பிளஸ்டூ தேர்வில் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 86.7 சதவீதமாகும்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 86.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில்தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 89.7 சதவீத மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.2 சதவீதமாகும்.
அதிக அளவில் தேர்ச்சி அடைந்ததோடு இல்லாமல், முதல் 3 இடங்களிலும் மாணவிகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. முதலிடத்தை நாமக்கல் மாணவி சுஷ்மிதா பிடித்துள்ளார்.
2வது இடத்தில் கார்த்திகா என்ற மாணவி உள்ளார். 3வது இடத்தை இரண்டு மாணவிகள் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment