மங்காத்தா படத்தில் நடித்த மகத் சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த மது விருந்தில் தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார். வயிறு, தொண்டை பகுதிகளில் குத்தியதால் மகத் நிலைகுலைந்தார்.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசிலும் புகார் செய்தார். ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருந்து நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் வீட்டின் காவலானி கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் தேடினர். ஆனால் அவர் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.
மனோஜ் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுவதால் இரு தரப்புக்கும் இடையே சமரச முயற்சியும் நடக்கிறது. நடிகர் சிம்பு சமரசப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ், மகத் இருவருக்குமே சிம்பு நெருக்கமான நண்பராக இருக்கிறார். இன்னொரு புறம் போலீஸ் விசாரணையும் விறுவிறுப்பாக நடக்கிறது.
தொழில் அதிபரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தேடுகின்றனர். விருந்தில் யார்-யார் பங்கேற்றனர் என்ற பட்டியலையும் போலீசார் தயாரிக்கிறார்கள்.
முன்னணி நடிகர்கள் இருவர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நடிகைகள் திரிஷா, லட்சுமிராய் போன்றோரும் கலந்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இது உண்மைதானா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இரு நடிகைகளும் விருந்தில் பங்கேற்றது உறுதியானால் அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திரிஷா, லட்சுமிராய் முன்னிலையில் இந்த அடிதடி சண்டை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாப்சியை மனோஜ், மகத் காதலித்ததாகவும் இதுவே சண்டைக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று டாப்சி மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment