வணக்கம்...,
நமது 'விழியே பேசு... 'வலைத்தளத்திற்கு இதுவரை வருகை தந்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
இன்றுடன் நமது வலைத்தளம் ஆரம்பித்து நூறு நாட்கள் ஆகிறது, இந்த நூறு நாட்களில் உங்கள் அன்பான ஆதரவால் ஓரளவுக்கு நமது வலைத்தளம் பிரபலமடைந்துள்ளது. ஆரம்பத்தில் இலட்சமாக இருந்த அலேசா ரெங் இந்த நூறு நாட்களில் என்று முன்னேறியுள்ளது. இதற்கு காரணமான உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். இதுவரை நீங்கள் தந்த ஆதரவை விடவும் பல மடங்கு அதிகமான ஆதரவை நீங்கள் இன்னும் தான் நமது வலைத்தளத்திற்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . காரணம் இந்த வலைத்தளத்தை நான் எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தேனோ அந்த பாதையை நோக்கி இன்று முதல் பயணிக்க போகிறேன். அதற்கு உங்கள் ஆதரவு எனக்கு தேவை . நீங்கள் உங்கள் ஆதரவை எனக்கு வழங்குவீர்கள், எனக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் , உங்களில் பல பேருடைய எழுத்துக்களை படித்து இருக்கிறேன் அதில் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து கருத்து தெரிவிக்கும் உங்கள் தைரியத்தை பார்த்திருக்கிறேன். எனவே தான் உங்களின் ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
சரி, அதிகமாக பேச கூடாது இல்லையா நாம் விசயத்துக்கு வருவோம். இன்று பல அரசியல் வாதிகள் மற்றும் சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கப்படும் பெரும் புள்ளிகள் தங்களின் சுய லாபத்துக்காகவும், தங்கள் சுக போகத்துக்காகவும் பல ஏழைகளை ஏத்தி விட்டு தங்களின் தேவைகளை தீர்த்து கொண்ட பின் அவர்களை ஏமாற்றி இறுதியில் அவர்களை கைகழுவி விட்டு விடுவார்கள். ஏன் ரகசியமாக கொலை கூட செய்து இருக்கிறார்கள். தடயமே இல்லாத அளவுக்கு சாமர்த்தியமாக (அல்லது காவல் துறையினர் தடயங்களை அளித்து விடுவார்களோ என்னமோ) அப்படி அரசியல் வாதிகளாலும் பெரும் புள்ளிகளாலும் பெரிய மனிதனாக உயர்ந்து இறுதியில் அவர்களின் சூழ்ச்சியாலேயே தூக்கு மேடைக்கு சென்று தூக்கு தண்டனையை அனுபவித்த ஒருவருடைய வாழ்கையை பற்றி எனது பாணியில் தொடராக எழுத போகிறேன். ஆம், 1988 -ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தை மட்டுமின்றி இந்திய தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவத்தின் கதாநாயகன் தான் ஆட்டோ சங்கர் .
இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சங்கர் எப்படி ஆட்டோ சங்கராக மாறினான்.? அவனை மாற்றிய சம்பவங்கள் எவை? யார் யார் அவனை மாற்றினார்கள்? யார் யார் அவனால் பலன் அடைந்தார்கள் ? அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? இப்போது அவர்கள் எங்கே? பேன்ற பல கேள்விகளுக்கும் பதில் தான் எனது இந்த தொடர் ....
நமது தொடரின் தலைப்பை ஆட்டோ சங்கர் என்றே வைப்போம் (அரசு கேளிக்கை வரி விலக்கு தரவில்லை என்றால் கூட பரவாயில்லை ).ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த தொடரில் நான் கூற இருக்கும் பெரும் புள்ளிகளின் பெயர்கள் சம்பவங்கள் அனைத்துமே ஆட்டோ சங்கரால் தெரிவிக்கப்பட்டவை.
சரி வாசகர்களே! நாம் நமது தொடருக்கு செல்வோமா. …
ஆட்டோ சங்கர்
ஷங்கர் இவன் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு தனது பெற்றோர்களுடன் வந்தான். தமிழ் நாட்டில் பிழைப்பு தேடி வரும் பல கோடி பேர்களில் இவனது குடும்பமும் ஒன்றாக தான் வந்தது . கையில் பணம் வைத்திருந்தார் சங்கரின் தந்தை மனதில் நம்பிக்கையும் இருந்தது ஷங்கரின் தந்தைக்கு.
சங்கர் குடும்பம் சென்னையில் குடியேறியது. சங்கரின் தந்தை ஒரு டீக்கடை ஆரம்பித்தார் கையில் இருந்த கொஞ்ச ரூபாயை வைத்து. அதில் ஓரளவுக்கு வருமானமும் வந்ததால் அவர் அவருடைய பிள்ளைகளை படிக்க வைத்தார் . சங்கரும் பள்ளிக்கு சென்றான். படிப்பில் சுட்டி என்று சொல்ல முடியாது என்றாலும் ஓரளவு படிப்பான். அன்றைய கால கட்டத்தில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு படிப்பு வரவில்லை. என்ன செய்வது படிப்புக்கு முழுக்கு போட்டான்.
மனுசங்க பெரிய பெரிய மலை தடுக்கி கீழே விழுரதில்லை...சின்ன சின்ன கல் தடுக்கி தான் கீழே விழுறாங்க வாழ்க்கையும் அப்படிதான் இல்லையா? சின்ன சின்ன சம்பவங்களும் , அறிமுகங்களும் தான் எவ்வளவு திருப்பங்களை நமது வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது.?
வழிகாட்டிகள் சரியாக அமையல்லேன்னா எந்த ஒரு நல்லவனும் கெட்டவனாக மாறிடுவான் அதான் உலக நியதி சங்கருக்கும் அப்படிதான் அமைந்தது.
படிப்பு தான் வர வில்லையே தவிர அந்த வயசில் வர வேண்டியது வந்திடுச்சு ஆமா, காதல் அந்த மந்திர உணர்வில் சங்கர் சிக்கினான். அது சங்கருக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஆம் அப்போது சங்கருக்கு வயசு 17 அவனுடைய காதலிக்கு வயசு 14 பேரு ஜெகதீஸ்வரி இங்கு தான் வாழ்க்கையின் திருப்புமுனையே ஆரம்பமாக போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை ...
இதுவரை வந்தவைகள்....
ஆட்டோ சங்கர் 2(தொடர் )
ஆட்டோ சங்கர் 3 (தொடர் )


நல்ல சுவாரசியமான பதிவுதான் ஆரம்பித்திருக்கிரீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அம்மா...
ReplyDelete