சிரஞ்சீவியின்
தம்பியும், ஆந்திராவின் பவர் ஸ்டாருமான பவன்
கல்யாணுக்கு ஏழடி உயரத்தில் சிலை
அமைக்கிறார் ஒரு ரசிகர்.
நடிகர்,
நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, சிலை
அமைப்பது என்று தங்களின் உச்சபட்ச
முட்டாள்தனத்தை ரசிகர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துவதுண்டு.
ஆந்திராவில்
உள்ள சந்துமோகன் (நல்ல பேருப்பா) பவன்
கல்யாணின் ரசிகர். அவரது கொள்கையை
எப்படி பரப்புவது என்று முட்டு சந்தில்
மண்டையை முட்டி யோசித்ததில் பளிச்சிட்டதுதான்
இந்த சிலை திட்டம்.
ஏழடி உயரத்தில் வெண்கலத்தில் பவன் கல்யாணுக்கு சிலை
வடிக்கும் வேலையை அவர் ஏற்கனவே
தொடங்கிவிட்டார். பவன் கல்யாணை வைத்தே
சிலையை திறக்க வேண்டும் என்பது
அவரது அவா.
பாராளுமன்ற
தேர்தலையொட்டி பவன் கல்யாண் ஜனசேனா
என்ற கட்சியை தொடங்கி பாரதீய
ஜனதாவுக்கும் அவர்களின் கூட்டணியான தெலுங்கு தேசத்துக்கும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment