2014-ம்
ஆண்டின் சிறந்த ஆல்பமாக அனிருத்
இசையில் வெளியான கத்தி படப்
பாடல்களை ஐட்யூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி
தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி'. இப்படத்திற்கு
அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசை இசையைப்
பாராட்டி அனிருத்துக்கு பியானோ ஒன்றைப் பரிசளித்தார்
விஜய்.
இந்நிலையில்,
இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக
‘கத்தி' படத்தின் பாடல்களை ஐடியூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது
அனிருத்துக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
அனிருத்துக்கு
படக்குழுவினரும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின்
பாடல்கள் உரிமையை பெற்ற ஈராஸ்
மியூசிக் நிறுவனம் அனிருத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, ‘கத்தி' படத்தின் பாடல்கள்
சிறந்த ஆல்பமாக தேர்வானதை எண்ணி
பெருமை அடைகிறோம் என்றும் அறிவித்துள்ளது.
ஐட்யூன்ஸுக்கு
நன்றி தெரிவித்துள்ளார் அனிருத்.
No comments:
Post a Comment