விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, July 26, 2012

    மறக்கப்பட்ட நாயகி : லட்சுமி சாகல்

     நமிதாவை, நயன்தாராவை, ஹன்சிகாவைத் தெரிந்த நமது இளம் சந்ததியினரில் எத்தனை பேருக்கு லட்சுமி சாகல்லைப் பற்றித் தெரியும்..?



    நாம் காலத்துக்கு காலம் 'இந்தியாவின் வீரப் பெண்மணி' என பலரை விளிக்கிறோம்.  தமிழனுக்கு இப்படியான 'டெரர்' சிந்தனைகள் வருவது சகஜம் என்பதால் அதை பெரியவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த 'இந்தியாவின் வீரப் பெண்மணி' எனும் டைட்டிலுக்கு பலர் போட்டியிட்டாலும், எந்த எதிர்ப்பும் இன்றி இந்தியாவின் சுதந்திர வரலாறு தெரிந்த அனைவராலும் வீரப் பெண்மணி என ஏற்றுக் கொள்ளப்படுபவர் லட்சுமி சாகல். சுருங்கச் சொன்னால் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் வரிசையில் இந்தியா கண்ட வீரப் பெண்மணி.

    பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் லட்சுமி. ஆனால், பிறந்தது கல்வி கற்றது எல்லாமே சென்னையில் தான். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் MBBS பட்டம் வாங்கியவர், கூடவே பெண் நோயியல் சிகிச்சை நிபுணர் என்கிற சிறப்புத் தகுதி வேறு.

    பை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை, ஆசனம் போசனம் சயனம் என்று வாழ்ந்து இருக்கலாம். ஆனால் சாதனையாளர்கள் சாதாரண மனிதர்களில் இருந்து சற்று வித்தியாசமானவர்கள் தானே.. அவரால் சாதாரண மனிதரைப் போல இருக்க முடியவில்லை. அவர் செய்த  அர்ப்பணிப்புகளை எல்லாம் சாதனை என்று ஜஸ்ட் லைக் தட் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் செய்தது இந்தியப் பெண்களுக்கே முன்னுதாரணமாக அமைந்தது. ஆம், அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் அமைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவின் முதல் 'படைத் தளபதி' மற்றும்  பெண்கள் நலனுக்கான அமைச்சரும் கூட.

    இந்திய சுதந்திரம் தனியே மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் அகிம்சை வழியில் மட்டும் பெறப்படவில்லை. அதற்குப் பின்னால்  கண்ணீரால், குருதியால், வியர்வையால் எழுதப்பட்ட வீரம் செறிந்த போராட்ட வரலாறு உள்ளது.



    வெள்ளைக்காரனுடன் அகிம்சை பேசுவதும்  புலியிடம் சென்று புலால் உண்ணாமை பற்றி பேசுவதும் ஒன்று என்பதை பிராக்டிக்கலாகப் புரிந்து கொண்ட இந்தியர்களால் 1942-ல் ஒரு சுப நாளில் சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்திய தேசிய ராணுவம். சிங்கப்பூரை பிரித்தானியர்கள், தமது பிரித்தானிய இந்தியப் படையின் உதவியுடன் ஆண்டனர்.  அப்போது ஆசியாவில் 'அப்பாட்டக்கராக' இருந்த ஜப்பானியப் பேரரசு சிங்கப்பூர் மீது படை எடுக்க விழுந்தது சிங்கப்பூர்; வென்றது ஜப்பான்.

    பிரித்தானிய இந்தியப் படையணியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருந்த தேசப் பற்று உள்ள இந்தியர்களை உள்ளடக்கி, ஜப்பானியப் பேரரசின் ஆசியுடன் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இந்திய தேசிய ராணுவம். ஆரம்பத்தில் இந்தப் படையில் போர்க் கைதிகள் மாத்திரமே இருந்தனர். இந்திய தேசிய ராணுவம் சிறிது 'டல்' அடிக்க ஆரம்பித்த வேளையில், அதாவது 1943-ல் நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை தனது இந்திய இடைக்கால அரசின் படைத் துறையாக அறிவித்தார். அத்துடன்,  அதற்கு தலைமை தாங்கி புத்துயிர் கொடுத்தார். 'நேதாஜி' எனும் ஒற்றை மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர் இந்தியர்களும், கூடவே இந்தியாவில் இருந்து சென்ற இந்தியர்களும் இணைந்து கொள்ள, சக்கை போடு போட ஆரம்பித்தது இந்திய தேசிய ராணுவம்.

    ஒரு தேசத்தின் சுதந்திரம் என்பது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை என்பதை உணர்த்து கொண்ட நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் 'ஜான்சி ராணி படையணி'யை உருவாக்கினர். அதற்கு படைத் தலைவராக நேதாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகி லட்சுமி சாகல்.

    இந்திய தேசிய ராணுவம் ஜப்பானியப் பேரரசின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் ஆசியுடன் தான் களமாடியது. ஆனால், சற்று பிற்போக்கு சிந்தனை கொண்ட ஜப்பானியர்கள் [அந்தக் காலம்] பெண்களாவது போராடுவதாவது எனக் கூறினர். கூடவே, பெண்களுக்கு தனிப்படையணி, தனி போர்த்தளவாடம் என்பது எல்லாம் 'சுத்த வேஸ்ட்' எனக்  கருதினர். ஆனால் நேதாஜி இந்தியப் பெண்களுக்கு  காதலுக்கு தகுந்த வீரமும் உண்டு என ஆத்மார்த்தமாக நம்பினார். ஜப்பானியப் பேரரசின் விருப்பத்துக்கு மாறாக 'ஜான்சி ராணி படையணி'யை தொடங்கினார். லட்சுமி சாகல் அவருக்கு மிகப் பெரும் நம்பிக்கையாகவும் உறுதுணையாகவும் இருந்தார்.

    நேதாஜி பெண்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்த்த கிழக்காசியாவில் வாழ்ந்த புலம் பெயர் இந்தியர்கள் தமது சொத்துகளையும் செல்வங்களையும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'ஜான்சி ராணி படையணி'க்கு வழங்கினர். அகிம்சை எல்லாம் வேலைக்கு ஆகாது ஆயுத வழியில் தான் சுதந்திரம் என நம்பிய இந்தியர்களுக்கு நேதாஜி பெரும் நம்பிக்கையாக விளங்கினார்; கூடவே லட்சுமி  சாகலும்.

    சிங்கப்பூரிலேயே தேர்ந்து எடுக்கப்பட்ட 500 பெண்களைக் கொண்டு லட்சுமி  சாகலின் தலைமையில் 'ஜான்சிராணி படையணி' ஆரம்பிக்கப்பட்டது. மலேஷியா, பர்மா போன்ற பிரதேசங்களில் இருந்தும் பெண்கள் இதில் பங்கேற்க வந்தனர்.

    பயிற்சியை முடித்துக் கொண்ட 'ஜான்சி ராணி படையணி' பர்மாவை நோக்கி சென்றது. பர்மாவை அடைந்து அங்கிருந்து டெல்லி செல்வதுதான் மாஸ்டர் பிளான். ஆனால் போர்களம் மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக டெல்லியை அடைய முடியவில்லை. 'ஜான்சி ராணி படையணி' இந்திய பர்மா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டியதாகி விட்டது. தொடர்ந்து நகர முடியவில்லை. போதாக்குறைக்கு உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் வந்து சேரும் பாதையும் மூடப்பட, கொடூரமான பட்டினியை எதிர்கொண்ட 'ஜான்சிராணி படையணி' வேறுவழி இல்லாமல் காட்டிலே கிடைத்த பழங்கள் தானியங்களை உட்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் அதன் நச்சுத்தன்மை காரணமாகவும், ஒவ்வாமை காரணமாகவும் வயிற்றுப் போக்கு, வாந்தி என பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகினர். ஆனாலும் லட்சுமி மனம் தளரவில்லை. தனது மருத்துவ அறிவைக் கொண்டு தன்னால் முடிந்தளவு போராடினார். ஆனால் 1945 மே மாதம் அவர் பிரித்தானியப் படையால் கைது செய்யப்பட்டு மார்ச் 1946 வரை ஏறத்தாழ ஒரு வருடம் பர்மாவின் அடர்ந்த காடுகளில் சிறை வைக்கப்பட்டார். அவரால் முழுமையாக தனது படையணியை காப்பாற்றவும் முடியவில்லை, ஆயுதவழியில் சுதந்திர இந்தியா என்கிற அவர்களது லட்சியத்தையும் அடைய முடியவில்லை,

    வரலாறு  விசித்திரமானது, மனச்சாட்சி இல்லாதது. அது வாழ்கையில் வெற்றி பெற்றவர்களை - அவர்கள் எந்த வித தியாகமும் செய்யாதபோதும் - அவர்கள் வெற்றி பெற்றவர்கள் எனும் ஒற்றைக் காரணத்துக்காகக் கோபுரத்தில் குடியமர்த்தும். தோல்வி அடைந்தவர்கள் எவ்வளவு தியாகிகளாக, வீரர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் விட்டுவிடும்.  இந்த உலக நியதிக்கு லட்சுமி சாகல் மட்டும் எப்படி விதி விலக்காக இருக்க முடியும்?

    லட்சுமி சாகல் வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் அவர் வரலாறிடம் இருந்து எதையும் எதிர் பார்க்கவில்லை. சிறையில் இருந்து மீண்ட உடனேயே தனக்கு தெரிந்த மருத்துவத்தை வைத்து மக்களுக்கு சேவை ஆற்றத்தொடங்கினார். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்காக தனது மருத்துவ சேவையை ஆரம்பித்தார். தன்னால் முடியும் வரை இறுதி மூச்சு வரை சேவை ஆற்றிக்கொண்டே இருந்தார்.

    1970-ல் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவின் வேண்டுகோளை ஏற்று பங்களாதேஷ் அகதிகளுக்காக மருத்துவ முகாமை தலைமை ஏற்று நடத்தினார். சுமார் ஜந்து வாரங்கள் இந்தியா - பங்களாதேஷ் எல்லையில் முகாம் அமைத்து தன்னால் ஆன பணியை உளச்சுத்தியுடன் செய்தார். ( அந்தக் கால ) கம்யூனிசம்  மேல் நம்பிக்கை கொண்டு சி. ப்பி.ஜ (CPI) யில் தன்னை இணைத்துக்  கொண்டார். அந்த தருணத்தை அவர் "மீண்டும் எனது சொந்த வீட்டிற்கு வருவது போல உள்ளது" என தனது இந்திய தேசிய ராணுவ நாட்களை தொடர்புபடுத்தி சந்தோஷப்பட்டார்.

    பெண்களின் கல்வி, சமூக அந்தஸ்து, வேலைவாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட AIDWA-வின் [All India Democratic Women's Association] ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார்.  அது மாத்திரம் அன்றி AIDWA சார்பாக பல நீதிப் போராட்டங்களை நடத்தினார்.
    1984-ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவு அவலத்தை தொடர்ந்து தனது தலைமையில் ஒரு குழுவுடன் போபால் சென்று பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ உதவிகளைச் செய்தார். 1984-ல் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின்போது தனது வாழிடமான கான்பூரில் மக்களைத் திரட்டி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப்  போராடினார்.

    தனது இறுதி மூச்சு வரை -  ஜூலை மாதம் 24ம் தேதி வரை - தன்னாலானதை இந்த சமூகத்திற்கு செய்து கொண்டிருந்தார்.

    இன்று  லட்சுமி சாகல் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் விதைத்து விட்டுச் சென்ற விதை இன்று பல்கிப் பெருகி  பெரும் விருட்சமாக  உள்ளது.

    வாழ்க்கை முழுவதுமே போராளியாக அறியப்பட்ட அவரிடம் ஒரு முறை "இந்தியாதான்  சுதந்திரம் அடைந்து விட்டதே இன்னும் எதற்காக போராடுகிறீர்கள்..? " என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர். அவரைப் பார்த்து சிரித்துவிட்டு  "நாம் காலனிய ஆட்சியில் இருந்துதான் சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆனால் சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இந்த மூன்றில் இருந்தும் எப்போது ஒன்றுசேர சுதந்திரத்தை அனுபவிக்கிறோமோ அதைத்தான் உண்மையான சுதந்திரம் என நான் ஏற்றுக் கொள்வேன். அதுவரை சுதந்திரத்துக்கான எனது போராட்டம் தொடரும் !" என்றார்.

    அங்கே நிற்கிறார் லட்சுமி சாகல்.!

    நன்றி - விகடன் 



    Posted by விழியே பேசு... at 9:08 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.