சூர்யா தற்போதைய தமிழ் திரையின் ஹாட் கேக். நடிக்கிற படம் எல்லாம் சூப்பர் ஹிட். சூர்யா அடுத்து நடிக்கும் படம் ஏழாம் அறிவு, சூர்யாவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டாவது முரையாக இணையும் படம். கமல் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் சூர்யா. நெருப்பு வளையங்களில் சண்டை போட்டு அசத்தி இருக்கிறார். நெருப்போடு விளையாடி இருக்கிறார் சூர்யா.
இது ஒரு மருத்துவம் சம்பந்தப்பட்ட திரில்லர் படமாக இருக்கும் என்றே ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். மருத்துவம் சம்பந்தமான திரில்லர் நாவல்களுக்கு பேர் போனவர் ஆங்கில எழுத்தாளர் ராபின் கூக். ஏழாம் அறிவு படத்தின் கதையும் இவரின் நாவலில் இருந்து பிறந்தது தான் என்றே சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த இருக்கிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளிவர இருப்பதால்தான் இந்த ஏற்பாடு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தில் தான் செய்த சண்டை சாகசங்களை ரசிகர்களுக்காக நேரில் செய்ய இருக்கிறார் சூர்யா.
வழக்கமாகவே சூர்யா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கஜினி, அயன், ஆதவன் படங்களைத் தொடர்ந்து ஏழாம் அறிவிலும் இசையமைக்கும் ஹாரிஸ் இசையில் மிரட்ட இருக்கிறாராம்.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிற போதே, மற்ற மூன்று படங்களில் தன் கௌரவத் தோற்றத்தை நடித்து முடித்திருக்கிறார் சூர்யா.
ர்.
அதில் முதன்மை வகிப்பது கமல், திரிஷா நடிப்பில் வெளிவந்து இருக்கும் 'மன்மதன் அம்பு'. நடிக்கிறார்.
அடுத்தது பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடித்து வரும் 'அவன் இவன்'. சூர்யாவின் வெற்றிப் பயணத்தில் இயக்குனர் பாலாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தப் படம், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் கோ. ஜீவா, அஜ்மல், பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்தில் சூர்யா ஒரு காட்சிக்கு வந்து போகிறார்.சமீபமான சூர்யாவின் படங்களில் அயன் படம் வசூல் சாதனை படைத்தது. அயன் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். அதனால்தான் 'கோ' படத்தில் இயக்குனர் கேட்டவுடன் மறுப்பு சொல்லாமல் ஒரு காட்சிக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா.
.

No comments:
Post a Comment