அனுஷ்காவுக்கு
சீக்கிரமே டும் டும் என்ற
தகவல் வந்ததிலிருந்து அவரை புதிய படங்களில்
ஒப்பந்தம் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்
தயாரிப்பாளர்கள். ருத்ரம்மாதேவி, பாஹுபலி என 2 படத்தில்
நடித்து முடிக்கவே சுமார் ஒன்றரை வருடத்துக்கும்
மேலாக அவர் செலவழித்துவிட்டார்.
இந்த படங்களால் மற்ற படங்களில் நடிக்க
அவரிடம் கால்ஷீட் வாங்குவதில் சிரமம் இருந்தது. ரஜினி
படம், அஜீத் படம் என்றதால்
லிங்கா, என்னை அறிந்தால் படங்களில்
நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்நிலையில் ‘பாக்மதி‘ என்ற தெலுங்கு படமொன்றில்
அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்தது.
தற்போது
அந்த பேச்சில் வேகம் குறைந்துவிட்டது. அனுஷ்காவுக்கு
பதிலாக அஞ்சலியை நடிக்க வைக்க இயக்குனர்
அசோக் எண்ணி உள்ளாராம். ஆனால்
இது இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில்
அஞ்சலியிடம் அனுஷ்காவை பற்றி பேசினால், ‘அவர்
சீனியர் நடிகை. நான் நடிக்கும்
வேடங்களுக்கு அவர் பொருத்தமாக இருக்க
மாட்டார். ஆனால் அவர் நடிக்கும்
வேடங்களுக்கு நான் பொருத்தமாக இருப்பேன்‘
என்கிறார்.
ஏற்கனவே
‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு' தெலுங்கு படத்தில்
தான் நடித்த சீத்தம்மா வேடத்திற்கு
அனுஷ்கா பொருத்தமாக இருந்திருக்க மாட்டார் என்று கூறும் அஞ்சலி,
‘ சீனியர் என்று குறிப்பிட்டது அவரது
வயதை குறிப்பதற்காக சொல்லவில்லை‘ என சமாளிக்கிறார்.
No comments:
Post a Comment