மத்தியப் பிரதேச தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாகக் கருதி அந்த மாநில பாஜகவினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகள் உரிமைக்காகப் போராடி வரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் வழங்கப்பட்டது.
ஆனால் மத்தியப் பிரதேச பாஜகவினர் அந்த மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்குதான் நோபல் பரிசு கிடைத்திருப்பதாகக் கருதி அவருக்கு வாழ்த்து களை கூறி வருகின்றனர். தொண் டர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அமைச்சர் கைலாஷை தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் கைலாஷ் கூறியபோது, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியைவிட மத்தியப் பிரதேச மக்கள் மத்தியில் நான் பிரபலமாக உள்ளதால் என்னை தவறாக நினைத்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர் என்றார்.
இந்த அளவுக்கு நாட்டு நடப்புகளை தெரிந்து வைதிருக்கும் இவர்களை நம்பி இந்திய மக்கள் ...?
குழந்தைகள் உரிமைக்காகப் போராடி வரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் வழங்கப்பட்டது.
ஆனால் மத்தியப் பிரதேச பாஜகவினர் அந்த மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்குதான் நோபல் பரிசு கிடைத்திருப்பதாகக் கருதி அவருக்கு வாழ்த்து களை கூறி வருகின்றனர். தொண் டர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அமைச்சர் கைலாஷை தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் கைலாஷ் கூறியபோது, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியைவிட மத்தியப் பிரதேச மக்கள் மத்தியில் நான் பிரபலமாக உள்ளதால் என்னை தவறாக நினைத்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர் என்றார்.
இந்த அளவுக்கு நாட்டு நடப்புகளை தெரிந்து வைதிருக்கும் இவர்களை நம்பி இந்திய மக்கள் ...?
No comments:
Post a Comment