மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகீம் சுட்டு கொல்லும் முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 1993&ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானுக்கு தப்பிச்சென்று 20 ஆண்டுகள் மேல் கராச்சி நகரில் வசித்து வருகிறார். தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வரும் நிலையில் ஓசமா பின்லேடனை போல அவனை சுட்டுகொல்ல இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்பு திட்டம் திட்டியது.
இதற்காக 9 அதிரடி கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தாவூத் தினசரி நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து 2013&ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத்தை சுட்டுக்கொல்ல நாள் குறித்தனர். இதற்கு இஸ்ரேலியன் மொசாத் கமாண்டோ உதவியும் நாடப்பட்டது. குறிப்பிட்ட நாளில் தாவூத்தை நெருங்கிய நிலையில் கடைசி நேரத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் வந்த உத்தரவையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்த முக்கிய தீவிரவாதியான தாவூத் இப்ராகீமின் உயிரை தொலைபேசி உத்தரவு வாயிலாக கடைசி நேரத்தில் காப்பாற்றியது யார்? என்பது மர்மமாக உள்ளது.
இதற்காக 9 அதிரடி கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தாவூத் தினசரி நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து 2013&ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத்தை சுட்டுக்கொல்ல நாள் குறித்தனர். இதற்கு இஸ்ரேலியன் மொசாத் கமாண்டோ உதவியும் நாடப்பட்டது. குறிப்பிட்ட நாளில் தாவூத்தை நெருங்கிய நிலையில் கடைசி நேரத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் வந்த உத்தரவையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்த முக்கிய தீவிரவாதியான தாவூத் இப்ராகீமின் உயிரை தொலைபேசி உத்தரவு வாயிலாக கடைசி நேரத்தில் காப்பாற்றியது யார்? என்பது மர்மமாக உள்ளது.
No comments:
Post a Comment