விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, December 4, 2014

    ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங்

    நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார்.

    மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார்.

    தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டவர் பி.வி.ஆச்சாரியா.

    ஆச்சாரியா குமுறல்

    ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கடும் வாதங்களை எடுத்து வைத்த ஆச்சாரியாவுக்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. நெருக்கடிகளால்தான் அரசு வக்கீல் பதவியை பாதியிலேயே ராஜினாமா செய்தேன் என்று ஆச்சாரியா சமீபத்தில் வெளியிட்ட சுய சரிதை புத்தகத்திலும் கூறியுள்ளார்.

     பவானிசிங் சிறப்பு பேட்டி

    இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில், ஆச்சாரியாவுக்கு அடுத்ததாக அரசு வக்கீலாக நியமிக்கப்பட்ட பவானிசிங் இந்த கூற்றை ஏற்க மறுக்கிறார். இதுகுறித்து இன்று அளித்த பேட்டியில் பவானிசிங் கூறியதாவது:

    ஜெயலலிதா மீதான வழக்கின் ஆரம்ப கட்டத்தில்தான் ஆச்சாரியா வாதாடினார். இருப்பினும் நெருக்கடி காரணமாக வழக்கில் இருந்து பின்வாங்கியதாக கூறியுள்ளார். வக்கீல்களுக்கு என்ன அப்படியொரு நெருக்கடி? இதெல்லாம் வக்கீல்கள் பணியில் சகஜமாக நிகழக் கூடியதுதான்.

    எனக்கு நெருக்கடி வரவில்லையே..

    ஒரு வழக்கறிஞர் என்பவர், தான் ஆஜராகும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் யார் என்று பார்க்க கூடாது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளவர்களா? கடை நிலையில் உள்ளவர்களா என்பதையெல்லாம் வக்கீல்கள் பார்க்க தேவையில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். நான்தான் வழக்கின் பெரும்பகுதியில் அரசு வக்கீலாக ஆஜரானேன். ஆனால் எனக்கு எதிராக எந்த நெருக்கடியும் தரப்படவில்லையே..!

    ஆச்சாரியா சொன்னது சரியில்லை

    ஒரு வழக்கில் இருந்து வெளியேற வேண்டுமானால் வக்கீல்களுக்கு உரிய காரணம் இருக்க வேண்டும். ஆனால் ஆச்சாரியா கூறிய காரணம் சரி அல்ல. நான் அந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன்.ஜெயலலிதா வழக்கு விசாரணையில், நான்கில் ஒரு பங்குதான் ஆச்சாரியா ஆஜரானார். ஆனால் முக்கால்வாசி வழக்கில் நான்தான் ஆஜராகி பலமான வாதங்களை எடுத்து வைத்தேன். ஆச்சாரியா வாதிடும்போது வழக்கு முக்கிய கட்டத்தை எட்டவில்லை. நான் ஆஜராக ஆரம்பித்தபோதுதான் வழக்கின் கடினமான பாதை ஆரம்பித்திருந்தது. அனைத்து வகையான திருப்பு முனைகளும் நான் வாதிடும் காலத்திலேயே நடந்துள்ளன.

    கருணாநிதி குற்றச்சாட்டு

    நான் வாதாட ஆரம்பிக்கும்போது ஏகப்பட்ட ஆவணங்களை படித்து பார்க்க வேண்டியிருந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக தள்ளிப்போனதால் வேகமாக வழக்கை முடிக்க வேண்டிய நிலையிலும் நான் இருந்தேன். இப்படி முக்கியமான நேரத்தில் வாதிட்ட எனக்கே எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. இதை நான் உறுதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நெருக்கடி வரவில்லை என்றாலும், நான் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழத்தான் செய்தது. கருணாநிதியே நேரடியாக என்மீது புகார் சொன்னார். ஆனால் இதையெல்லாம் நான் பெரிதாக நினைக்காமல், எனது கடமையை மட்டும் செய்தேன்.

    கருணாநிதி தனது தவறை உணர்ந்திருப்பார் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, தனது குற்றச்சாட்டு தவறானது என்பதை கருணாநிதியே உணர்ந்திருப்பார். வக்கீல்கள் எப்போதுமே நெருக்கடிக்கோ, குற்றச்சாட்டுகளுக்கோ அசராமல் பணியாற்ற வேண்டும். அதிலும், அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளில் இதெல்லாம் சாதாரணம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமது கவனத்தை முழுக்க முழுக்க வழக்கில்தான் வைக்க வேண்டும்.

    அடுத்தகட்ட நடவடிக்கை? ஜெயலலிதா மீதான வழக்கில், இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஜாமீன் மனு மீதான விசாரணையும் எனக்கு ஒரு சவால்தான். தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையிலும் அரசு தரப்பில் நான்தான் ஆஜராகப்போகிறேன். சிறப்பு கோர்ட் அளித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும், அல்லது தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் நான் வாதிட உள்ளேன். இதில், எந்த வாதத்தை முன்வைக்கலாம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இன்னும் சில ஆவண வேலைகள் பாக்கி உள்ளன. வழக்கின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்ததை போன்ற காலதாமதம் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இவ்வாறு பவானிசிங் தெரிவித்தார்.

    பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





    Posted by விழியே பேசு... at 11:08 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.