ஜெகதீஸ்வரியின் கடிதத்தில் இருந்த வரிகளே திரும்ப திரும்ப சங்கர் மனதில் வந்து வந்து போனது.
"உடனே என்னை கூட்டிப் போகலைன்னா செத்துடுவேன்" சங்கர் மனது அதிவேகத்தில் துடித்தது.
சங்கர் ஒரு முடிவுக்கு வந்தான். இன்னும் இப்படியே உக்காந்து இருந்தால் ஜெகதீஸ்வரியை இழக்க வேண்டி வரலாம்.... ஒருவேளை அவளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தாங்கன்னா கூட பரவாயில்லை. அவளை தூரமா எட்டி நின்று பார்த்துகிட்டே வாழ்ந்திட்டு போகலாம். ஆனா, அவள் செத்திட்டா "இல்ல ................நான் விடமாட்டேன்.... என் ஜெகதீஸ்வரியை செத்து போக விட மாட்டேன்........." சங்கர் உரக்க கத்தினான்.
எழுந்தான் அந்த சின்ன அறையில் அங்கும் இங்குமாக நடந்தான். "இல்ல ...இல்ல...என் ஜெகதீஸ்வரி எனக்கு வேணும் ....யோசிடா சங்கர் உன்னால முடியும் டா யோசி ..." என்று தனக்கு தானே சொல்லி கொண்டு தரையை காலால் எட்டி உதைத்தான்.
அவன் மனதில் கவலையும் குழப்பமும் ரெட்டை தண்டவாளமா நெஞ்சு பூரா ஓடி அவனை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. ஆம், நேரா ஜெகதீஸ்வரியோட அப்பாவை போய் பார்க்கலாம் என்று தீர்மானித்தான்.
நேராக ஜெகதீஸ்வரியின் வீடு பார்த்து நடந்தான். சின்ன வயசு தீர்க்கமான முடிவெடுக்கவா தெரியும். அவனுக்கு அப்போதைய எண்ணம் முழுவதும் அவன் காதல் தேவதையை யாருக்காகவும் இழந்து விட கூடாது என்பது தான். அவனை தீண்டிய தென்றல் கூட அவனுக்கு அச்சத்தை தான் கொடுத்தது. தூரத்தில் கேட்க்கும் குயில்களின் சங்கீதம் கூட அவனுக்கு ஒப்பாரியாகவே கேட்டது. நடை வேகப்படுத்தினான் "சீக்கிரமாக போய் சேரணும். கடவுளே! நன் போகுற வரைக்குமாவது என் ஜெகதீஸ்வரி தப்பான முடிவு எதுவும் எடுக்காம காப்பாத்துப்பா உனக்கு 1000௦௦௦ தேங்காய் உடைக்கிறேன்" என்று வேண்டி கொண்டான். காதலிக்கு சுண்டல் வாங்கவே காசில்லாதவன் 1000௦௦௦ தேங்காய் உடைப்பானா. என்ன பண்ணுறது எல்லாம் அவன் காதலி மீது வச்சிருந்த அளவுக்கடந்த அன்பு தான் அவனது சக்தியையும் மீறி வேண்டுதல் வைத்ததா? அல்லது கடவுள் கொடுக்கல்லன்னா வீட்டுக்கு வந்து கடன்காரன் மாதிரி சாமானமெல்லாம் தூக்கி போட்டு கத்தவா போறார்ன்னு நினைச்சானோ தெரியல்ல.
அதுக்குள்ள வீட்டு பக்கத்தில வந்திட்டான். அங்கே ஜெகதீஸ்வரியின் அப்பா நின்று கொண்டு இருந்தார் பார்ப்பதற்கு பாளையப்பட வில்லனாக தான் தெரிந்தது. மெல்ல சங்கர் அவர் பக்கம் போனதும் தான் தாமதம் சங்கர் பேசும் முன்பே அவர் பேச ஆரம்பிச்சிட்டார்.
"ஒழுங்கா விலகி போறியா ? உன் காலை ஓடிக்கட்டுமா? ன்னு கேட்டாரு என்பதை விட கத்தினார் என்பது தான் சரியாக இருக்கும்.
"ஏன்....மாமா; மகளை நடக்க முடியாதவனுக்கு தான் கொடுக்கனுன்னு ஏதாவது வேண்டுதலா?" சங்கர் கேட்டான். (சங்கர் அப்படி கேட்பதற்கு காரணம் இருந்தது ஜெகதீஸ்வரிக்கு பேசி பரிசம் போட்டு இருக்கும் பூபாலன் ஒரு நடக்க முடியாதவர். அதனால தான் இப்படி கேட்டான்) ரெம்பவும் ஆத்திரமாகிட்டார்.
