சங்கர் யோசித்தப்படியே வீட்டுக்கு வந்தான். அப்போது சாயங்காலம் ஆகி இருந்தது. ஓடுவது என்று முடிவாகிவிட்டது,. ஆனால் அதற்கு நாள் கடத்த விரும்பவில்லை, அதில் சங்கருக்கு உடன்பாடும் இல்லை.
எப்போதுமே காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து. பொண்ணுக்கும் பரிசமேல்லாம் போட்ட பிறகு தாமதிக்கும் ஒவொரு நொடியும் பிரிவு வந்து வாசல் கதை தட்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தான். அதனால் உடனேயே ஜெகதீஸ்வரியின் தோழி மூலமாக ஓடி போகும் தனது முடிவை ஜெகதீஸ்வரிக்கு தெரியபடுத்தினான். அதுவும் அன்றைய தினமே ஓடி போலாம் என்றும் தெரியப்படுத்தினான் அதுவும் சாயங்காலமே இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்.
சங்கர்திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கவே அன்று சாயங்காலமே ஊரை விட்டு கம்பி நீட்டினார்கள் சங்கரும் ஜெகதீஸ்வரியும்.
ரெண்டு பேரும் ஊர் எல்லையை கடக்கிறப்ப மாரியம்மன் கோயில் தட்டுப்பட, ஜெகதீஸ்வரி, "கொஞ்சம் நில்லுங்கள் " என்றாள்.
"ஏன்டா....ஊரு எல்லைய கடக்கட்டும் அப்புறமா நிக்கலாம் இப்போ நின்னா யாரவது பார்த்தாங்கன்னா அவ்வளவு தான். இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிடும்"-சங்கர்.
"இல்லைங்க , நம்ம காதல் கைகூடினா கற்பூரம் ஏத்துறதா அம்மனுக்கு வேண்டுதல். கொஞ்சம் நில்லுங்க! கற்பூரம் ஏத்திட்டு வறேன்" என்றாள்.
"ஜெகதீஸ்வரி....நில்லு! நானும் வரேன்டா...நானும் கற்பூரம் ஏத்தணும்" என்றான் சங்கர் ஜெகதீஸ்வரி குழப்பமாக பார்த்தாள்.
"எதுக்கு நீங்கவ்ளும் என்னை மாதிரியே வேண்டி கிட்டீங்களா!" ஜெகதீஸ்வரி.
"இல்ல டா...உங்க அப்பாக்கு நெஞ்சுவலி வந்துசில்ல...அப்போ எதுவும் ஆக கூடாதேன்னு நானும் அம்மனுக்கு வேண்டிகிட்டிருந்தேன்" என்றான் சங்கர்.
அந்த பதட்டமான மனநிலையிலும் ஜெகதீஸ்வரி சிரித்துவிட்டாள்.
"ஏங்க ... என்னை அப்படி உங்களுக்கு பிடிக்குமாங்க"
"நீன்னா உயிர்டா .... நீ இல்லாம ஒரு வாழ்க்கைய நினைக்கவே முடியல்ல"-சங்கர்.
ஜெகதீஸ்வரி சங்கரின் கையை பிடித்து விட்டாள்.
ரெண்டு பெரும் அம்மனுக்கு கற்பூரம் ஏத்திட்டு ஊர் எல்லையை கடந்தனர்.
பஸ் வந்ததும் ரெண்டு பெரும் ஏறிகிட்டாங்க. பஸ்ல வேற நெருங்கியடிச்ச கூட்டம். உக்கார கூட இடம் கிடைக்காம மூச்சு முட்டி போனது ரெண்டு பேருக்கும். என்ன பண்ணுறது நம்ம பஸ்ல என்னைக்கும் கூட்டம் இப்படி தான் இருக்கும் ஆனா போக்குவரத்து துறை மட்டும் என்னைக்கும் நஸ்டத்தில ஓடும்.
"இப்போ நாம எங்கே போறோம்"-ஜெகதீஸ்வரி.
"என்னோட சொந்த ஊருக்கு!"-சங்கர்.
சங்கர் சொன்னதும் அவளுக்கு கரெண்டை தொட்ட மாதிரி அதிர்ச்சி.
"சொ...சொந்த ஊருக்கா? உங்க ஆளுக அங்கே தேடி வர மாட்டாங்களா?"-ஜெகதீஸ்வரி.
