ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் இன்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் கலைஞரைப்பற்றி பேச முற்பட்டார்.
அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், ’’டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன்’’ என்று சொல்லிவிட்டு கொடுக்கம்பத்தை பிடிங்கிக்கொண்டு ஓடிவந்தார்.
உடனே அதிமுகவினர் சிங்கமுத்துவை சூழ்ந்துகொண்டனர். பின்னர் சிங்கமுத்துவை பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வன் பதிலுக்கு தாக்கினார்.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment