விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, December 21, 2014

    தமிழகம் முழுவதும் முன்அறிவிப்பு இல்லாமல் ரேஷனில் அரிசி குறைப்பு

    ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியின் அளவு திடீரென 10 கிலோ, 15 கிலோ என  குறைக்கப்பட்டுள்ளது. 

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் திடீரென்று ரேஷன் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல், பச்சை நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.  அதன்படி, ரேஷன் கடைகளில் 10 கிலோ புழுங்கல் அரிசியும், 10 கிலோ பச்சரியும் பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1  கோடியே 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இலவச அரிசி வாங்கி வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வரை பொதுமக்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் 20  கிலோ அரிசி இலவச வழங்கப்பட்டு வந்தது. 

    ஆனால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம்  வழங்கப்படும் அரிசியின் அளவு திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் ஒரு ரேஷன் கடையில் எத்தனை பேர் அரிசி வாங்கினார்கள்,  எத்தனை கிலோ அரிசி விற்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான அரிசி ரேஷன்  கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி விவரம் வெளியாகி உள்ளது. 

    குறிப்பாக கடந்த மாதம் அதிகம் பேர் ரேஷன் அரிசி வாங்கவில்லை. ஆனால், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருவதால்  ஏராளமான பொதுமக்கள் அரிசி வாங்க ரேஷன் கடைக்கு சென்றுள்ளனர். இதில் சிலருக்கு 15 கிலோவும், சிலருக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது.  

    அரசு குறிப்பிட்ட முழுமையான அளவு அரிசி கிடைக்காததால், பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இப்படி தகராறு  செய்பவர்களுக்கு மட்டும் சரியான அளவு அரிசி வழங்கப்படுகிறது. ஒன்றும் சொல்லாதவர்களிடம், அடுத்த மாதம் முதல் வாரமே வந்தால் 20 கிலோ அரிசி  தருகிறோம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பேசி திருப்பி அனுப்புகிறார்கள். 

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “ஒரு ரேஷன் கடைக்கு 1500  ரேஷன் கார்டு என்றால் ஒரு கார்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் மாதம் 300 மூட்டை அரிசி, அதாவது 30 ஆயிரம் கிலோ அரிசி ஒவ்வொரு மாதமும்  வழங்கப்படும். ஒரு மாதம் 250 மூட்டை விற்பனையானால், அடுத்த மாதம் ஸ்டாக் உள்ள 50 மூட்டையையும் சேர்த்து கூடுதலாக 250 மூட்டை என்று ஒவ்வொரு  மாதமும் 300 மூட்டை கணக்கு வைத்து அரிசி சப்ளை செய்யப்படும். 

    ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் 50 மூட்டை ஸ்டாக்கை கணக்கில் வைத்து கூடுதலாக 200 மூட்டை அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக  எல்லா ரேஷன் கடைகளிலும் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் அரிசி குறைவாக சப்ளை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிகம் பேர் அரிசி வாங்க  வருகிறார்கள். கடைசி இரண்டு வாரம் குறைந்த அளவே அரிசி ஸ்டாக் இருப்பதால், கடைசியாக ரேஷன் அரிசி வாங்க வருபவர்களுக்கு குறை வான அளவு  அரிசியே பொதுமக்களுக்கு வழங்க முடிகிறது“ என்றனர். 

    இதுகுறித்து சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் கேட்டபோது, “ரேஷன் அரிசிக்கு  வழங்கப்படும் மானியம் ஆண்டுதோறும் உயர்வதால், விநியோகத்தை குறைக்கவும், போலி கார்டுகளை கண்டுபிடித்து ரத்து செய்யவும் குடிமைப்பொருள்  வழங்கல் துறை கூட்டங்களில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் நடத்திய ஆய்வுகளில், ஒவ்வொரு மாதமும் 65 முதல்  75 சதவீத அரிசி மட்டும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது தெரியவருகிறது. அதனால் அரிசி சப்ளை வாய்மொழி உத்தரவு மூலம் குறைக்கப்பட்டுள்ளது“  என்றனர்.

    ரேஷன் கடைகளில் இலவச அரிசி ஒதுக்கீட்டை குறைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் விநியோகத்தை குறைக்க தமிழக அரசு மறைமுக  நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன் கூறும்போது, ‘‘கடந்த மாதம்  ரேஷன்கடை ஊழியர்கள் கார்டுதாரார்களுக்கு விநியோகம் செய்தததாக, 1 முதல் 3 சதவீதம் வரை கூடுதல் அரிசி வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  கடைகளில் கூடுதல் இருப்பு இருந்தால் தவறாக வெளிச்சந்தையில் விற்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் கடைகளுக்கு தேவையான அளவு மட்டும்  வழங்கப்படுகிறது. விநியோகத்தை பாதிக்கும் வகையில் எந்த ரேஷன் கடைக்கும் அரிசி அளவு குறைக்கப்படவில்லை’’ என்றார்.

    குறைவான அரிசி

    வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கலாவதி கூறியதாவது: மாதந்தோறும் அரசு அறிவித்தப்படி 20 கிலோ அரிசி வழங்கப்படுவதில்லை.  அதற்கு மாறாக வெறும் 15 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பருப்பு, பாய்மாயில் என பல பொருட்கள் கேட்டாலும் கொடுப்பதில்லை.  இது குறித்து ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டால் முறையாக எந்த பதிலும் கூறுவதில்லை. அரசு சார்பில் எங்களுக்காக ஒதுக்கப்படும்  பொருட்களை வழங்காமல் கொள்ளையடிப்பதிலேயே ஊழியர்கள் குறியாக இருக்கின்றனர் என்றார்.

    கோதுமை வழங்குவதில்லை

    கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த சண்முகம் கூறும் போது, நான் ஆட்டோ டிரைவர் பணியாற்றி வருகிறேன். 4 குழந்தைகள் உள்ளனர். இந்த  வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது சிரமமாக உள்ளது. எங்களை போன்ற ஏழை எளிய மக்களின் நலன் கருதி தான் அரசு 20 கிலோ இலவச அரிசி  தருகிறது. ஆனால் அது கூட எங்களுக்கு போதுமானதாக இல்லை. இருந்தாலும் வேறுவழியில்லாமல் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இந்த நிலையில்  திடீரென தற்போது 5 கிலோ அரிசி குறைவாக வழங்குகின்றனர். இது குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் அரசு தரப்பில் 15 கிலோ மட்டும் தர சொன்னதாக  தெரிவிக்கின்றனர். இந்த, மாதம் வெளியில் இருந்து தான் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாமாயில், சர்க்கரை, கோதுமை முறையாக  வழங்குவதில்லை என்றார்.

    தமிழகம் முழுவதும் 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. 1.75 கோடி அரிசி வாங்குவதற்கான கார்டு, 10.59 லட்சம் சர்க்கரை கார்டு, 62 ஆயிரத்து 354  போலீசாருக்கான காவலர் கார்டு, எந்த பொருளும் வாங்க கார்டு 61 ஆயிரத்து 453 என மொத்தம் 1.86 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. மாதந்தோறும் ரேஷன்  கடைகளில் விநியோகம் செய்வதற்காக, 3.16 லட்சம் டன் அரிசி, 35 ஆயிரம் டன் சர்க்கரை, 13 ஆயிரத்து 780 டன் கோதுமை, 11,530 டன் துவரம் பருப்பு, 8,240 டன்  உளுந்தம் பருப்பு தேவைப்படுகிறது.


    Posted by விழியே பேசு... at 10:06 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.