சல்மான்கான் நடித்த ஏக்தா டைகர் இந்திப்படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஆகஸ்டு 15-ந் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் டிரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
சல்மான்கான் படங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல மார்க்கெட் உள்ளது. தியேட்டர்களில் அவரது படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். எனவே ஏக்தா டைகர் படத்தையும் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து டிரெய்லரை முன்கூட்டி திரையிட அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் டிரெய்லருக்கு பாகிஸ்தான் திடீரென தடை விதித்துள்ளது. டிரெய்லரை ஒளிபரப்பக்கூடாது என அனைத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்திய உளவு அமைப்பான 'ரா'வுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் நடக்கும் மோதலே கதை. சல்மான் 'ரா' ஏஜென்டாக வருகிறார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலைகளை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பது காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
ஐ.எஸ்.ஐ. அவமதிப்பது போல் படம் உள்ளதால் பாகிஸ்தானில் டிரெய்லருக்கு தடை விதித்துள்ளனர். படத்தையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளனர். டிரெய்லர் ரிலீசையொட்டி சல்மான்கான் பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. பயணத்தை அவர் ரத்து செய்து விட்டார்
No comments:
Post a Comment