தமிழகம் முழுவதும் 700 அரங்குகளில் லிங்கா படம் நேற்று வெளியானது. பல திரையரங்குகளில் லிங்கா நள்ளிரவே திரையிடப்பட்டது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு. இந்த சிறப்புக் காட்சிகள் தவிர்த்த ரெகுலர் ஷோக்கள் மூலமாக மட்டுமே ரூ 17 கோடியை லிங்கா தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.
ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 11 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கேரளாவில் மோகன் லால் விஜய் நடித்த படம் ஜில்லா படத்தை தொடர்ந்து மாநிலம் முழுவது லிங்கா படம் 217 தியேட்டர்களில் திரையிடபட்டு உள்ளது.இந்த வாரம் ரஜினி படம் வெளியாவதையொட்டி வேறு எந்த மலையால படங்களும் வெளியாக வில்லை.
கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை.
வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது (இன்னும் இந்திப் பதிப்பு வெளியாகவில்லை). அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா. அந்த விவரங்கள் விரைவில் தெரிய வரும்.
லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு ரூ.110 கோடிவரை இருக்கும் என்கின்றனர். ஈராஸ் நிறுவனம் உலகம் முழுவதும் திரையிடும் உரிமையை பெற்றது. ரூ.130 கோடி கொடுத்து அந்த நிறுவனம் இப்படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. டெலிவிஷன் உரிமைகள் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாகும் முன்பே ரூ.90 கோடிவரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
கத்தி இதுவரை வசூலித்ததாக சொல்லப்பட்ட 100 கோடியை லிங்கா முதல் நாளிலேயே முறியடித்து விட்டதாக திரையுலகில் கூறப்படுகிறது
ரஜினி படங்கள் கடந்த 4 வருடங்களாக வரவில்லை. கோச்சடையான் அனி மேஷன் படமாக வந்தது. நீண்ட இடை வெளிக்கு பிறகு லிங்கா வந்ததால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆர்வத்தோடு படம் பார்த் தார்கள். இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்ப தால் வசூல் அதிகமாகும் என்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித் துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கி யுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் -ரஜினிகாந்த் இந்த படத்தில் 3 வது முறையாக இணைந்து உள்ளனர். இதற்கு முன் கே.எஸ்
ரவிக்குமார் இயத்தில் ரஜினிகாந்த் முத்து, படையப்பாவில் நடித்து உள்ளார்.
No comments:
Post a Comment