு வயது
முதலே சாமியாடியாக இருந்து வருகிறேன். ஒரு
பூசாரி மூலம் எனக்குள் சில
சக்தி வந்தது. அதன் மூலம்
நான் குறி சொல்ல தொடங்கினேன்.
இளம்பெண்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி என்னிடம் வந்து
கேட்பார்கள். அப்போது அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு ஆசை வந்து
விடும். அந்த நேரங்களில் அவர்களின்
உடலில் எண்ணெய் தடவி விடுவது
போல் நான், எனது ஆசையை
தீர்த்துக் கொள்வேன்.
பெண்களின்
உடலை தடவி, ரசிப்பேனே தவிர,
வேறு எந்த தவறும் நான்
செய்ய வில்லை. என்னுடன் விருப்பபட்டு
வருபவர்களை அழைத்து சென்று இருக்கிறேன்.
யாரையும் நான் கட்டாயபடுத்தி அழைத்து
செல்லவில்லை. என்னுடன் பல பெண்கள் பழகி
உள்ளனர். அவர்களிடம் கேட்டால் என்னை பற்றி தெரியும்.
இவ்வாறு
சாமியாடி கூறியுள்ளார்.இதற்கிடையே சுயம்புலிங்கத்தின் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அதில்
ஏற்கனவே அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்
மற்றும் கல்லூரி மாணவி ஆகியோரின்
போட்டோக்கள் தவிர, மேலும் சில
இளம்பெண்களின் போட்டோக்களும் இருந்தன. அந்த இளம்பெண்களும் இவரால்
சீரழிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment