ஆஸ்திரேலியாவில் பொது மக்கள் 17 பேரை பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச் சண்டையின் போது பிணைக்கைதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் 2 பேர் உட்பட மற்ற பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்ன நடந்தது?
காலை 9.45 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர் லிண்ட் உணவகத்தில் நுழைந்து அங்கிருந்த மக்களை பிணைக் கைதிகளாக பிடித்தார். இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சிட்னியில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
துப்பாக்கி வைத்திருந்தவருடன் தொடர்பு கொள்ள காவல்துறையினர் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில், 5 மணி நேரத்திற்கு பிறகு அவசர காலத்தின் போது வெளியேறும் வழியாக உணவகத்தில் இருந்து 3 பிணைக் கைதிகள் தப்பினர். சில நிமிடங்களில் 2 பெண்கள் உணவகத்தில் இருந்து தப்பி வந்தனர்.
நள்ளிரவு ஒன்றே கால் மணியளவில் உணவகத்தின் உள்ளே துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. அடுத்த 30 விநாடிகளில் துப்பாக்கிச்சூடு அடங்கி விடுகிறது.
அதனைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், பிணைக் கைதியாக சிக்கிக் கொண்ட வயதான பெண்மணியை காவல்துறையினர் வெளியே அழைத்து வருகின்றனர்.
அதிரடி தாக்குதல்:
நள்ளிரவு ஒரு மணி 18 நிமிடத்தின் போது மேலும் ஒரு பெண் பிணையக் கைதியை அதிகாரிகள் வெளியே அழைத்து வருகின்றனர். அடுத்த நிமிடத்தில், 7 காவல்துறை அதிகாரிகள், குண்டு துளைக்காத கவச உடைகளுடன், லிண்ட் உணவகத்திற்குள் அதிரடியாக நுழைகின்றனர்.
மூன்று பேர் உயிரிழப்பு:
பின்னர் பாதுகாப்பாக 11 பேரை போலீசார் மீட்டனர். இம்மோதலில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர். இவர்களில் கத்ரீனா டவ்சன் என்ற வழக்கறிஞரும் ஒருவர். 38 வயதான டவ்சன், சிட்னியின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர். கத்ரீனா டவ்சனும் அவரது வழக்கறிஞர்களும் காபி குடிப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற நேரத்தில் தீவிரவாதியிடம் சிக்க நேர்ந்தது.
கத்ரீனாவுடன் தீவிரவாதியின் பிடியில் சிக்கியவர்களில் அவரது கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரும் ஒருவர். போலீசாரின் மீட்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரைக் காப்பாற்றும் முயற்சியில் கத்ரீனா படுகாயமடைந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்ரீனாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் பையன். கர்ப்பிணி தோழியைக் காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த கத்ரீனாவின் மரணம் அவரது சக வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மூன்று பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு ஒன்றே முக்கால் மணியளவில் பிணைக் கைதிகளை மீட்கும் பணி முழுமையாக முடிந்து விட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
துப்பாக்கிச் சண்டையின் போது பிணைக்கைதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் 2 பேர் உட்பட மற்ற பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்ன நடந்தது?
காலை 9.45 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர் லிண்ட் உணவகத்தில் நுழைந்து அங்கிருந்த மக்களை பிணைக் கைதிகளாக பிடித்தார். இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சிட்னியில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
துப்பாக்கி வைத்திருந்தவருடன் தொடர்பு கொள்ள காவல்துறையினர் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில், 5 மணி நேரத்திற்கு பிறகு அவசர காலத்தின் போது வெளியேறும் வழியாக உணவகத்தில் இருந்து 3 பிணைக் கைதிகள் தப்பினர். சில நிமிடங்களில் 2 பெண்கள் உணவகத்தில் இருந்து தப்பி வந்தனர்.
நள்ளிரவு ஒன்றே கால் மணியளவில் உணவகத்தின் உள்ளே துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. அடுத்த 30 விநாடிகளில் துப்பாக்கிச்சூடு அடங்கி விடுகிறது.
அதனைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், பிணைக் கைதியாக சிக்கிக் கொண்ட வயதான பெண்மணியை காவல்துறையினர் வெளியே அழைத்து வருகின்றனர்.
அதிரடி தாக்குதல்:
நள்ளிரவு ஒரு மணி 18 நிமிடத்தின் போது மேலும் ஒரு பெண் பிணையக் கைதியை அதிகாரிகள் வெளியே அழைத்து வருகின்றனர். அடுத்த நிமிடத்தில், 7 காவல்துறை அதிகாரிகள், குண்டு துளைக்காத கவச உடைகளுடன், லிண்ட் உணவகத்திற்குள் அதிரடியாக நுழைகின்றனர்.
மூன்று பேர் உயிரிழப்பு:
பின்னர் பாதுகாப்பாக 11 பேரை போலீசார் மீட்டனர். இம்மோதலில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர். இவர்களில் கத்ரீனா டவ்சன் என்ற வழக்கறிஞரும் ஒருவர். 38 வயதான டவ்சன், சிட்னியின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர். கத்ரீனா டவ்சனும் அவரது வழக்கறிஞர்களும் காபி குடிப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற நேரத்தில் தீவிரவாதியிடம் சிக்க நேர்ந்தது.
கத்ரீனாவுடன் தீவிரவாதியின் பிடியில் சிக்கியவர்களில் அவரது கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரும் ஒருவர். போலீசாரின் மீட்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரைக் காப்பாற்றும் முயற்சியில் கத்ரீனா படுகாயமடைந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்ரீனாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் பையன். கர்ப்பிணி தோழியைக் காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த கத்ரீனாவின் மரணம் அவரது சக வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மூன்று பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு ஒன்றே முக்கால் மணியளவில் பிணைக் கைதிகளை மீட்கும் பணி முழுமையாக முடிந்து விட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
No comments:
Post a Comment