"நாயே ...எவ்வளவு திமிர் உனக்கு உன்னை கொல்லாம விட மாட்டேன் "ன்னு கத்திட்டு வந்தாரு அவரு கூட இருந்தவங்க எல்லாம் அவரை சமாதான படுத்தினாங்க. பாவம் கத்தின கத்தலில் அவருக்கு நெஞ்சு வலி வந்திடுச்சு. நெஞ்சை பிடிசுகிட்டு அப்படியே உக்காந்திட்டாரு. சங்கருக்கு பயமா போச்சு எங்க இவரு மண்டைய போட்டு நமக்கும் நம்ம காதலுக்கும் சேர்த்து ஆப்பு வசிடுவாரோன்னு பயந்தான். அங்கிருந்த கூட்டம் சங்கரை துரத்தியது. ஓடினான் அங்கிருந்து ஓடினான். இப்போ இந்தய 'ஒலிம்பிக்' சங்க நிர்வாகிகள் மட்டும் சங்கரை பார்த்திருக்கணும் அப்படியே கொத்திட்டு போய் 'ஒலிம்பிக்'ல ஓட விட்டு இருப்பாங்க அப்படி ஒரு ஓட்டம் ஓடினான்.
"இப்படி ஆகி போச்சே ...இன்னும் என்ன பண்ணலாம் ஏதாவது பண்ணியாகணும் அதுவும் சீக்கிரமா . என்ன பண்ணுறது யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். இவங்க கிட்ட எல்லாம் பேசி பலனில்லை. நேரா ஜெகதீஸ்வரியோட முறைமாமனும் ஜெகதீஸ்வரியை கட்டிக்க போறவனுமான பூபாலனை போய்ப் பார்க்கலாம் என்பது தான் அந்த முடிவு.
போய் ஒழுங்கா பேசி பார்க்கலாம் காலில வேணும்னாலும் விழலாம். ஆனாலும் முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணலாம். என்று குழம்பியப்படி பூபாலன் வீட்டை அடைந்தான். ஆனால் இந்த விஷயம் ஜெகதீச்வரிக்கு சங்கர் ஜெயிலுக்கு போகிற வரைக்கும் தெரியாது.
பூபாலன் முன்னால் தயங்கி தயங்கி நின்றான் .
"என்னபா.. என்ன வேணும் " பூபாலன்
"நானும் ஜெகதீசும் உசிருக்குசிரா காதலிக்கிறோம்"ன்னு தயங்கி தயங்கி சொல்லியே விட்டான். 'இப்போது அடிச்சு தொரத்த போகிறார் அடுத்த ஓட்டத்துக்கு ரெடி ஆகுடா சங்கர்' என்று தனக்கு தானே சொல்லி கொண்டான். ஆனால், பூபாலன் முகத்தில் கோபத்தை காணவில்லை.
ம்ஹூம் . சிரித்தார்.
"சரி நான் விட்டுத் தரேன்! அவளை எப்படி காப்பாத்த போறே?"
இது தானே கஷ்டமான கேள்வி இதை போய் இப்போ கேட்கிறாரே என்று நினைத்து கொண்டான்.
"தெரியல்ல ..ஆனா, ஜெகதீஸ்வரி எனக்கு வேணும் அவ இல்லன்ன நான் செத்திடுவேன். அவளும் அப்படி தான்" சங்கர்.
அதற்கும் சிரித்தார்.
"சங்கர் ..! மூளையால் முடிவெடு! இதயத்தால எடுக்காதே" பூபாலன்
சங்கருக்கு சுத்தமாகவே ஒன்றும் புரிய வில்லை அப்போது. புரிந்த பிறகு என்ன மூளையாலா முடிவெடுத்தான்....!
பூபாலன் தான் யோசனை கூட கொடுத்தார்.
"ஓடி போங்க " தீக்குச்சிய பத்தவச்ச மாதிரி சங்கர் கண்களில் 'பளிச்'சுனு வெளிச்சம்.
"ஓ.....டி...... போ.......ற.....தா....!" சங்கர் ஆச்சரியமாக கேட்டான்.
"உம்! சங்கர் வாழுறதுக்கு தான் வாழ்க்கை ...மூச்சுவிட்டுகிட்டிருக்கிறது இல்ல! புரியுதா?"
"உம் புரியுது...அண்ணே! ரெம்ப நன்றி அண்ணே!" கையெடுத்து கும்பிட்டான் சங்கர் பூபாலனை.
வீட்டுக்கு கிளம்பினான். ஜெகதீஸ்வரியை கூட்டி கொண்டு ஓடுவதற்கான திட்டங்களை தீட்டியப்படி....
தொடருவேன்....
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்
ஆட்டோ சங்கர் 2(தொடர் )

No comments:
Post a Comment