பாகிஸ்தான் வீரர்கள் தண்டிக்கப்படும் வரையில் இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்று ஹாக்கி இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஆபாச நடத்தைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இனி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போட்டியையும் இந்தியாவில் நடத்த முடியாது என்று ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரையில் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்று ஹாக்கி இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் டிசர்ட்டை களைந்து ஆட்டம் போட்டனர். அவர்கள், ஆபாசமான வார்த்தைகளை சத்தம்போட்டு கத்தினர். கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாச சைகைகளை செய்தனர்.
பின்னர் அவர்களை அந்நாட்டு பயிற்சியாளர் ஷானாஸ் வந்து அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் வீரர்களின் அநாகரீக நடத்தைக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிடம் ஷானாஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை இயக்குநர் தோயெர் பாகிஸ்தான் குழுவிடம் பேசினார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஆபாச நடத்தைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இனி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போட்டியையும் இந்தியாவில் நடத்த முடியாது என்று ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரையில் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்று ஹாக்கி இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் டிசர்ட்டை களைந்து ஆட்டம் போட்டனர். அவர்கள், ஆபாசமான வார்த்தைகளை சத்தம்போட்டு கத்தினர். கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாச சைகைகளை செய்தனர்.
பின்னர் அவர்களை அந்நாட்டு பயிற்சியாளர் ஷானாஸ் வந்து அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் வீரர்களின் அநாகரீக நடத்தைக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிடம் ஷானாஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை இயக்குநர் தோயெர் பாகிஸ்தான் குழுவிடம் பேசினார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
பாகிஸ்தான் வீரர்களின் சைகைகள் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு நபரையும் ஆத்திரம் அடையச் செய்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எடுக்கவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் தண்டிக்கப்படும் வரையில் இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்று ஹாக்கி இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பாத்ரா பேசுகையில், "இது மிகவும் வெட்கமான மற்றும் கண்டனத்திற்குரிய சம்பவம். ஆனால் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு மிகவும் பலவீனமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நாங்கள் எற்றுக்கொள்ள மாட்டோம். விளையாட்டு வீரர்களிடம் இருந்து இதுபோன்ற நடத்தையை இந்தியர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்று நாங்கள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம்."
"எனவே நாங்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மார்ச் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பெண்கள் ஹாக்கி உலக லீக் போட்டி சுற்று 3-ஐ அடுத்து, இந்தியாவில் எந்த ஒரு சர்வதேசப் போட்டியையும் நடத்த முடியாது என்று முடிவு செய்துள்ளோம். இதில் 2018 ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியும் அடங்கும்." என்று கூறியுள்ளார்.
"சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இதுபோன்ற நாகரிகமற்ற நடத்தையை அனுமதிக்கிறது என்றால், பிறகு அவர்கள் எந்தப் போட்டியையும் மற்ற நாடுகளில் நடத்தட்டும், இந்தியாவில் நடத்த வேண்டாம். ஏனென்றால், இந்திய கலாச்சாரம் போன்ற செயல்களை அனுமதிக்காது." என்று ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பாத்ரா திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
No comments:
Post a Comment