ஸ்பெக்ட்ரம் ஊழலில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டிற்கு வெளியே, ராஜா ஆதரவாளர்கள் தி.மு.க., கொடியுடன் கோஷமிட்டனர். கருணாநிதி மற்றும் ராஜாவைத் தவிர, மற்ற வேறு யாருடைய பெயரும், இந்த பாராட்டு கோஷத்தில் சொல்லப்படவில்லை. சிறையிலிருந்து, ராஜா வீட்டிற்கு வந்ததும் கொடுக்கப்பட்ட வரவேற்பு, சொல்லி மாளாது. ஏதோ நாட்டிற்காக, பெரும் போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்புவது போல, ராஜாவிற்கு வரவேற்பு. டில்லி திருமணங்களில் பயன்படுத்தப்படும் மேள தாளங்கள் முழங்க, ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடித்துக் கொண்டேயிருக்க, வாண வேடிக்கைகள் வேறு! ராஜாவை சந்திக்க வந்த, தி.மு.க., எம்.பி.,க்களும், மற்ற தலைவர்களும் இந்த வரவேற்பைக் கண்டு முகம் சுளித்தனர். "ராஜாவிற்கு கிடைத்திருப்பது வெறும் ஜாமின். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துவிட்டது போல கொண்டாடுகின்றனரே' என, எம்.பி.,க்கள் வருத்தப்பட்டனர். "நம் ஊரில் என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம், டில்லியில் அமுக்கி வாசிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்கள், "டிவி'யில் காட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நீதிபதி பார்த்தால் என்ன நினைப்பார்' என்கின்றனர். வழக்கு தீர்ப்பு வரும் வரை, வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது தான், ராஜாவிற்கும் நல்லது, தி.மு.க.,விற்கும் நல்லது என்கின்றனர், சில தி.மு.க., தலைவர்கள்.
ராகுலுக்காக காத்திருக்கும் மோடி:
ஒவ்வொருவருக்கும், ஒரு ராசி உண்டு. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தனி ராசி. அவர் எங்கு போனாலும், பலத்த வரவேற்பு. பத்திரிகை, "டிவி'களில் தலைப்புச் செய்தி வரும். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் ஊற்றி கொண்டு விடும். இது தான் ராகுல் ராசி. இந்தாண்டு இறுதியில், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரத்திற்கு எப்போது ராகுல் வருவார் என, ஆவலோடு காத்திருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. லோக்கல் கட்சிக்காரர்களின் கருத்தைக் கேட்காமல், காங்கிரஸ் டில்லி மேலிடம் தன் இஷ்டப்படி செயல்படுவது வழக்கம். குஜராத் தேர்தலில், மேலிடம் எச்சரிக்கையாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் குஜராத் காங்கிரசார். குஜராத்தில், கோத்ரா விவகாரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, டில்லி காங்கிரசார் அதிகம் பேச வேண்டாம். அப்படி பேச, பேச அது மோடிக்கு சாதகமாக ஆகிவிடும். சென்ற பார்லிமென்ட் தேர்தலிலும், அப்படித்தான் நடந்தது என்று குஜராத் காங்கிரார், டில்லி தலைவர்களிடம் சொல்லி வருகின்றனர். ஆனால், மோடியோ அமைதியாக தன் பிரசாரத்தை ஏற்கனவே துவங்கி விட்டார். குஜராத்தில் மற்ற மாநிலத்தவர் எங்கெங்கு உள்ளனரோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து வந்து, வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் மோடி. ஆந்திர மாநிலத்தவர் அதிகம் உள்ள சூரத் நகரில், பா.ஜ.,வின் ஆந்திர தலைவர்களை அழைத்து வந்து, தெலுங்கிலேயே பேச வைத்து, பா.ஜ.,விற்கு சாதகமாக பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் மோடி.பீகார் வாசிகள் அதிகம் உள்ள தொகுதிகளுக்கு, பீகார் பா.ஜ., தலைவர்களை வரவழைத்து, பிரசாரம் செய்ய உள்ளார் மோடி.
நம்ம கன்னி (கழியா)மொழி அக்காவ இதவிட சிறப்பா வரவேற்கணும்ன்னுதானே கலீஞரும்,அவரு சின்ன் வீடும் எல்லாருக்கும் உத்தரவு போட்டாங்க.....அவங்க என்னா நாட்ட காப்பாத்தவா உள்ள போனாங்க......கொள்ளையடிச்சதுல பங்கு வாங்குனாங்க..உள்ளாற போனாங்க....இதுக்குபோயி ரொம்பத்தான்.......எல்லாம் அந்த ராசாத்தி........
ReplyDelete