" அங்கே நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க! யூகிச்சு அங்கே வரதுக்கு ஒரு வாரம் பத்து நாள் ஆகும்...அதுக்குள்ளே நமக்கு எல்லாமே முடிஞ்சுடும்."சங்கர்
சங்கர் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஜெகதீஸ்வரியின் முகத்தில் வெட்க சிவப்பு.
அதற்கு பிறகு அமைதியாக இருந்தாள். சங்கர் தான் தொடர்ந்தான்.
"என் சொந்த ஊரு காங்கேயநல்லூர். அங்கே என் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருக்கார். பெரிய அறிஞர் அவர்...அவர் கிட்டேதான் போய் வழி கேட்ககலாம்னு இருக்கேன்...அவர் கண்டிப்பா நமக்கு நல்ல வழி காட்டுவார்" என்று சொன்னான்.
ஜெகதீஸ்வரி முகத்தில் கலவரம்."உங்க அப்பாவோட நண்பரா?"
சங்கர் சிரித்தான் " மண்டு! மண்டு! என் அப்பாவோட நண்பரா இருந்தாலும் இவர் ரெம்ப மேதை! ஒழுக்கசீலர்! இடி இடிக்கிற வானத்தில தானே நிலவும் இருக்குது ....அது மாதிரி தான்.....இவரு! ரெம்ப பெரியவர்....நம்மை நிச்சயமா ஆதரிப்பார்." என்று சொன்னான் சங்கர். ஆனாலும் ஜெகதீஸ்வரியால் அதை முழுவதுமாக நம்ப முடிய வில்லை. எப்படியோ ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தது பஸ். அப்பாடா என்று ரெண்டு பெரும் இறங்கினார்கள். எதோ கலவத்தில் மாட்டிகிட்டு மீண்டு வருபவர்களை போல இருந்தது பஸ்ல இருந்து வந்து இறங்கினதும். அவ்வளவு நெரிச்சல் கூட்டம்
அந்த பெரியவரை பார்க்க சென்றார்கள்.
அந்த பெரியவர் இவர்களை பார்த்ததும் கோபித்துக் கொண்டார்.
"முருகா! முருகா! இது என்ன சோதனை " என நொந்து கொண்டார்.
கட்டிடங்கள் கூட உறுதியாக இல்லைன்னா நிலைக்கிறது இல்லை.
தலைவர்கள் கூட அவங்க கொள்கைள உறுதியா இல்லைன்னா கொஞ்ச நாளிலேயே இருக்கிற இடம் தெரியாம தான் போவாங்க. இது பொதுவா எல்லாவற்றுக்கும் பொருந்தும், காதலுக்கும் கூட!
சங்கரும் ஜெகதீஸ்வரியும் அவங்களோட முடிவுல உறுதியாக இருப்பதை அந்த பெரியவர் தெளிவாக புரிந்து கொண்டார்.
"ரெண்டு பேருமே இன்னும் மேஜராகல்ல! தவிர இது ஆடி மாதம் வேற....கல்யாணம் யாருமே இப்போ செய்றதில்லே!! வேற வழி இல்லாம அவசரம் கருதி நான் இதை ஆதரிக்கிறேன்.....ஆனா அங்கீகரிகல்லை ! புரியுதா" -என்றார் அந்த பெரியவர்.
பிறகு அந்த பெரியவரே அவர் கையால மாலை எடுத்து கொடுத்து சங்கருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கொடுத்து அந்த திடீர் திருமணத்தை நடத்தி வைத்தார். சங்கருக்கும் சரி ஜெகதீஸ்வரிக்கும் சரி ரெண்டுபேருக்குமே ஆகாயத்தில் பறப்பதை போன்று இருந்தது. காரணம் தங்கள் காதல் கல்யாணத்தில் முடிந்துவிட்டது என்பது மட்டுமல்ல. இந்தியாவே மதிக்கும் இந்த பெரியவரின் கையால் மாலை எடுத்து கொடுத்து அவரே இவங்க கல்யாணத்தை நடத்தி வைத்தது தான் அவர்களை சந்தோஷ வானில் சிறகடிக்க வைத்தது. இரட்டை சந்தோசத்தில் இருவரும் ஒருவராய் சிறகடித்து பறந்தார்கள்.
சங்கரின் காதலை அங்கீகரிக்காமல் ஆதரித்து திருமணமும் செய்து வைத்த அந்த பெரியவர் யார் தெரியுமா.....? திருமுருக கிருபானந்த வாரியார் தான்.
தொடருவேன்....
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்
ஆட்டோ சங்கர் 2(தொடர் )
ஆட்டோ சங்கர் 3 (தொடர் )


No comments:
Post a Comment