தமிழகம் வரும் அமித் ஷா முன்பாக, திராவிட இயக்கங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களையும், தொண்டர்களையும் கட்சியில் இணைக்க, பா.ஜ., தலைவர்கள் சிலர், தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வரும் 2016ல், தமிழ கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக, கட்சியை பல விதங்களிலும், பலப்படுத்தும் தீவிரத்தில், பா.ஜ.,வினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
திட்டம்:
இதற்காக, டில்லியில் பா.ஜ., உத்திகள் வகுக்கும் குழு, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பலவற்றை, வகுத்துக் கொடுத்துள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ., தலைவர்களையும், தொண்டர்களையும், தேர்தலை நோக்கி தீவிரப்படுத்தவும், வரும் 20ம் தேதி, தமிழகம் வருகிறார், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா. கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், 20ம் தேதி மாலையில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
இதற்கிடையில், தி.மு.க., உட்கட்சித் தேர்தலில், தமிழகம் முழுவதும் கட்சியினர் கோஷ்டி பூசலால் பாதிக்கப்பட்டு, கட்சித் தலைமை மீது, கடும் அதிருப்தியில் இருக்கும் தகவல், சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால், கட்சியில் ஏற்பட்டுள்ள தொய்வால் விரக்தியடைந்திருக்கும் அ.தி.மு.க.,வினர், லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின், கட்சித் தலைமை மீது, அதிருப்தியில் இருக்கும் தே.மு.தி.க., மற்றும் ம.தி.மு.க., தொண்டர்கள் ஆகியோரைப் பற்றியும், அமித் ஷாவுக்கு, தமிழகத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள், தொடர்ந்து தகவல் அனுப்பினர்.
இப்படி சோர்வில் இருக்கும் திராவிடக் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை பா.ஜ., பக்கம் கொண்டு வருவதற்கு, அமித் ஷா உத்தரவிட்டார். அவர் உத்தரவை ஏற்று, தமிழக பா.ஜ.,வினர், திராவிடக் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்துப் பேசி, பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுத்தனர்.
மும்முரம்:
அந்த அடிப்படையில், கோவை மாவட்டம், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த, தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், தி.மு.க.,வில் இருந்து விலகி, அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய ஒப்புக் கொண்டுள்ளார். அதே போல, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஒருவரிடமும் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்களில் தகவல் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அந்த வட்டாரங்களில் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில் அதிருப்தி யில் இருப்பவர்களை, பா.ஜ., தரப்பில் பேசி முடித்துள்ளனர். அதில், 5,000 பேர் வரையில், வரும் 20ம் தேதி, அமித் ஷா தலைமையில், பா.ஜ.,வில் இணைய தயாராகி உள்ளனர். அதே மாதிரி, ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும், பலர் பா.ஜ.,வில் இணைய தயாராகி இருக்கின்றனர்.
அவர்களும், 20ம் தேதியே, கட்சியில் இணைந்தால், எண்ணிக்கை கூடுதலாக தான் இருக்கும். தொடர்ந்து, பல்வேறு கட்சிகளிலும், அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, பா.ஜ., பக்கம் அழைத்து வந்து கட்சியை பலப்படுத்த, அமித் ஷா போட்டிருக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க, பா.ஜ., தரப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.
வரும் 2016ல், தமிழ கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக, கட்சியை பல விதங்களிலும், பலப்படுத்தும் தீவிரத்தில், பா.ஜ.,வினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
திட்டம்:
இதற்காக, டில்லியில் பா.ஜ., உத்திகள் வகுக்கும் குழு, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பலவற்றை, வகுத்துக் கொடுத்துள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ., தலைவர்களையும், தொண்டர்களையும், தேர்தலை நோக்கி தீவிரப்படுத்தவும், வரும் 20ம் தேதி, தமிழகம் வருகிறார், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா. கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், 20ம் தேதி மாலையில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
இதற்கிடையில், தி.மு.க., உட்கட்சித் தேர்தலில், தமிழகம் முழுவதும் கட்சியினர் கோஷ்டி பூசலால் பாதிக்கப்பட்டு, கட்சித் தலைமை மீது, கடும் அதிருப்தியில் இருக்கும் தகவல், சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால், கட்சியில் ஏற்பட்டுள்ள தொய்வால் விரக்தியடைந்திருக்கும் அ.தி.மு.க.,வினர், லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின், கட்சித் தலைமை மீது, அதிருப்தியில் இருக்கும் தே.மு.தி.க., மற்றும் ம.தி.மு.க., தொண்டர்கள் ஆகியோரைப் பற்றியும், அமித் ஷாவுக்கு, தமிழகத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள், தொடர்ந்து தகவல் அனுப்பினர்.
இப்படி சோர்வில் இருக்கும் திராவிடக் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை பா.ஜ., பக்கம் கொண்டு வருவதற்கு, அமித் ஷா உத்தரவிட்டார். அவர் உத்தரவை ஏற்று, தமிழக பா.ஜ.,வினர், திராவிடக் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்துப் பேசி, பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுத்தனர்.
மும்முரம்:
அந்த அடிப்படையில், கோவை மாவட்டம், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த, தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், தி.மு.க.,வில் இருந்து விலகி, அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய ஒப்புக் கொண்டுள்ளார். அதே போல, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஒருவரிடமும் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்களில் தகவல் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அந்த வட்டாரங்களில் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில் அதிருப்தி யில் இருப்பவர்களை, பா.ஜ., தரப்பில் பேசி முடித்துள்ளனர். அதில், 5,000 பேர் வரையில், வரும் 20ம் தேதி, அமித் ஷா தலைமையில், பா.ஜ.,வில் இணைய தயாராகி உள்ளனர். அதே மாதிரி, ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும், பலர் பா.ஜ.,வில் இணைய தயாராகி இருக்கின்றனர்.
அவர்களும், 20ம் தேதியே, கட்சியில் இணைந்தால், எண்ணிக்கை கூடுதலாக தான் இருக்கும். தொடர்ந்து, பல்வேறு கட்சிகளிலும், அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, பா.ஜ., பக்கம் அழைத்து வந்து கட்சியை பலப்படுத்த, அமித் ஷா போட்டிருக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க, பா.ஜ., தரப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment