லிங்கா படம் குறித்து சமூக வலைதளங்களிலும், பிற மட்டங்களிலும் கேலி கிண்டல்கள் விமர்சனங்கள் இருந்து வந்தாலும் கூட லிங்கா படத்தின் வசூலில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் வசூலில் தொய்வு காணப்பட்டாலும் கூட தமிழகத்தில் லிங்கா தொடர்ந்து தொய்வில்லாமல் சீரான அளவில் உள்ளதாக பாக்ஸ ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் லிங்கா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். வேலை நாட்களிலும் கூட மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி மட்டுமே
இதுகுறித்து திரையுலகினர் கூறுகையில் ரஜினி படம் என்றால் அதில் ரஜினியை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். மக்களும் ரஜினியைத்தான் பார்ப்பார்கள். லிங்காவிலும் அதுவே நடந்துள்ளது. ரஜினி என்ற மந்திரச் சொல்தான் மக்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருகிறது.
இதுவரை ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். தற்போது பொதுமக்கள் குடும்பத்தோடு வர ஆரம்பித்துள்ளனர். எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து அவர்கள் குழம்பிக் கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் லிங்கா ரிலீஸானது. இதுவரை 95 சதவீத அளவுக்கு காட்சிகளில் இருக்கைகள் நிரம்பி வருகின்றனவாம்
சென்னையில் வார நாட்களில் பாதி அளவிலான இருக்கைகள் நிரம்புகின்றனவாம். பிற பகுதிகளில் இது 45 சதவீதமாக உள்ளதாம்
லிங்கா படம் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, அது ஒட்டுமொத்த ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு ரஜினி படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இருப்பதால் படம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆந்திரா, பெங்களூரில் படம் டீசன்ட்டாக போய்க் கொண்டிருப்பதாகவும், அதேசமயம், கேரளாவில் நிலைமை சரியில்லை என்றும் கூறுகிறார்கள்.
லிங்கா படக் கதை முல்லைப் பெரியாறு கதை போல இருப்பதால் கேரள மக்களை அது கவரவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
சில இடங்களில் வசூலில் தொய்வு காணப்பட்டாலும் கூட தமிழகத்தில் லிங்கா தொடர்ந்து தொய்வில்லாமல் சீரான அளவில் உள்ளதாக பாக்ஸ ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் லிங்கா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். வேலை நாட்களிலும் கூட மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி மட்டுமே
இதுகுறித்து திரையுலகினர் கூறுகையில் ரஜினி படம் என்றால் அதில் ரஜினியை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். மக்களும் ரஜினியைத்தான் பார்ப்பார்கள். லிங்காவிலும் அதுவே நடந்துள்ளது. ரஜினி என்ற மந்திரச் சொல்தான் மக்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருகிறது.
இதுவரை ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். தற்போது பொதுமக்கள் குடும்பத்தோடு வர ஆரம்பித்துள்ளனர். எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து அவர்கள் குழம்பிக் கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் லிங்கா ரிலீஸானது. இதுவரை 95 சதவீத அளவுக்கு காட்சிகளில் இருக்கைகள் நிரம்பி வருகின்றனவாம்
சென்னையில் வார நாட்களில் பாதி அளவிலான இருக்கைகள் நிரம்புகின்றனவாம். பிற பகுதிகளில் இது 45 சதவீதமாக உள்ளதாம்
லிங்கா படம் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, அது ஒட்டுமொத்த ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு ரஜினி படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இருப்பதால் படம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆந்திரா, பெங்களூரில் படம் டீசன்ட்டாக போய்க் கொண்டிருப்பதாகவும், அதேசமயம், கேரளாவில் நிலைமை சரியில்லை என்றும் கூறுகிறார்கள்.
லிங்கா படக் கதை முல்லைப் பெரியாறு கதை போல இருப்பதால் கேரள மக்களை அது கவரவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
No comments:
Post a Comment