பார்சிலோனா
விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிங்கங்கள்
நடமாடும் பகுதிக்குள் 45வயது
மதிக்கதக்க ஒருவரை சிங்கங்கள் நகங்களால்
பிராண்டியும் கடித்தும் காயப்படுத்தியதை அங்கிருப்பவர்கள் கண்டனர். உடனடியாக மீட்பு பணியாளர்கள் தண்ணீரை
பாய்ச்சி அவரை காப்பற்றினர். பின்னர்
அவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை கடித்து கொல்லும் எண்ணத்தில்
சிங்கங்கங்கள் அணுகவில்லை என்றும், விளையாடும் நோக்கத்தோடு பிராண்டியுள்ளது என விலங்கியல் பூங்காவை
சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எல் பயஸ் என்ற
அவர் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த தாழ்வான பகுதிக்கு ஏன் சென்றார் குதித்தாரா
அல்லது தவறி விழுந்தாரா என
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment