புதுடெல்லியில்
'உபேர்' கால் டாக்சி டிரைவரால்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், சம்பத்தையடுத்து தவறுதலாக டிரைவருக்கே 'நான் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டேன்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
சர்வதேச
வாடகை கார் புக்கிங் சேவை
நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின்
வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை
டெல்லியில் பயணம் செய்த 27 வயதான
இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணை,
‘‘இது குறித்து யாரிடமும் கூறாதே. அப்படிச்செய்தால் நீ
உயிருடன் இருக்க மாட்டாய்’’ என
வாலிபர் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், நேற்று முன்தினம்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அந்த
கார் டிரைவர் சிவகுமார் யாதவ்
(வயது 32) கைது செய்யப்பட்டு டெல்லிக்கு
கொண்டு செல்லப்பட்டார். அவர், ஏற்கனவே கடந்த
2011–ம் ஆண்டு மற்றொரு கற்பழிப்பு
வழக்கில் 7 மாதம் ஜெயிலில் இருந்தவர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே,
வாடகை கார் புக்கிங் சேவை
நிறுவனமான உபேருக்கு டெல்லி மாநில அரசு
தடை விதித்தது. அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை
அன்று சம்பவம் நடைபெற்றதை அடுத்து
உதவிக்கு 'நான் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டேன்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
மெசேஜ் தவறுதலாக டிரைவருக்கு சென்றது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட
பெண் இறுதியாக அழைக்கப்பட்ட எண்ணிற்கு மெசேஜ் சென்றுள்ளது. இதனையடுத்து,
டிரைவர் சிவகுமார் யாதவ் பெண்ணிற்கு அழைப்பு
விடுத்து உன்னை கண்காணித்து வருகிறேன்
என்று மிரட்டல் விடுத்துள்ளான் என்று தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட
பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்ததும்,
பீதி அடைந்த சிவகுமார் யாதவ்
உடனடியாக சொந்த ஊருக்கு செல்ல
முடிவு செய்துள்ளான். மேலும், தனது குடும்பத்துடன்
நேபாளத்திற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளான்.
ஆனால் சனிக்கிழமை அன்றே போலீசார் அவனை
கைது செய்தனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment