இன்று இயக்குனர் கே.பாலசந்தர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து வேறுபட்ட தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
பாலசந்தர் கவலைக்கிடமாக இருப்பதாக எழுந்த வதந்தியை தொடர்ந்து காவேரி மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 84 வயதான பாலசந்தர் வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளாலும், காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் ரஜினி மருத்துவமனைக்கு வந்து பாலசந்தரை சந்தித்தார்.
அதற்குப் பின் பேட்டியளித்த அவர்,
கே.பி. சாரை பார்த்தேன். அவர் நன்றாக இருக்கிறார். என்னைப் பார்த்து சிரித்தார். அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
பாலசந்தர் கவலைக்கிடமாக இருப்பதாக எழுந்த வதந்தியை தொடர்ந்து காவேரி மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 84 வயதான பாலசந்தர் வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளாலும், காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் ரஜினி மருத்துவமனைக்கு வந்து பாலசந்தரை சந்தித்தார்.
அதற்குப் பின் பேட்டியளித்த அவர்,
கே.பி. சாரை பார்த்தேன். அவர் நன்றாக இருக்கிறார். என்னைப் பார்த்து சிரித்தார். அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment